என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் பணிகள் முடக்கம்
Byமாலை மலர்30 Jan 2019 11:28 AM GMT (Updated: 30 Jan 2019 11:28 AM GMT)
டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. #Jactogeo
ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக காவல்துறை அமைச்சு பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் காவல்துறை அலுவலகங்களில் சுமார் 5 ஆயிரம் அமைச்சுப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட இடங்களில் சுமார் 500 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் 200 பேர் வேலை செய்து வருகிறார்கள்.
இதுபோன்ற பணியில் இருப்பவர்கள் போலீசாரின் அலுவல் சார்ந்த பணிகளை அன்றாடம் மேற்கொள்வார்கள். போலீசார் தொடர்புடைய ஓய்வூதியம், சம்பளம், பில்போடுவது உள்ளிட்ட பணிகளை அமைச்சு பணியாளர்களே மேற்கொண்டு வருகிறார்கள்.
கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு மனுக்களையும் இவர்களே கையாண்டு வருகிறார்கள்.
உதாரணத்துக்கு கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ஒருவர் அதற்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றால் அதற்கான ஆவணங்களை கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்தே தாக்கல் செய்ய வேண்டும்.
இதேபோல சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓட்டல்களை நடத்துபவர்கள், உடற்பயிற்சி கூடம் நடத்துபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களும் தங்களது நிறுவனம் தொடர்பான உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பம் செய்வார்கள். இதுபோன்ற பணிகளுக்காக கமிஷனர் அலுவலகம் வரும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கடந்த 24-ந் தேதி முதல் பணிகள் முடங்கியுள்ளன.
இதேபோல டி.ஜி.பி. அலுவலகத்திலும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கும் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கைகளும் அனுப்பப்படவில்லை.
காந்தி நினைவு நாளை யொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்காக 2 நாட்களுக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்படும். இந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை.
மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் அமைச்சுப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 22-ந்தேதி முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் முதல் 2 நாட்கள் அவர்களுக்கு ஆதரவாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர்கள் உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 24-ந்தேதி முதல் அவர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Jactogeo
தமிழகம் முழுவதும் காவல்துறை அலுவலகங்களில் சுமார் 5 ஆயிரம் அமைச்சுப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட இடங்களில் சுமார் 500 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் 200 பேர் வேலை செய்து வருகிறார்கள்.
இதுபோன்ற பணியில் இருப்பவர்கள் போலீசாரின் அலுவல் சார்ந்த பணிகளை அன்றாடம் மேற்கொள்வார்கள். போலீசார் தொடர்புடைய ஓய்வூதியம், சம்பளம், பில்போடுவது உள்ளிட்ட பணிகளை அமைச்சு பணியாளர்களே மேற்கொண்டு வருகிறார்கள்.
கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு மனுக்களையும் இவர்களே கையாண்டு வருகிறார்கள்.
உதாரணத்துக்கு கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ஒருவர் அதற்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றால் அதற்கான ஆவணங்களை கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்தே தாக்கல் செய்ய வேண்டும்.
இதேபோல சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓட்டல்களை நடத்துபவர்கள், உடற்பயிற்சி கூடம் நடத்துபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களும் தங்களது நிறுவனம் தொடர்பான உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பம் செய்வார்கள். இதுபோன்ற பணிகளுக்காக கமிஷனர் அலுவலகம் வரும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கடந்த 24-ந் தேதி முதல் பணிகள் முடங்கியுள்ளன.
இதேபோல டி.ஜி.பி. அலுவலகத்திலும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கும் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கைகளும் அனுப்பப்படவில்லை.
காந்தி நினைவு நாளை யொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்காக 2 நாட்களுக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்படும். இந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை.
மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் அமைச்சுப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 22-ந்தேதி முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் முதல் 2 நாட்கள் அவர்களுக்கு ஆதரவாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர்கள் உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 24-ந்தேதி முதல் அவர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Jactogeo
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X