search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DGP"

    • கப்பலூர் தீ விபத்தில் காயமடைந்த தீயணைப்பு வீரர்களை சந்தித்து டி.ஜி.பி. ஆறுதல் தெரிவித்தார்.
    • 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் கப்ப லுார் தொழிற் பேட்டையில் உள்ள பசை தயாரிப்பு கம்பெனியில் கடந்த 15-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது.இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம், மதுரை, தல்லா குளம் மற்றும் கள்ளிக்குடி ஆகிய தீயணைப்பு நிலைய ஊர்திகள் மூலம் வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

    தீயணைக்கும் பணியின் போது ஆலையில் சேமித்து வைக்கப்பட்ட பொருட்கள் வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு நிலைய அலு வலர் பாலமுருகன், சிறப்பு நிலைய அலுவலர் பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கார்த்திக், கல்யாண குமார் ஆகியோர் தீ காயம் அடைந்தனர். 4 பேரும் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு வீரர் மற்றும் அலுவலர்களை தமிழக தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.மேலும் வீரர்களின் குடும்பத்தி னரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

    தொடர்ந்து டி.ஜி.பி. ரவி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தீயணைப்பு வீரர்களுக்கு ரூ. 3லட்சத்து 50ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தீயணைப்பு வீரர்க ளுக்கு, தீயணைப்பு நிலையங்க ளுக்கு அதிநவீன உபகரண ங்கள் வாங்க திட்டமிட ப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீ விபத்து, பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் படும். தீபாவளி பண்டி கைக்கு பொதுமக்கள் வணிக நிறுவனங்களில் கூடுவதால் தீயணைப்பு பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் சிறப்பு குழு இயங்கும்.
    • வதந்தி பரப்புவோர் சமூக ஊடக கணக்குகளை முடக்கி நடவடிக்கை.

    தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழகத்தில் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிவதற்காகவும் இந்த குழு பயன்படும். இதற்காக சென்னை உட்பட 9 மாநகரங்களிலும் தமிழகம் முழுவதும் 37 மாவட்டங்களில் 203 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கொண்ட சமூக ஊடக குழுக்கள் என்ற தலைப்பில் சிறப்பு குழுவினை தமிழக காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த குழுவில் கணினி திறன் மற்றும் சைபர் தடய அறிவியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற காவலர்கள் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இந்தக் குழு சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் இயங்கும். 

    குறிப்பாக பொய்யான வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அந்தப் பதிவினை நீக்குவது மட்டுமல்லாமல், அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும் கணினி சார் குற்ற வழக்குகள் பதிவு செய்யும் வகையில் இந்த குழு செயல்படும். சாதி மத அரசியல் மோதல்களை முழுமையாக தடுத்திடவும் வகையிலும் இந்த குழு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழகத்தில் புதிதாக 5 தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்படும்.

    நெல்லை:

    தமிழ்நாடு தீயணைப்புத்துறை டி.ஜி.பி. ரவி நெல்லை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    மருதகுளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கான பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு பேரிடர் காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சி செப்டம்பர் மாதம் முடிவடைகிறது.

    இந்த பயிற்சியினை இன்று டி.ஜி.பி. ரவி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பாளை தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள அலுவலக கோப்புகள் மற்றும் பேரிடர் மீட்பு உபகரணங்கள் சரியாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம், கடலூர் மாவட்டங்களை தொடர்ந்து நெல்லையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மண்டல அலுவலகம் விரைவில் அமைக்கப்படும். தமிழகத்தில் தீயணைப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கு 1,200 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 9 இடங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் தமிழக தீயணைப்பு துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பபட்டு உள்ளது. 15-வது நிதிக்குழுவின் மூலம் தமிழகத்திற்கு ரூ.343 கோடி தீயணைப்புதுறைக்கு ஒதுக்கப்பட்டு நவீன மீட்புப்பணிக்கான எந்திரங்கள் வாங்கும்பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக 5 தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனங்களை பராமரிக்க வேண்டும்.
    • போராட்டங்களை ஒளிப்பதிவு செய்ய காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படையில் உள்ள காவலர்கள், சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை கவாத்துப் பயிற்சி வழங்க வேண்டும். இப்பயிற்சியை ஆயுதப் படையில் உள்ள உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும், கலந்து கொள்ளவும் அவர்களை அறிவுறுத்த வேண்டும்.

    ஆயுதப்படையில் உள்ள காவல் துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமிஷனர்களுக்கு கலவர சம்பவங்களில் படையை வழி நடத்துவதற்கு அவ்வப்போது உரிய பயிற்சி அளிக்க வேண்டும். ஆயுதப்படையில் கேடயம், லத்தி, ரப்பர் தோட்டாக்கள், பிளாஸ்டிக் தோட்டாக்கள், பம்ப் ஆக்சன் கன், கேஸ் கன், கேஸ் செல்கள் மற்றும் இதர ஆயுதங்கள் போதுமான அளவில் உள்ளதா? சரியாக வேலை செய்கிறதா? என அவ்வப்போது தணிக்கை செய்வதுடன், எவ்வாறு கையாள வேண்டும்? என கவாத்து பயிற்சியின்போது உரிய பயிற்சி வழங்க வேண்டும்.

    கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருண் மற்றும் இதர வாகனங்களை முறையாக பராமரித்து தயார் நிலையில் வைப்பதற்கு அறிவுறுத்தப்பட வேண்டும். ஒலி பெருக்கிகள் மூலம் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும், போராட்டம் நடக்கும்போது அதனை ஒளிப்பதிவு செய்யவும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

    நகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களை தயார் நிலையில் வைத்து, முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு உட்படுத்த அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் சூப்பிரண்டுகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • ஆர்டர்லியை நல்ல விதமாக சில அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை.
    • ஆர்டர்லிகளும் வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், புகார் தெரிவிப்பதில்லை.

    போலீஸ் உயர் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்து வரும் போலீஸ்காரர்களை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, போலீஸ் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.குமரேசன் ஆஜராகி, ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை. ஆர்டர்லியை நல்ல விதமாக சில அதிகாரிகள் பயன்படுத்துவது இல்லை. ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகார் சொல்வதில்லை. எல்லாருக்கும் ஒரு உதவியாளர் தேவைதான். அதற்காக பொதுமக்கள் பணம் வீணடிக்கக்கூடாது'என்று கூறினார்.

    இதையடுத்து பேசிய கூடுதல் அட்வகேட் ஜெனரல், 'பெரும்பாலான ஆர்டர்லிகளை திரும்ப பெற்றுள்ளோம். மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்ப பெறப்படுவார்கள் என்று கூறினார். அப்போது பேசிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் காவல்துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐ.பி.எஸ். அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

    அதனை டி.ஜி.பி. (சைலேந்திரபாபு) அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அதிகாரிகள் சார்பாக உத்தரவாதம் அளித்துள்ளார். ஆர்டர்லி முறையை ஒழிக்க அவர் எடுத்துவரும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது, இதுதொடர்பான நடவடிக்கை திருப்தி அளிக்கிறது.

    ஒரு அதிகாரி 5 பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களை ஆர்டர்லிகளாக பயன்படுத்தும்போது, மாதம் ரூ.2.50 லட்சம் அரசுக்கு செலவு ஆகுகிறது. உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை குறைந்த ஊதியத்துக்கு நியமிக்கலாம் என்று கூறினார். தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்த வாரம் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறி 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பொதுமக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், நயினார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கலவரக்காரர்களால் சூறையாடப்பட்ட தனியார் பள்ளி வளாகத்தை தமிழக உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர்.

    அப்போது பேசிய பனீந்தர் ரெட்டி, உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களுக்கு அரசு சார்பில் ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பதாக கூறினார். இந்த நிகழ்வில் அனைத்து சந்தேகங்களும் கலையப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.

    அனைத்து கோணங்களிலும் சரியாக விசாரணை செய்து முடிவு எடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது, பொதுமக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபட வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளதாவது:

    மாணவி உயிரிழப்பு தொடர்பாக உடனடியாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவி கேமிரா காட்சிகள் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் அந்த பகுதியில் டிஐஜி தலைமையில் 530 போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கலவரம் தொடர்பாக 70 பேரை கைது செய்துள்ளனர். கலவரம் அடங்கி உள்ளது. கலவரக்காரர்கள் தாக்கியதில் டிஐஜி, எஸ்பி உள்பட 52 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். காயம் ஏற்பட்டாலும் அவர்கள் அமைதி காத்தனர்.

    இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர், செயலாளர், பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மேல் விசாரணைக்காக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து சந்தேகங்களையும் குற்றப் புலனாய்வுத்துறை விசாரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் காவலர்களை டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    குட்கா விவகார வழக்கில் சசிகலா மற்றும் டிஜிபி குறித்து மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பான விவாதம் நடந்தது. #GutkhaScam #Sasikala
    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் “டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி. ஆக பணி நீட்டிப்பு வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே அவருக்கு பணி நீட்டிப்பு வழங்குவதற்காக பிறப்பித்த அரசாணையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என கூறி இருந்தார்.

    இதேபோல மனுதாரர் தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவில், “குட்கா முறைகேட்டில் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பது குறித்து வருமானவரித்துறையினர் கடிதம் எதுவும் அரசு அலுவலகத்தில் இல்லை என்று, இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சசிகலா அறையில், கடந்த 2017-ம் ஆண்டு வருமானவரித்துறை சோதனையின்போது, குட்கா முறைகேட்டில் டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வருமான வரித்துறையினர் கடிதம் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    எனவே வருமானவரித்துறையினர் அனுப்பிய கடிதம் குறித்து கோர்ட்டில் தவறான தகவல் தெரிவித்த தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்குகள் இறுதி விசாரணைக்காக நேற்று நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு வந்தது.



    அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிடுகையில், “டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி. ஆக பணி நீட்டிப்பு செய்ய மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு பரிந்துரைத்தபோது, லஞ்சப்புகார் தொடர்பான ஆவணங்கள் எதுவும் அரசிடம் இல்லை” என்று வாதாடினார்.

    முன்னாள் டி.ஜி.பி. அசோக்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், “லஞ்சப்புகார் தொடர்பாக வருமானவரித்துறையினர் அனுப்பிய கடிதத்தை முறைப்படி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

    சசிகலா தரப்பு வக்கீல், “போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தபோது சசிகலா அங்கு இல்லை. எனவே அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று வாதாடினார்.

    அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “லஞ்சப் புகார் தொடர்பான ஆவணங்கள் திடீரென மாயமாகி உள்ளது. அந்த ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பிறகாவது, டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை மறுபரிசீலனை செய்ய மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு பரிந்துரைக்க உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவ்வாறு செய்யவில்லை. எனவே இதுகுறித்து மனுதாரர் அனுப்பிய புகார் மனுவின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதாடினார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். #GutkhaScam #Sasikala
    டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. #Jactogeo
    ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக காவல்துறை அமைச்சு பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் காவல்துறை அலுவலகங்களில் சுமார் 5 ஆயிரம் அமைச்சுப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்குட்பட்ட இடங்களில் சுமார் 500 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மட்டும் 200 பேர் வேலை செய்து வருகிறார்கள்.

    இதுபோன்ற பணியில் இருப்பவர்கள் போலீசாரின் அலுவல் சார்ந்த பணிகளை அன்றாடம் மேற்கொள்வார்கள். போலீசார் தொடர்புடைய ஓய்வூதியம், சம்பளம், பில்போடுவது உள்ளிட்ட பணிகளை அமைச்சு பணியாளர்களே மேற்கொண்டு வருகிறார்கள்.

    கமி‌ஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு மனுக்களையும் இவர்களே கையாண்டு வருகிறார்கள்.

    உதாரணத்துக்கு கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ஒருவர் அதற்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றால் அதற்கான ஆவணங்களை கமி‌ஷனர் அலுவலகத்தில் நேரில் வந்தே தாக்கல் செய்ய வேண்டும்.

    இதேபோல சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓட்டல்களை நடத்துபவர்கள், உடற்பயிற்சி கூடம் நடத்துபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களும் தங்களது நிறுவனம் தொடர்பான உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பம் செய்வார்கள். இதுபோன்ற பணிகளுக்காக கமி‌ஷனர் அலுவலகம் வரும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கடந்த 24-ந் தேதி முதல் பணிகள் முடங்கியுள்ளன.

    இதேபோல டி.ஜி.பி. அலுவலகத்திலும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கும் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து போலீஸ் கமி‌ஷனர் அலுவலகங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கைகளும் அனுப்பப்படவில்லை.

    காந்தி நினைவு நாளை யொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்காக 2 நாட்களுக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்படும். இந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை.

    மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் அமைச்சுப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    கடந்த 22-ந்தேதி முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் முதல் 2 நாட்கள் அவர்களுக்கு ஆதரவாக சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர்கள் உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த 24-ந்தேதி முதல் அவர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Jactogeo
    குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் தலைமை செயலாளர், டிஜிபி டிகே ராஜேந்திரன், சசிகலாவுக்கு நோட்டீசு அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
    மதுரை:

    மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரி அதிகாரிகள் சென்னையில் உள்ள ஒரு குடோனில் சோதனை செய்தனர்.

    அப்போது பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்து ஒரு டைரியும் கைப்பற்றப்பட்டது.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய லஞ்சம் பெற்றவர்களின் பட்டியல் இருந்ததாக தகவல்கள் வந்தது.

    அந்த பட்டியலில் தமிழக அமைச்சர், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் டி.கே. ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து விசாரித்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தண்டிக்க உத்தரவிட வேண்டும் என்று கடந்த ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குட்கா ஊழல் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு கடந்த 28.7.2017 அன்று உத்தரவிட்டது.

    இதேபோல சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் குட்கா ஊழல் பற்றிய விசாரணையை சி.பி.ஐ. தற்போது மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் குட்கா ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். அவரது பணிக்காலம் முடிந்தபிறகு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து தமிழக அரசு 30.6.2017 அன்று அரசாணை பிறப்பித்து உள்ளது.

    அவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தின் காரணமாக, குட்கா ஊழல் பிரச்சினையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படவில்லை என்று அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகனராவ் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    தற்போது போயஸ் கார்டனில் சசிகலாவின் அறையில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் குட்கா ஊழல் குறித்து வருமான வரித்துறையினரின் அறிக்கை கைப்பற்றப்பட்டு உள்ளது.

    அதில் தற்போதைய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பெயர் இடம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அவரின் பதவியை சட்டவிரோதமாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக, முறைகேடுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் டி.கே.ராஜேந்திரனின் டி.ஜி.பி. பதவி நீட்டிப்பை ரத்து செய்யவேண்டும். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.



    வழக்கு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசின் தலைமை செயலகம், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ், டி.ஜி.பி., வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அலுவலக அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் இந்த வழக்கில் சசிகலாவை எதிர் மனுதாரராக சேர்த்து அவருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #GutkhaScam #Sasikala #RamaMohanaRao
     
    கோவில் திருவிழாவில் நடைபெறும் கலாச்சார நிகழ்ச்சிகளை வீடியோ கேமரா மூலம் படம் பிடிக்க வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Temple #highcourt

    சென்னை:

    தமிழகத்தில் பல மாவட்டங்களில், கோவில் திருவிழாவின் போது ‘ரிக்கார்டு டான்ஸ்’ என்ற பெயரில், ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இதுபோன்ற ஆபாச நடனங்களை கோவில் திருவிழாக்களின் போது நடத்த ஐகோர்ட்டு தடை விதித்தது.

    இதையடுத்து பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘தங்கள் கோவில்களில் கலாச்சார நிகழ்ச்சி என்ற பெயரில் நடன நிகழ்ச்சிகள் காலகாலமாக நடத்தப்படுகிறது. ஆனால், ஆபாச நடனம் என்று கூறி போலீசார் அனுமதி வழங்க மறுக்கின்றனர். எனவே தங்களது கோவில்களில் கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி எம்.மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஒரு காலத்தில் கோவில் திருவிழா என்றால் வில்லு பாட்டு, கிராமிய பாட்டு என்று நிகழ்ச்சிகள் நடந்தது.

     


    இப்போது அறிவியல் முன்னேற்றம் அடைந்ததால், இதுபோன்ற பல நடனங்கள் எல்லாம் கோவில் திரு விழாக்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே, கோவில் திருவிழாவை முன்னிட்டு, கலாச்சார நடனம் என்ற நிகழ்ச்சி நடந்தால், அதை உள்ளூர் போலீசார் வீடியோ கேமரா மூலம் படம் பிடிக்க வேண்டும்.

    அதில் ஆபாசம் இருந்தால், சட்டப்படி வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும், தமிழக டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பவேண்டும்.

    இந்த வழக்குகளை எல்லாம் வருகிற நவம்பர் 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #Temple #highcourt

    சென்னை டி.ஜி.பி.அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்தில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு டி.ஜி.பி. ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #NationalPoliceDay

    சென்னை:

    காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு 21-ந்தேதி ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி ‘காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்தில் இந்தியா முழுவதும் பணியின் போது வீரமரணம் அடைந்த 414 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜி.பி. ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

    வீரமரணம் அடைந்த காவலர்கள் ஸ்ரீராமலு, நடராஜன், கோபால், காவலர் கிருஷ்ணன், எட்வர்டு, தனசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பெரிய பாண்டியன் உள்ளிட்டோரின் குடும்பத்தினரும் முதல் முறையாக அஞ்சலி செலுத்தினார்கள்.

    ஆவடி வசந்தம் நகரில் உள்ள இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் வீட்டுக்கு சென்ற கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். #NationalPoliceDay

    குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர், டி.ஜி.பி. ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கை மூலமே பதவி விலகுவார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறினார். #GutkhaScam #TTVDhinakaran
    சுவாமிமலை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. இன்று (24-ந் தேதி) முதல் 26-ந் தேதி வரை 3 நாட்கள் நாகை மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்குகிறார்.

    கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் அம்மாவின் அரசு என்று கூறி ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி ஆட்சியில் 33 அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது அ.தி.மு.க.வின் ஊழல் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கும் உரிமை மத்திய அரசிடமே இருக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு தீர்வு கிடைக்கும். நீர்ப்பாசனத்தை சீர் செய்தாலே விவசாயிகள் தற்கொலை முற்றிலும் தவிர்க்கப்படும்.

    குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சரோ, டி.ஜி.பி. யோ இதுவரை பதவி விலகவில்லை. நீதிமன்ற நடவடிக்கை மூலமே அவர்கள் பதவி விலகுவார்கள்.

    கருணாஸ் உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக கூறி உடனே மன்னிப்பு கோரினார். ஆனால் இந்த அரசாங்கம் கருணாசுக்கு ஒரு நிலைப்பாடு, எச். ராஜா, எஸ்.வி. சேகருக்கு ஒரு நிலைப்பாடு கொண்டுள்ளது. இது அடிமை அரசாங்கம் என்பது தான் உண்மை.

    திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ‘குக்கர்’ சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்.

    டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதியாக அறிவிக்கப்பட்டு விவசாயமும் விவசாயம் சம்மந்தப்பட்ட தொழில்களை மட்டுமே நடைபெற வேண்டும். ஏற்கனவே உள்ள திட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தினாலும், ஊழலை தடுத்தாலும் அதிக விவசாய பிரச்சனைகள் தீர்த்து விடலாம்.

    நீர் ஆதாரங்களை சரிவர செயல்படுத்தி ஆறு, குளங்களை சீர் செய்து மழை காலங்களில் நீரை சேமிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கான விதை அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GutkhaScam #TTVDhinakaran
    ×