search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "education"

    • மானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது.
    • முடிவில் பட்டதாரி ஆசிரியர் நீராத்திலிங்கம் நன்றி கூறினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மானூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெகதா தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் மங்களம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவ-மாணவிகள் சார்பில் பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது. விழாவில் மாணவ-மாணவிகளின் ஒயிலாட்டம், கோலாட்டம் மேளதாள நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் பட்டதாரி ஆசிரியர் நீராத்திலிங்கம் நன்றி கூறினார்.

    • கல்விக்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எட்வர்டு மேல்நிலை பள்ளியில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் முன்னிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4,626 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விதமாக 1,739 மாணவர்க ளுக்கு மிதிவண்டிகள் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் தமிழகத்தின் அனைத்து தரப்பு மாணவ-மாணவி களும் முழுமையாக கல்வி பெற்று பயன்பெற வேண்டும் என்ற அடிப்ப டையில், கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

    அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2023-24-ம் நிதியாண்டில் 7,699 மாண வர்களுக்கும், 9,982 மாணவி களுக்கும் என மொத்த 17,681 மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதில், அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1207 மாணவர்கள், 1378 மாணவிகள், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 850 மாணவர்கள், 1191 மாணவிகள் என 4626 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், சாத்தூர் கோட்டாட்சியர் சிவக்குமார், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) முத்துக்கழுவன், நகர்மன்றத் தலைவர்கள் சுந்தரலட்சுமி (அருப்புக்கோட்டை), குருசாமி(சாத்தூர்), ஊராட்சி ஒன்றிக்குழுத்தலைவர்கள் சசிகலா(அருப்புக்கோட்டை), நிர்மலா கடற்கரைராஜ்(சாத்தூர்) உள்பட பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிகள், மாணவர்கள் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது.
    • கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள்.

    நாம் பயின்ற பள்ளிகளுக்கும், இப்போது இயங்கும் பள்ளிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகளை திட்டக்கூடாது, துன்புறுத்தக்கூடாது... என்பது போன்ற பல்வேறு அரசு வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கிறது. இவை வருங்காலத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், மாண்டிசோரி கல்வி முறையே எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்கும். மேலும் பெற்றோர்களின் கவனமும் மாண்டிசோரி பள்ளிகள் மீது பதிந்திருக்கிறது.

    இந்த காலத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், போட்டி நிறைந்த சமூகத்தை சமாளிக்கும் வகையில் வளர, படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். பெற்றோர் இருவருமே பணிக்கு செல்வதால், பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு பிள்ளைகள் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே செய்து கொள்ளும்படியாக வளர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

    சமூக பொறுப்புகளையும், சமூக ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறார்கள். இவை அனைத்தும்தான் மாண்டிசோரி கல்வி முறையின் தூண்கள் என்பதால்... பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை மாண்டிசோரி பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு. கற்று கொள்வதற்கு நேர வரைமுறை கிடையாது. இரு வழி உரையாடல். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும். ஆனால் மாண்டிசேரி கல்வி முறையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.

    தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது. ஒழுக்க விதிகள் திணிக்கப்படாமல் படிப்படியாகக் கற்று கொடுக்கப்படுகின்றன. எந்தப் பொருளையும் தொட்டு பார்க்க வேண்டும், கவனமாக எடுக்க வேண்டும், திரும்ப கவனமாக கையாண்டு அதே இடத்திலேயே வைக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், அமைதி காக்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

    • பி.எட்., படிப்பு 2023-25ம் ஆண்டு சேர்க்கைக்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
    • குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்விமுறையில் பி.எட்., படிப்பு 2023-25ம் ஆண்டு சேர்க்கைக்கான, விண்ணப்ப படிவம் ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.சேர்க்கை செயல்பாடுகள் அரசு மதிப்பெண் மற்றும் இனசுழற்சி அடிப்படையில் நடைபெறும்.இரண்டாண்டு, ஆசிரியர் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.

    2 ஆண்டுகள் முழு நேரம் தற்காலிகம் அல்லது நிரந்தர அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில்,ஆசிரியராக பணியாற்றி இருக்கவேண்டும்.இன வாரியாக பட்டப்படிப்பில், குறைந்தபட்சம் 40 முதல் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    கல்லூரி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க இயலாது.

    மேலும் விபரங்களை, https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.விண்ணப்பங்களை அக்டோபர் 5-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு கல்வி பயன்பட வேண்டும்.
    • புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    இந்தியாவில் 12-ம் வகுப்பு முடித்து, கல்லூரியில் சேருபவரின் எண்ணிக்கை 3-ல் 1 பங்காக உள்ளது. இதில் உயர்கல்வி பயிலும் பெண்கள் எண்ணிக்கை 25 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆனால், உயர்கல்விக்கு சேரும் மாணவர்களின் எண்ணிக்கையில் 52 விழுக்காடு பெற்று இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது.

    கல்லூரி என்பது பட்டம் பெறுவதற்கான இடம் மட்டுமல்ல. அந்த கல்வியோடு, சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு செயல்கள் குறித்தும் கண்காணிப்பது, அது குறித்து ஒரு தீர்க்கமான பார்வை கொண்டிருப்பது உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுப்பதுதான் கல்லூரி.

    அந்த கல்வியை முறையாக பயில்வதன் மூலம் ஒரு முழுமைபெற்ற, சமூகத்தில் ஒரு பொறுப்பு மிக்க பெண்ணாக உருமாற்றம் பெற்று, உங்களை காத்துக் கொள்வதற்கும், சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கும், உங்களை சார்ந்த குடும்பத்தை பாதுகாப்பதற்கும் உங்கள் கல்வி பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர்(பொ) தங்கலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) சிக்கந்தர் பீவி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பிரியதர்ஷினி, கல்லூரி முதல்வர் முனைவர் உஷா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது.
    • ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு.

    மாண்டிசேரி எனப்படும் மழலை ஆசிரியர் பயிற்சி பற்றியும், இதன் முக்கியத்துவம் பற்றியும் சென்னையை சேர்ந்த அன்ன ஸ்டெபி விளக்குகிறார்.

    * மாண்டிசேரி கல்வி முறை

    மரியா மாண்டிசேரி என்பவர் கண்டுபிடித்த அற்புதமான கல்விமுறைதான் மாண்டிசேரி கல்வி முறை. சரியான பொருட்களை கொண்டு தானே கற்றல் முறையையும், கற்று கொள்ளலில் ஆர்வத்தையும் தூண்டுவதே மாண்டிசேரி பள்ளி மற்றும் மாண்டிசேரி ஆசிரியர்களின் நோக்கம். இது சமீபகாலமாக டிரெண்டிங்கில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி முறை. வெகுசுலபமாகவே, கற்றுக்கொள்ள முடியும்.

    * மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி

    10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் இளங்கலை படிப்பு முடித்தவர்கள் வரை மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெற முடியும். 10-ம் வகுப்பு படித்தவர்கள், டிப்ளமோ இன் மாண்டிசேரி பயிற்சியும், பிளஸ்-2 படித்தவர்கள், அட்வாண்ஸ்ட் மாண்டிசேரி படிப்பும் படிக்கலாம். இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெற விரும்புபவர்கள் அடிப்படை மற்றும் அட்வாண்ஸ்ட் பயிற்சிகளை பெற்று, ஆசிரியர் தகுதி பெறலாம்.

    * மாண்டிசேரி ஆசிரியர் பணி

    நன்கு வளர்ந்த குழந்தைகளை கையாள்வதை விட, மழலைகளை கையாள்வது கொஞ்சம் கடினமானது. சவாலானது. வழக்கத்தை விட நிதானமும், பொறுமையும் அவசியம். இதோடு, தினந்தோறும் புதிது புதிதாக கற்றுக்கொண்டு குழந்தைகளை வழிநடந்த முடியும் என்று எண்ணுபவர்கள், மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பெறலாம்.

    * வேலைவாய்ப்பு

    நகர்ப்புறங்களில் மாண்டிசேரி பள்ளிகள் அதிகமாகவே தென்படுகின்றன. 'பிளே ஸ்கூல்' போன்றவற்றிலும், மாண்டிசேரி பயிற்சி முடித்திருக்கும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், இயல்பான ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், மாண்டிசேரி பயிற்சியின் மூலம் அவர்களது திறனையும், அவர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் வளர்த்துக் கொள்கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில், மாண்டிசேரி பயிற்சி முடித்த மாணவ-மாணவிகளுக்கு நிறைய வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.

    * எப்படி வேறுபடுகிறது?

    வழக்கமான பள்ளிகளில் ஆசிரியர் முதன்மையாக இருப்பார். அவர் சொல்வதை கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு மாண்டிசேரி கல்விமுறையில் குழந்தைகள் முதன்மையாக இருப்பர். ஆசிரியர் பின்னணியில் இருந்து அவர்களை வழிநடத்துவார். இதில் மனப்பாட முறை கிடையாது. யோசனை செய்து பதில் அளிக்க வேண்டும். நன்றாக கவனித்து (Observe) தானே கற்று கொள்வதால் ஆழ் மனதில் (subconscious) பதியும். கரும்பலகை முறை கிடையாது. பார்த்து எழுதும் முறையும் கிடையாது. எல்லாமே செயல்முறை கல்வியாகவே கற்றுக்கொடுக்கப்படும்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை இதில் உண்டு. கற்று கொள்வதற்கு நேர வரைமுறை கிடையாது. இரு வழி உரையாடல். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும். ஆனால் மாண்டிசேரி கல்வி முறையில் குழந்தைகளின் கேள்விகளுக்கு கட்டாயம் பதில் சொல்ல வேண்டும். தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது.

    ஒழுக்க விதிகள் திணிக்கப்படாமல் படிப்படியாகக் கற்று கொடுக்கப்படுகின்றன.

    எந்தப் பொருளையும் தொட்டு பார்க்க வேண்டும், கவனமாக எடுக்க வேண்டும், திரும்ப கவனமாக கையாண்டு அதே இடத்திலேயே வைக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், அமைதி காக்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

    வீட்டுக்கு சென்றால் தாயுடன் நேரம் செலவழிக்க, வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள். இப்படி பொதுவான கல்வி முறைக்கும், மாண்டிசேரி கல்வி முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அதேபோல, இவை அனைத்தையும் கையாள்வதிலும் சிரமங்கள் உண்டு.

    * சிறந்த பயிற்சி

    இப்போது மாண்டிசேரி ஆசிரியர் பயிற்சி பல இடங்களில் வழங்கப்படுகிறது. ஆனால் அங்கீகாரம் பெற்ற, முன் அனுபவம் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெறுவது, திறமையை வளர்த்து கொள்ளவும், சுலபமான பணிவாய்ப்பு பெறவும் வழிவகுக்கும்.

    * கட்டணம்

    பயிற்சி நிறுவனங்களுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும். அதிகபட்சம், ரூ.20 ஆயிரத்திற்குள், ஒரு வருடத்திற்குள் பயிற்சியை முடித்துவிடலாம்.

    • பிளஸ்-2 முடித்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர சிறப்பு முகாம்கள் நடந்தது.
    • வருகிற 4-ந்தேதி சிவகாசி யிலும், 8-ந்தேதி சாத்தூரிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ- மாணவிகளுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார் தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்து முகாமின் மூலம் பயன்பெற்ற 11 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வ தற்கான ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    நமது விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7,575 மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். அதில் 7226 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 4,421 பேர் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

    இதில் 3,332 பேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி களிலும், 595 பேர் பொறி யியல் கல்லூரிகளிலும், 48 பேர் மருத்துவக் கல்லூரி களிலும் சேர விண்ணப் பித்துள்ளனர்.

    உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 2,805 மாணவ-மாணவிகளை கண்டறிந்து, அவர்களை மேல் படிப்பில் சேர்ப்ப தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தற்போது 586 மாணவர்கள் மேல் படிப்பில் சேராமல் உள்ளனர்.

    அவர்களும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் வகையில், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி மற்றும் திருச்சுழி பகுதிகளில், இதுவரை கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 202 மாணவ- மாணவிகளை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று நடந்தது.

    இதன் தொடர்ச்சியாக வருகிற 4-ந்தேதி சிவகாசி யிலும், 8-ந்தேதி சாத்தூரிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    தமிழக அரசு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணாக்கர்களை சேர்ப்பதற்கு அனுமதியும், மாணவர்கள் சேர்க்கைக்கான கால நீட்டிப்பும் செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை அருகே உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடக்கிறது.
    • வருகிற 7-ந்தேதி அன்று உசிலம்பட்டியிலும், 8-ந்தேதி திருமங்கலத்திலும் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூர் அரசுக் கலைக் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "உயர்வுக்குப் படி" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமை தாங்கி பேசியதாவது:-

    தமிழக அரசு மாணவ- மாணவிகளின் நலனை கருத்திற்கொண்டு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்2 படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர்களுக்கு "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இம்முகாமில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லுாரிகளில் விண்ணப்பித்தல், சேர்க்கை, கல்விக் கடன் உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச்சான்று மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட சேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்கள், திறன்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதலையும் கல்லுாரிக்கான சேர்க்கை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இம்முகாமின் தொடர்ச்சியாக 03.07.2023-அன்று மதுரையிலும், வருகிற 7-ந்தேதி அன்று உசிலம்பட்டியிலும் மற்றும் 8-ந்தேதி ்ன்று திருமங்கலத்திலும் நடைபெறவுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சரவணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் டாக்டர் சண்முகசுந்தர் , மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரிதோஷ் பாத்திமா, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியானது நாளை மறுநாள் வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
    • போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்கள் போன்றவை நிகழ்ச்சியில் விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளது

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டங்களிலும் "உயர்வுக்கு படி" என்னும் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    நெல்லை மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியானது நாளை மறுநாள்(செவ்வாய்க் கிழமை) வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியிலும், அடுத்த மாதம் 4-ந்தேதி சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டல், உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் உள்ள படிப்புகள், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணம், உயர்கல்வியில் சேருவதற்கு வங்கிகளால் வழங்கப்படும் கல்விக் கடன்கள், அதற்கு தேவையான ஆவணங்கள், படிப்பு முடித்த பின்னர் அரசு பணியில் சேருவத ற்கான போட்டித் தேர்வு களும், அதனை அணுகும் முறை மற்றும் அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்கள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

    மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் குறுகிய கால திறன் பயிற்சி, கல்லூரி கனவு சிற்றேடுகள் சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் சமூக நலப் பாதுகாப்புத் திட்ட ங்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் பழங்குடி யினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் உதவித்தொகை திட்டங்கள், இட ஒதுக்கீடு, மாணவர்க ளுக்கான இலவச விடுதி வசதிகள் போன்ற தகவல் களும், ஆலோ சனைகளும் வழங்கப்பட உள்ளது. மாண வர்களும், பெற்றோர்களும் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழ்நாடு முழுவதும் அதிகளவிலான ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன.
    • டாக்டர்கள் பங்கேற்று பல்நேக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் இன்று பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் 100 இடங்களில் நடைபெற்றது. விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன், விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தி னராக பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது,

    விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய 2 இடங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் தான் தமிழ்நாடு முழுவதும் அதிகளவிலான ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டன.  தற்போதய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கியுள்ள இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் ஆகிய திட்டங்கள் தமிழ்நாடு அரசின் இரு கண்களாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த கோப்பு கவர்னரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓப்புதல் கிடைத்தவுடன் தமிழ்நாட்டில் சித்த மருத்துவக் கல்லூரி விரைவில் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    பல்வேறு பிரிவுகளை சேர்ந்த டாக்டர்கள் பங்கேற்று பல்நேக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற பொது மக்களுக்கு சிகிச்சை வழங்கினர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், நகரமன்ற துணைத் தலைவர் சித்திக் அலி, கோலியனூர் ஒன்றிய தலைவர் சச்சிதானந்தம், ஆலந்தூர் ஊராட்சி தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • பள்ளி குழந்தைகள் செல்போன் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.
    • பெண்கள் தங்களை பாதுகாப்பதற்கு தற்காப்பிற்கு ஏதுவான திறன்களை வளர்த்து கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசி ன்தா மார்டின் வழிகாட்டு தலின் படி பள்ளி மாணவிகளுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகா மானது தஞ்சாவூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலா ளரும் சார்பு நீதிபதியுமான இந்திரா காந்தி தலைமையில் நடைபெற்றது.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் எந்தவொரு பிரச்ச னைகளையும் ஆசிரியர்களிடமோ அல்லது பெற்றோ ர்களிடமோ தயங்காமல் கூற வேண்டும்.

    பள்ளி குழந்தைகள் செல்போன் உபயோகிப்பதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் செல்போ ன்களின் மூலமாக தான் பல பிரச்சனைகள் வருகின்றன.

    எனவே பெண்களுக்கு செல்போன்கள் தான் முதல் எதிரி. பெண் கல்விதான் நாளைய சமுதாயத்தை உருவாக்கும். பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

    பெண்கள் தங்களை பாதுகாப்பதற்கு தற்காப்பிற்கு ஏதுவான திறன்களை வளர்த்து கொள்ளுதல் மிகவும் முக்கியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ரா, உடற்கல்வி இயக்குனர் தேன்மதி, வழக்கறிஞர் சாந்தா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இம்முகாமிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் சட்டத் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு
    • விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2022 - 23 ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார். பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு எச்.சி.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற பிட்ஸ் பிலானி கல்லூரியில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டரிங், டிசைனிங்) பட்டப் படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பி.சி.ஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக் கழகத்தில் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம். பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் மேனேஜ்மெண்ட் சேர்ந்து படிக்க வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராகவும், 2022 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் 60 சதவீதமும், 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எச்.சி.எல். மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இந் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்புக்கான செலவுகளை தாட்கோ ஏற்கும். இத் திட்டத்தில் ஆண்டு ஊதியமாக ரூ. 1.70 லட்சம் முதல் ரூ. 2.20 லட்சம் வரையிலும், திறமைக்கேற்றவாறு பதவி உயர்வு அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப் பயிற்சியில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    ×