என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகோதரத்துவம்"

    • தொப்புள் கொடி உறவு என்பது வெறும் வார்த்தை பயன்பாடு மட்டும் அல்ல.
    • எதையும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத உன்னதான உறவு அது.

    ஆண்டுதோறும் மே 24 (இன்று) சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தேசங்கள் கடந்த உலக பந்தமான இது மனித உறவுகளிலேயே தனித்துவமானது.

    தாய், தந்தை ஆகிய பந்தங்கள் ஒரு சில உணர்வுகளுக்குள் வரையறுக்கப்பட்டவை. அன்பு, கோபம், நட்பு என அனைத்து உணர்வுகளையும் நம்மால் சுதந்திரமாக வெளிப்படுத்த முடிகின்ற ஒரே ஜீவன் சகோதரனே.

    தொப்புள் கொடி உறவு என்பது வெறும் வார்த்தை பயன்பாடு மட்டும் அல்ல. நமக்காக யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் நம்முடன் நமது பக்கம் நிற்கும் சகோதரனிடத்தில் நமக்கு கிடைக்கும் பாதுகாப்புணவர்வுக்கு ஈடேதும் இல்லை.

    சகோதரன் என்பவன் வாழ்நாள் நண்பன். சகோதரன் உடனான சிறுவயது குறும்புகள், சண்டைகள் அன்பின் வெளிப்பாடு. அன்பின் தனித்துவமான வெளிப்பாடுகள் அவை. ஒருவருக்கொருவர் எதையும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத உன்னதான உறவு அது. எதிர்பார்ப்பின்றி உருவான உறவு.

    இன்று உலகெங்கிலும் மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவத்தை பலரும் வலியறுத்துகின்றனர். ஏனெனில் நட்பை விட சகோதரத்துவத்தின் பிணைப்பு ஆழமானது.

    ஒரு நல்ல நண்பன் நூறு சகோதரர்களுக்கு சமமாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல சகோதரன் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். 

    முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் ஒருமைப்பாடு, சகோதரத்துவத்தால் போரினால் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்போம் என குறிப்பிட்டுள்ளார். #Modi #Tributes #Indiansoldiers #WWI
    புதுடெல்லி:

    முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    டெல்லியில் உள்ள முதல் உலகப் போர் தியாகிகள் நினைவு சின்னத்தில் ராணுவ உயரதிகாரிகளும், பொதுமக்களும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.



    இந்நிலையில், முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள செய்தியில் ஒருமைப்பாடு, சகோதரத்துவத்தால் போரினால் ஏற்படும் இறப்புகளை தவிர்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

    முதல் உலகப் போரில் இந்தியாவுக்கு நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அமைதியை நிலைநாட்டும் நோக்கத்தில் இதில் நமது வீரர்களும் பங்கேற்று போரிட்டனர்.

    இந்த அதிபயங்கரமான போர் முடிவடைந்த நூற்றாண்டு நினைவுநாளை அனுசரிக்கும் இந்நாளில் சகோதரத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டுடன் அமைதிப் பாதையில் செல்வதன் மூலம் மீண்டும் இதுபோன்ற உயிரிழப்புகளும், பேரழிவும் ஏற்படாத சூழலை உருவாக்கும் நமது நிலைப்பாட்டில் என்றென்றும் உறுதியாக நிற்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Modi #Tributes #Indiansoldiers #WWI

    ×