search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மடத்துக்குளம் அருகே  மரத்தின் கிளைகள் விழுந்ததால் உடைந்த மின் கம்பம்
    X

    கிளை விழுந்ததில் சேதமடைந்த மின்கம்பம்

    மடத்துக்குளம் அருகே மரத்தின் கிளைகள் விழுந்ததால் உடைந்த மின் கம்பம்

    • மரத்தை வெட்டும் பணிகள் நடைபெற்றது.
    • மின்சார கம்பிகள் மீது விழுந்தது.

    உடுமலை :

    மடத்துக்குளத்தை அடுத்த நரசிங்கபுரம் பகுதியில் தனியார் இடத்தில் கட்டுமான பணிகளுக்கு இடையூறாக இருந்த மரத்தை வெட்டும் பணிகள் நடைபெற்றது. பிரமாண்டமாக வளர்ந்து இருந்த வேப்ப மரத்தின் கிளைகள் மின்சார வாள் மூலம் அறுக்கும் பணியில் தொழிலாளர் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக வெட்டப்பட்ட பெரிய மரக்கிளை ஒன்று அருகில் சென்ற மின்சார கம்பிகள் மீது விழுந்தது. கிளையின் எடை அதிகமாக இருந்ததால் பாரம் தாங்காமல் அருகில் உள்ள மின்கம்பம் உடைந்து நரசிங்காபுரத்திலிருந்து கருப்புசாமி புதூர் செல்லும் சாலையின் குறுக்கே விழுந்தது. மேலும் சாலை ஓரத்தில் இருந்த இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து சேதமடைந்தது. இதையடுத்து மரத்தை வெட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. மின்கம்பம் விழுந்த போது சாலையில் யாரும் செல்லாததாலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்பட்டு இருந்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.விபத்து என்ற வகையில் சேதமடைந்த மின்கம்பங்களுக்கான செலவினங்களை மின்வாரியத்திற்கு செலுத்த சம்பந்தப்பட்ட நபர் ஒத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    தகவல் தெரிவித்து உடனே மின் கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் மரங்களை வெட்டும்போது உரிய அனுமதி பெற்று பாதுகாப்பான முறையில் வெட்ட வேண்டும் என மின்வாரியத்தினர் வலியுறுத்தினர்.

    Next Story
    ×