search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு
    X

    வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு

    • பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்பு
    • விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் 2022 - 23 ம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார். பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவருக்கு எச்.சி.எல். நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற பிட்ஸ் பிலானி கல்லூரியில் (பி.எஸ்.சி கம்ப்யூட்டரிங், டிசைனிங்) பட்டப் படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் பி.சி.ஏ பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைக் கழகத்தில் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.காம் மற்றும் நாக்பூரிலுள்ள ஐ.ஐ.எம். பல்கலைக் கழகத்தில் இன்டர்நெட் மேனேஜ்மெண்ட் சேர்ந்து படிக்க வாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவராகவும், 2022 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் 60 சதவீதமும், 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எச்.சி.எல். மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இந் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். இப்படிப்புக்கான செலவுகளை தாட்கோ ஏற்கும். இத் திட்டத்தில் ஆண்டு ஊதியமாக ரூ. 1.70 லட்சம் முதல் ரூ. 2.20 லட்சம் வரையிலும், திறமைக்கேற்றவாறு பதவி உயர்வு அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப் பயிற்சியில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    Next Story
    ×