search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EC"

    • சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறினால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவும், அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து விட்டது.

    இதனால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்துவிட்டதாகவே கருதுகிறார்கள்.

    ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் விடவில்லை. தர்மம் வெல்லும் என்று மீண்டும் தர்மயுத்தம் நடத்துவேன் என்று அறிவித்துள்ளார்.

    பொதுக்குழு செல்லும் என்று கோர்ட்டு அறிவித்தாலும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக உரிமையியல் கோர்ட்டில் முறையிடலாம். தேர்தல் ஆணையத்தையும் அணுகலாம் என்று தெரிவித்துள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நம்புகின்றனர்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதாவது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்த போது எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே இருப்பதாக தெரிவித்து இருந்தது.

    இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், "உரிமையியல் கோர்ட்டில் சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சட்ட விதிகளில் எந்த திருத்தமும் செய்யக்கூடாது. திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் அது நீதிக்கு அப்பாற்பட்டது. எனது சட்டப்பூர்வமான உரிமையை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்று தனது பொறுப்புகளையும் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தை அணுக தீர்மானித்துள்ளார். ஈரோடு தேர்தல் முடிந்ததும் அவர்கள் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    இந்த சூழலில் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்பதே அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறினால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும்.

    அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொண்டால் ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருந்த சிறு நம்பிக்கையும் தகர்ந்து விடும்.

    எனவே என்ன சொல்லப் போகிறது தேர்தல் ஆணையம் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரையும் தாண்டி எல்லா தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

    • வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம்.
    • கிட்டத்தட்ட 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் கடந்த 3-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்லில் முறைகேடு நடப்பதாக புகார் அளித்தார்.

    இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் நேற்று அவர் மீண்டும் அதுபோன்ற புகார் மனுவை சமர்ப்பித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் முறைகேடு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் செய்தோம். அப்போது 238 வாக்குச்சாவடிகளிலும் ஆய்வு செய்தீர்களா? என கேட்டிருந்தனர். அதன்படி நாங்கள் பூத் வாரியாக சரிபார்த்தோம். அப்போது 30,056 பேர் உரிய முகவரியில் இல்லை. இறந்துபோன 7,947 பேர் இடம்பெற்று இருந்தனர். 1,009 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெற்று இருந்தனர்.

    இப்படி கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர்கள், அதாவது 20 சதவீத வாக்காளர்களின் பெயர் முறைகேடாக இடம்பெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து விட்டோம். தற்போது இங்கும் தந்திருக்கிறோம். தற்போது அளித்துள்ள புகாருக்கு தேர்தல் கமிஷன் பதில் தருவதைப் பார்த்து அடுத்தகட்ட நடவடிக்கையை எடுப்போம்.

    தற்போது எதிர்க்கட்சிகள் அங்கு வாக்கு சேகரிக்க முடியாத நிலையை ஆளுங்கட்சி ஏற்படுத்தி உள்ளது. தற்போதுள்ள தேர்தல் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும். பாதுகாப்பு, மத்திய காவல்படையினர் கையில் வரவேண்டும் என தெரிவித்தார்.

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் திருவிழா களைகட்டியது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

    இந்நிலையில், தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடித்திட ஒரு பொது பார்வையாளர், ஒரு காவல் பார்வையாளர் என 2 தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.

    பொது பார்வையாளராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் வரும் 7-ம் தேதி முதல் மார்ச் மாதம் 2-ம் தேதி வரை அங்கு பணியில் இருப்பார்.

    காவல் பார்வையாளராக ஆந்திராவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி சுரேஷ்குமார் சாதிவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் வரும் 7-ம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் நாளான 27-ம் தேதி வரை தேர்தல் காவல்பணியில் இருப்பார்.

    இதேபோல தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயகுமார் ஜெயராமன் அருணாசல பிரதேச இடைத்தேர்தலுக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி இ.ரவீந்திரன் மேற்குவங்காள இடைத்தேர்தலுக்கும் பொது பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • ஒடிசா உள்பட 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும்.

    புதுடெல்லி:

    ஐந்து மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தஉள்ளது.

    ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும்.

    இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நவம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 21-ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • தேர்தல் ஆணையம் சிவ சேனாவின் பெயர் மற்றும் அக்கட்சியின் வில், அம்பு சின்னத்தை முடக்கியது.
    • ஏக்நாத் ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயர் ஒதுக்கப்பட்டுள்ளது

    மும்பை:

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை முடக்கியது.

    மேலும் 2 தரப்பினரும் வேறு பெயர், சின்னத்துடன் செயல்பட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதில் அவர்கள் கடாயுதம், முரசு, வாள் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்ப்பித்தது. இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயரை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், ஷிண்டே அணியினர் கோரிய 3 சின்னங்களையும் நிராகரித்தது. புதிய சின்னங்களின் பட்டியலை அளிக்கும்படி கோரியது.

    அதன்படி சின்னம் தொடர்பாக விருப்ப சின்னங்களின் புதிய பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது. அரசமரம், வாள், சூரியன் ஆகிய 3 சின்னங்களை விருப்பமாக கோரி தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி முறையிட்டிருந்தது. இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இரட்டை வாள் மற்றும் கேடயத்தை சின்னமாக ஒதுக்கி உத்தரவிட்டது.

    • அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • ஷிண்டே அணியினர் கோரிய சின்னங்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார்.

    இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை முடக்கியது. மேலும் 2 தரப்பினரும் வேறு பெயர், சின்னத்துடன் செயல்பட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    ஷிண்டே தரப்பினரும் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கைவிடுத்து உள்ளனர். இதில் அவர்கள் கடாயுதம், முரசு, வாள் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்ப்பித்துள்ளது.

    இந்நிலையில், ஷிண்டே அணிக்கு பாலா சாகேப் சிவசேனா என்ற பெயரை ஒதுக்கிய தேர்தல் ஆணையம், ஷிண்டே அணியினர் கோரிய 3 சின்னங்களையும் இன்று நிராகரித்தது. மேலும் நாளை புதிய சின்னங்களின் பட்டியலை அளிக்கும்படி கோரியுள்ளது.

    • அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
    • உத்தவ் தாக்கரே அணியினருக்கு தீப்பந்தம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிர மாநிலத்தில் பலமான கட்சிகளில் ஒன்றான சிவசேனா கடந்த ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. தற்போது அந்தக் கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது. ஏக்நாத் ஷிண்டே வசம் பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். உத்தவ் தாக்கரேவிடம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இதற்கிடையே அடுத்த மாதம் 3-ம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கேவின் மனைவி போட்டியிடுகிறார்.

    இந்த இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு வில்,அம்பு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை முடக்கியது. மேலும் 2 தரப்பினரும் வேறு பெயர், சின்னத்துடன் செயல்பட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, உத்தவ் தாக்கரே அணியினர் தீப்பந்தம், திரிசூலம், உதயசூரியன் ஆகிய 3-ல் ஒரு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கேட்டு இருந்தனர். இதேபோல சிவசேனா பாலாசாகேப் பிரபோந்த்கர் தாக்கரே, சிவசேனா பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே ஆகிய பெயர்களில் ஒன்றை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து இருந்தனர்.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே அணியினருக்கு தீப்பந்தம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும், சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரையும் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

    • மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் நெருக்கடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டன.
    • உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த அரசியல் குழப்பத்தில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, பா.ஜ.க. ஆதரவுடன் சிவசேனா அதிருப்தி அணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க முடிவு விவகாரம், சபாநாயகர், கவர்னரின் அதிகாரங்கள் தொடர்பாக உத்தவ் தாக்கரே மற்றும் ஷிண்டே அணியினர் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மேலும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்றும், இதனால் கட்சியின் வில் அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஷிண்டே அணி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுக்கள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஷிண்டே தரப்பில் ஆஜரான வக்கீல், மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது விரைந்து முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவை கோர்ட்டு கட்டுப்படுத்தாது என்றார்.

    இதையடுத்து கட்சி சின்ன பிரச்சினையில் உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனு மீது வரும் 27-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.

    இந்நிலையில், இந்த மனுமீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், உண்மையான சிவசேனா மற்றும் கட்சியின் வில், அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற ஷிண்டே அணியின் முறையீட்டை ஏற்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதல் அளித்தது.

    மேலும், ஷிண்டே அணி தேர்தல் கமிஷனில் முறையிட்டதை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    • வாக்குப் பெட்டிகள் மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் வைக்கப்படும்.
    • தேர்தல் நிறைவு பெறும் வரை, நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.

    குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    உதவி தேர்தல் அதிகாரிகளிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் முழுமையாக நிறைவு பெறும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றார். வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் ஆகியவற்றை கொண்டு வருதல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்தார்.

    இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், சிறப்பு பேனா மற்றும் சீலிடப்பட்ட தேர்தல் பொருட்கள் டெல்லி, புதுச்சேரி உள்பட அனைத்து மாநில சட்டசபை செயலகங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப் பெட்டிக்கு விமானத்தில் தனி டிக்கெட் மூலம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது.

    வாக்குப் பெட்டிகள் அனைத்து மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் வைக்கப்பட்டு அறை பூட்டி சீலிடப்பட்டு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


    இந்நிலையில் டெல்லியில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சென்னை வந்தன. தமிழகத்திற்கு உரிய வாக்குப் பெட்டியை சென்னை விமான நிலையத்தில் உதவி தேர்தல் அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் சாந்தி ஆகியோரிடம், மாநில துணை தலைமை தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் சட்டமன்ற பேரவை துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் ஒப்படைத்தனர். 

    • இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
    • அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வை ஏற்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் மற்றும் பொதுக்குழுவில் கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்தது.

    பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்து இருந்தது.

    இந்நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த பதில் மனுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வை ஏற்கக் கூடாது, ஒப்புதல் அளிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கான ஆயத்த பணியை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது.
    • பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல.

     ஜம்மு:

    கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதை யூனியன் பிரதேசமாக மாற்றிய பிறகு, அங்கு சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பயணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரின் இறுதி வாக்காளர் பட்டியலை அக்டோபர் 31-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடும் என கூறப்படுகிறது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எப்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

    ஜம்முவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜம்முகாஷ்மீர் சட்டசபைத் தேர்தலை சந்திக்க பாஜக எப்போதும் தயாராக இருப்பதாக கூறினார். அது பஞ்சாயத்து தேர்தலாக, சட்டசபை தேர்தலாக, நாடாளுமன்ற தேர்தலாக என எந்த தேர்தலுக்கும் தயாராகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜக தேர்தல் நேரத்தில் மட்டும் செயல்படும் கட்சி அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் நவம்பர் 27 மற்றும் 28-ம் தேதிகளிலும் நடைபெறுகிறது.
    சென்னை:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் கடந்த 13 மற்றும் 14-ம் தேதிகளில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு உள்பட சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெற இருந்தன.

    இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வந்ததாலும், பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்பதில் சிரமம் ஏற்பட்டதாலும், பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு முகாம்கள் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அறிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், பொதுமக்கள் பயனடைய வசதியாக வரும் 20 மற்றும் 21-ம் தேதிகளில் மேலும் 2 சிறப்பு முகாம்களை நடத்துவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ×