search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tributes"

    • மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு நன்றியுள்ள தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது.
    • முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.

    மும்பை:

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர், மும்பை நகருக்குள் கடல் வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

    சத்ரபதி சிவாஜி மஹராஜ் ரயில் நிலையம், ஓபராய் ஓட்டல், தாஜ் மஹால் ஓட்டல், லியோ கபே, காமா மருத்துவமனை, யூதர்கள் சமுதாய மையம் ஆகிய இடங்களில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் 18 பேர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டார்.

    மும்பை தாக்குதலின் 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மும்பை நகரின் முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அதற்கு பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் கூறும்போது, மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு நன்றியுள்ள தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது.

    துணிச்சலான ஆன்மாக்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் நிற்கிறோம். தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரம் மிக்க பாது காப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் உன்னத தியாகத்தை நினைவுகூர்ந்து, எல்லா இடங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பிப்போம் என்று கூறியுள்ளார்.

    சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #SulurMLA #MLAKanagaraj
    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் (வயது 64) இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.



    எம்எல்ஏ கனகராஜ் உடல்  காமநாயக்கன்பாளையம், வி.மேட்டூர் சேர்மன் தோட்டத்தில் அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. #SulurMLA #MLAKanagaraj
    மறைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி இன்று மதுரவாயல் காவல் நிலையத்தில் போலீசார், மக்கள் மரியாதை செலுத்தினர். #Periyapandiyan
    சென்னை:

    இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படித்து, சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்தவர். சிறு வயதிலேயே போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையும் கனவும் அவருடன் இரண்டற கலந்திருந்தது. அந்த கனவு நனவானதால் அவர் காவல் துறை பணியை கண்ணாக மதித்து செய்து வந்தார்.

    எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் குற்றவாளிகளிடம் மட்டும் கோபக்கனலாக மாறி விடுவார். அந்த சமயத்தில் பயம் என்பதே அவரிடம் வராது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது அந்த இயல்பே அவருக்கு “எமன்” ஆகிப் போனது.



    சென்னை நகைக்கடையில் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்ற ராஜஸ்தான் கொள்ளையர்களை அங்கு பிடிக்கச் சென்றபோது பெரிய பாண்டியன் கொள்ளையருடனான மோதலில் சக ஆய்வாளர் சுட்டதில் மரணமடைந்தார்.

    இன்று அவரது ஓராண்டு நினைவு தினத்தையொட்டி மதுரவாயல் காவல் நிலையத்தில் போலீசார், மக்கள் மரியாதை செலுத்தினர். #Periyapandiyan
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்கள், தற்போதைய எம்பிக்கள் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. #WinterSession #ParliamentSession
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று  காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், தற்போதைய எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு பாராளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.



    மழைக்கால கூட்டத் தொடருக்கு பிறகு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் மத்திய மந்திரி ஆனந்த் குமார், பீகார் எம்பிக்கள் போலா சிங், மவுலானா அஸ்ரருல் ஹக், கேரள எம்பி எம்.ஐ.ஷாநவாஸ் உள்ளிட்ட சில தலைவர்கள் காலமானார்கள். அவர்கள் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அடுத்த மாதம் 8-ந் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. 20 அமர்வுகளாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 45 மசோதாக்கள் மற்றும் ஒரு நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. #WinterSession #ParliamentSession
    புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த நெல் ஜெயராமன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், தமாகா தலைவர் வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #RIPNelJayaraman #MKStalin #GKVasan
    சென்னை:

    திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நெல் ஜெயராமன். அரிய வகை பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 50. அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



    நெல் ஜெயராமன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன், தமிழிசை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    தேனாம்பேட்டையில் பகல் 11 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பின்னர் நெல் ஜெயராமன் உடல் அவரது சொந்த ஊருக்கு வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

    நெல் ஜெயராமன் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான பயணச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். மகனின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளார். #RIPNelJayaraman #MKStalin #GKVasan
    மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவை தொடர்ந்து, உயிர்நீத்த போலீசார் நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும் புகழஞ்சலி செலுத்தினர். #MumbaiAttack
    மும்பை:

    மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி லஸ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவினர். சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட், தாஜ் ஓட்டல், காமா மருத்துவமனை, நரிமன்ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    இதில் அப்பாவி மக்கள், வெளிநாட்டினர், போலீசார் என 166 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த கொடூர தாக்குதல் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த போலீசாரின் நினைவிடம் மெரின்டிரைவ் போலீஸ் ஜிம்கானாவில் உள்ளது. அங்கு மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.



    போலீஸ் உயர் அதிகாரிகளும், உயிர்நீத்த போலீசாரின் குடும்பத்தினரும், ஏராளமான மக்களும் திரண்டு வந்து மரியாதை செலுத்தினர். பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை கிர்காவ் கடற்கரையில் வைத்து பிடித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஒம்பாலேவும் கொல்லப்பட்டார். கிர்காவ் கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திலும் ஏராளமானவர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதேபோல பயங்கரவாத தாக்குதல் நடந்த காமா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் உள்ள உயிரிழந்தவர்கள் நினைவிடத்திலும் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

    பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட பல்வேறு தலைவர்கள் புகழ் அஞ்சலி செலுத்தினர்.
    முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் ஒருமைப்பாடு, சகோதரத்துவத்தால் போரினால் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்போம் என குறிப்பிட்டுள்ளார். #Modi #Tributes #Indiansoldiers #WWI
    புதுடெல்லி:

    முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள முதல் உலகப் போர் தியாகிகள் நினைவு சின்னத்தில் ராணுவ உயரதிகாரிகளும், பொதுமக்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.



    இந்நிலையில், முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில் ஒருமைப்பாடு, சகோதரத்துவத்தால் போரினால் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

    முதல் உலகப் போரில் இந்தியாவுக்கு நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தில் இதில் நமது வீரர்களும் பங்கேற்று போரிட்டனர்.

    இந்த அதிபயங்கரமான போர் முடிவடைந்த நூற்றாண்டு நினைவுநாளை அனுசரிக்கும் இந்நாளில் சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் அமைதிப் பாதையில் செல்வதன் மூலம் மீண்டும் இதுபோன்ற உயிரிழப்புகளும், பேரழிவும் ஏற்படாத சூழலை உருவாக்கும் நமது நிலைப்பாட்டில் என்றென்றும் உறுதியாக நிற்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Modi #Tributes #Indiansoldiers #WWI

    சென்னை டி.ஜி.பி.அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்தில் பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு டி.ஜி.பி. ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். #NationalPoliceDay

    சென்னை:

    காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு 21-ந்தேதி ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி ‘காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச்சின்னத்தில் இந்தியா முழுவதும் பணியின் போது வீரமரணம் அடைந்த 414 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டி.ஜி.பி. ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.

    வீரமரணம் அடைந்த காவலர்கள் ஸ்ரீராமலு, நடராஜன், கோபால், காவலர் கிருஷ்ணன், எட்வர்டு, தனசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பெரிய பாண்டியன் உள்ளிட்டோரின் குடும்பத்தினரும் முதல் முறையாக அஞ்சலி செலுத்தினார்கள்.

    ஆவடி வசந்தம் நகரில் உள்ள இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் வீட்டுக்கு சென்ற கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அவரது படத்துக்கு மரியாதை செலுத்தினார். #NationalPoliceDay

    இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையடுத்து பரமக்குடியில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். #ImmanuvelSekaran
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு குருபூஜை விழா நடந்தது.

    காலை முதலே போலீசார் ஒதுக்கிய நேரத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதில் அன்வர்ராஜா எம்.பி., மாவட்டச் செயலா ளர் எம்.ஏ. முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



    இதே போல் தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், சுப.த. திவாகர் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குணா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    காங்கிரஸ், தே.மு.தி.க., விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

    இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பரமக்குடி மற்றும் முக்கிய பகுதிகளில் 6,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அஞ்சலி செலுத்த வந்தவர்களின் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. #ImmanuvelSekaran

    அமெரிக்காவில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி மூத்த தலைவர் ஜான் மெக்கைன் எம்.பி. மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு டிரம்ப், தலைவர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர். #JohnMcCain #DonaldTrump #BarackObama
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஜான் மெக்கைன் (வயது 81). இவர் 2008-ம் ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவியவர்.

    அமெரிக்காவுக்கும், வியட்நாமுக்கும் இடையே நடந்த போரில், போர் விமானியாக இருந்தவர் ஜான் மெக்கைன். அவரது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அவர் போர்க் கைதியாக சிறை பிடிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார். அதன் பின்னர் வியட்நாம், அவரை விடுவித்தது. இதனால் அவர் வியட்நாம் போர் நாயகனாக கொண்டாடப்பட்டார்.



    பின்னர் அரசியலில் குதித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில், அரிசோனா மாகாணத்தில் இருந்து 6 முறை எம்.பி. பதவி வகித்து உள்ளார்.

    செனட் சபை எம்.பி. என்ற நிலையில் அவர் பழமைவாதியாக திகழ்ந்தார். கருச்சிதைவுக்கு எதிராக குரல் கொடுத்தார். ராணுவத்துக்கு அதிகளவில் நிதி ஒதுக்குவதை ஆதரித்தார். ‘ஒபாமா கேர்’ காப்பீடு திட்டத்தை ரத்து செய்வதற்கு எதிராக ஓட்டு போட்டார். இது டிரம்புக்கு அவர் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. டிரம்பை ஜான் மெக்கைன் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு மூளையில் புற்றுநோய் தாக்கியது தெரிய வந்தது. அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்தான், இனி சிகிச்சை பெறுவது இல்லை என்று அவர் முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார். அப்போது அவர் அருகில் குடும்பத்தினர் இருந்தனர்.

    அவரது மறைவு குறித்து மனைவி சின்டி மெக்கைன் டுவிட்டரில் துயரத்துடன் வெளியிட்டு உள்ள பதிவில், “என் இதயம் நொறுங்கிவிட்டது. கடந்த 38 ஆண்டுகளாக ஒரு துணிச்சலான, அன்பான மனிதருடன் வாழ்ந்து இருக்கிறேன் என்பதால் நான் அதிர்ஷ்டசாலி. அவர் விரும்பிய வாழ்க்கையை, நேசித்த மனிதர்களை, இடங்களை, கொள்கைகளை கடந்து சென்று இருக்கிறார்” என குறிப்பிட்டு உள்ளார்.

    ஜான் மெக்கைன் உடல், அரிசோனாவின் பீனிக்ஸ் நகரிலும், பின்னர் வாஷிங்டன் நகரிலும் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், மேரிலாந்து மாகாணத்தில் உள்ள அன்னாபோலிசில் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.

    ஜான் மெக்கைன் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.

    ஜனாதிபதி டிரம்ப், “ஜான் மெக்கைன் குடும்பத்தினருக்கு எனது மரியாதையையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் இதயங்களும், பிரார்த்தனைகளும் உங்களோடு இருக்கின்றன” என குறிப்பிட்டு உள்ளார்.

    முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யு புஷ் தனது இரங்கல் செய்தியில், “ஜான் மெக்கைன் மிகச்சிறந்த தேசப்பற்றாளர். எனக்கு அவர் மிகச்சிறந்த நண்பர். நான் அவரை இழந்து தவிக்கிறேன்” என கூறி இருக்கிறார்.

    மற்றொரு முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா விடுத்து உள்ள இரங்கல் செய்தியில், “ஜான் மெக்கைன் சந்தித்த சோதனைகள், நமக்கும் வைக்கப்பட்டு உள்ளது. ஜான் மெக்கைன் காட்டிய தைரியத்தை நாமும் காட்ட வேண்டியது இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறி உள்ளார்.  #JohnMcCain #DonaldTrump #BarackObama
    சென்னை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் அஸ்திக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர். #AtalBihariVajpayee #EdappadiPalaniswami #OPS
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது.  மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மூத்த தலைவர்கள் அஸ்தியை 7 கலசங்களில் எடுத்து வந்தனர்.

    சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் 7 அஸ்தி கலசங்களுக்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    இன்று மதியம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கமலாலயம் வந்து, வாஜ்பாய் அஸ்திக்கு மரியாதை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு  வரும் 26-ம் தேதி வாஜ்பாய் அஸ்தி கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை கடற்கரை, ராமேஸ்வரம் கடல், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், காவிரி, பவானி, வைகை என 6 இடங்களில் ஒரே சமயத்தில் கரைக்கப்பட உள்ளது. #AtalBihariVajpayee #EdappadiPalaniswami #OPS
    திருக்குவளையில் கருணாநிதியின் படத்தை கையில் ஏந்தி ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    நாகப்பட்டினம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த ஊர் நாகை மாவட்டம் திருக்குவளை ஆகும். இந்த ஊரில் கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதி கருணாநிதி பிறந்தார்.

    நேற்று மாலை கருணாநிதி மரணம் அடைந்த தகவல் வெளியானதும் அவரசு சொந்த ஊரான திருக்குவளை சோகத்தில் மூழ்கியது.

    திருக்குவளையில் கருணாநிதியின் படத்தை கையில் ஏந்தி ஏராளமான ஆண்கள், பெண்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் பிறந்த வீடு தற்போது நூலகமாக மாற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை ஏராளமான பெண்கள் நூலகம் முன்பு திரண்டு கும்மியடித்து ஒப்பாரி வைத்து பாடினர்.

    மேலும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் வந்திருந்து கருணாநிதியின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  #RIPKarunanidhi #Karunanidhi #DMK
    ×