என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சகோதரர்கள் தினம்"

    • தொப்புள் கொடி உறவு என்பது வெறும் வார்த்தை பயன்பாடு மட்டும் அல்ல.
    • எதையும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத உன்னதான உறவு அது.

    ஆண்டுதோறும் மே 24 (இன்று) சகோதரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தேசங்கள் கடந்த உலக பந்தமான இது மனித உறவுகளிலேயே தனித்துவமானது.

    தாய், தந்தை ஆகிய பந்தங்கள் ஒரு சில உணர்வுகளுக்குள் வரையறுக்கப்பட்டவை. அன்பு, கோபம், நட்பு என அனைத்து உணர்வுகளையும் நம்மால் சுதந்திரமாக வெளிப்படுத்த முடிகின்ற ஒரே ஜீவன் சகோதரனே.

    தொப்புள் கொடி உறவு என்பது வெறும் வார்த்தை பயன்பாடு மட்டும் அல்ல. நமக்காக யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் நம்முடன் நமது பக்கம் நிற்கும் சகோதரனிடத்தில் நமக்கு கிடைக்கும் பாதுகாப்புணவர்வுக்கு ஈடேதும் இல்லை.

    சகோதரன் என்பவன் வாழ்நாள் நண்பன். சகோதரன் உடனான சிறுவயது குறும்புகள், சண்டைகள் அன்பின் வெளிப்பாடு. அன்பின் தனித்துவமான வெளிப்பாடுகள் அவை. ஒருவருக்கொருவர் எதையும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லாத உன்னதான உறவு அது. எதிர்பார்ப்பின்றி உருவான உறவு.

    இன்று உலகெங்கிலும் மனிதர்களுக்கிடையில் சகோதரத்துவத்தை பலரும் வலியறுத்துகின்றனர். ஏனெனில் நட்பை விட சகோதரத்துவத்தின் பிணைப்பு ஆழமானது.

    ஒரு நல்ல நண்பன் நூறு சகோதரர்களுக்கு சமமாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல சகோதரன் ஆயிரம் நண்பர்களுக்கு சமம். 

    • திருமணத்திற்கு பின் கிருஷ்ணப்ரியா ஆண்டுதோறும் சர்வதேச சகோதரர்கள் தினத்தன்று தனது சகோதரருக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
    • கடிதத்தை கிருஷ்ணபிரசாத் ஆர்வத்துடன் அளந்தபோது, ​​அது 434 மீட்டர் நீளத்தில் இருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பீரு மேட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்ரியா. பெரு வந்தானம் கிராம பஞ்சாயத்தில் என்ஜினீயராக உள்ளார். இவரது சகோதரர் பெயர் கிருஷ்ணபிரசாத்.

    திருமணத்திற்கு பின் முண்ட காயத்தில் தங்கி உள்ள கிருஷ்ணப்ரியா ஆண்டுதோறும் ஒவ்வொரு சர்வதேச சகோதரர்கள் தினத்தன்றும் (மே 24) தனது சகோதரருக்கு கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார்.

    ஆனால் இந்த ஆண்டு வேலையின் காரணமாக குறிப்பிட்ட நாளில் அவரால் அண்ணனுக்கு கடிதம் எழுத முடியவில்லை. அதன்பிறகு மற்றொரு நாளில் அண்ணனுக்கு கடிதம் எழுத முடிவு செய்தார்.

    தங்களது பாசம், உறவு என கிருஷ்ணப்ரியா எழுதிய கடிதம் நீளமாக சென்றது. இதற்காக அவர் காகிதக் கட்டுக்குப் பயன்படுத்தப்படும் 15 ரோல்களை வாங்கி தனது கடிதத்தை எழுதி உள்ளார்.

    கடிதத்தை முடிக்க அவருக்கு 12 மணிநேரம் ஆனது. பின்னர் அந்த கடிதத்ததை அண்ணனுக்கு அனுப்பி வைத்தார். தங்கையிடம் இருந்து 5 கிலோ எடையில் வந்த பார்சலை பார்த்த கிருஷ்ணபிரசாத் பரிசுப்பொருளாக இருக்கும் என நினைத்து வாங்கி பிரித்துப் பார்த்தார்.

    ஆனால் அதில் கடிதம் மட்டுமே இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். அந்த கடிதத்தில் அவர்களின் உறவைப் பற்றி கிருஷ்ணப்பிரியா உணர்ச்சியுடன் எழுதியிருந்தார்.

    அந்தக் கடிதத்தை கிருஷ்ணபிரசாத் ஆர்வத்துடன் அளந்தபோது, ​​அது 434 மீட்டர் நீளத்தில் இருந்தது. இதனை அவர் கொல்கத்தாவைச் சேர்ந்த யுனிவர்சல் ரெக்கார்ட் ஃபோரத்திற்கு அனுப்பினார். அவர்கள் உலக சாதனையை உறுதிப்படுத்தினர்.

    5 கிலோ எடையில் 434 மீட்டர் நீளத்திற்கு சகோதரனுக்கு கடிதம் எழுதிய சகோதரியின் உலக சாதனை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


    ×