என் மலர்
நீங்கள் தேடியது "நெல் ஜெயராமன்"
- 2018 ஆம் ஆண்டு நெல் ஜெயராமன் புற்றுநோயால் உயிரிழந்தார்.
- நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை ஏற்பதாக சிவகார்த்திகேயன் வாக்குறுதி அளித்திருந்தார்.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் நெல் ஜெயராமன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 2018 ஆம் ஆண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குறுதி அளித்திருந்தார்.
அவ்வகையில், சிவகார்த்திகேயன் தான் கொடுத்த வாக்கை மீறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவை கட்டி வந்துள்ளார்
இந்நிலையில், பள்ளிப்படிப்பை முடித்த சீனிவாசனிடம் எந்தக் கல்லூரி மற்றும் என்ன படிப்பில் சேர விரும்புகிறாய் என்பதை விசாரித்து, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதை ஒரு அண்ணனாக இருந்து சிவகார்த்திகேயன் செய்துள்ளார்.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு எடுப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் நெல் ஜெயராமன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த டிசம்பர் 6-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் நெல் ஜெயராமனின் வாழ்க்கைக்குறிப்பு பிளஸ்-2 தாவரவியல் பாடப்பிரிவில் இடம் பெற்று இருக்கிறது. பயிர் பெருக்கம் என்ற பாட தொகுப்பில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை பற்றிய தொகுப்புக்கு கீழே நெல் ஜெயராமனை பற்றி குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதில், ‘திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அதிரங்கம் கிராமத்தை சேர்ந்தவர். நம்மாழ்வாரின் சீடராவார். இவர் நமது நெல்லை பாதுகாப்போம் இயக்கத்தின் தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆவார். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் அயராது பாடுபட்டவர். விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களின் நிலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறித்துக்கொண்டு அவற்றிற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உரையாற்றுவதற்காக பிலிப்பைன்ஸ் அரசு இவரை அழைத்தது. 2011-ம் ஆண்டு இவர் சிறந்த இயற்கை விவசாயத்துக்கான மாநில விருதையும், 2015-ம் ஆண்டு சிறந்த மரபணு பாதுகாப்பாளர் என்ற தேசிய விருதையும் பெற்றார்’ என்பது உள்பட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.


நெல் ஜெயராமன் உடல் தேனாம்பேட்டை ரத்னா நகர் 2-ஆவது தெருவில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நெல் ஜெயராமனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், பி.ஆர்.பாண்டியன், தமிழிசை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நெல் ஜெயராமன் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான பயணச் செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார். மகனின் கல்விச் செலவையும் ஏற்றுள்ளார். #RIPNelJayaraman #MKStalin #GKVasan
சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்த அவர் பின்னர் நெல் வகைகளைக் காப்பாற்ற களம் இறங்கினார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல்வகைகளை பிரபலப்படுத்தியிருந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தநிலையில் இன்று காலை காலமானார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர்.
அவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விவசாயிகள், திரைப்பட கலைஞர்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்தனர்.
முன்னதாக முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்த 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் காமராஜ், அவரது குடும்பத்தாரிடம் வழங்கினார்.
இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நெல்ஜெயராமன் இறந்ததை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #NelJayaraman #PassedAway #cancer






