search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "confiscated"

    • கடைகளில் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
    • ஆய்வில் கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.38,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக் பொருட்கள் பயன்படு த்தப்படுகிறதா?. என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்ஆய்வு மேற்கொள்ள உத்தரவி ட்டார்.

    அதன் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் ஆகியோர் தலைமையில் விளார் ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி ரத்தினசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற ரத்னதினசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் கடை கடையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததுஇதையடுத்து தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக்பொருட்களை பறிமுதல் செய்ய ப்பட்ட தோடு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    விளார் பகுதியில் மட்டும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் தஞ்சை ஒன்றியம் முழுவதும் 61 ஊராட்சிகளில் மேற்கொ ள்ளப்பட்ட ஆய்வில் 300-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.38,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    தொடர்ந்து இந்த சோதனை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இதில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சித்ரா ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனே இருந்தனர்.

    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினர்.
    • சாராய பாட்டில்கள் ஒரு மூட்டையில் 50 பாட்டில்கள் வீதம் 28 மூட்டைகள் உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் காவல் சரகம் மகாராஜபுரம் மெயின் ரோடு வழியாக காரில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்ககாிடைத்துள்ளது.

    இதன்ரிபேரில் இரவு 9 மணியளவில் ரகசிய தகவலின் பேரில் செம்பனா ர்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வந்த காரை தடுத்து நிறுத்தினர். அப்பிபோது காரில் இருந்த 2 பேர் காரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.பின்னர் காரை சோதனையிட்டதில் அதில் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து காரை கைப்பற்றி, காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதில் சோதனையில் 28 மூட்டைகளில் (ஒரு மூட்டையில் 5 லிட்டர் கொண்ட சாராய பாக்கெட்டுகள் 5 உள்ளது) சாராயம் இருந்தது. சாராய பாட்டில்கள் ஒரு மூட்டையில் 50 பாட்டில்கள் வீதம் 28 மூட்டைகள் உள்ளது. மொத்தம் 56 மூட்டைகள் உள்ளது. 952 லிட்டர் கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளார்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த

    2 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    மும்பையில் கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலிடம் இருந்து 106 கிலோ தங்கம் மற்றும் ரூ.1 கோடியே 81 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Mumbai #GoldSmuggled
    மும்பை:

    மும்பை, டோங்கிரி பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் அதிகளவில் கடத்தி கொண்டு வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக (டி.ஆர்.ஐ.) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவத்தன்று டோங்கிரி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் வழிமறித்து நிறுத்தி சோதனை போட்டனர். இந்த சோதனையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் அதிகளவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை அதிரடியாக பறிமுதல் செய்தனர். 75 கிலோ எடை கொண்டதாக இருந்த அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.24 கோடி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் கார், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அப்துல் (வயது26), சேக் ஆகாத் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் சிலருக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    அதன்பேரில் இதில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த நிசார் அலி (வயது 43), டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் சோயிப் (47), நகை வியாபாரி ராஜூ மனோஜ் ஜெயின் (32), பழவியாபாரி ஆகுல் (39), பித்தளை பொருள் வியாபாரி ஹாப்பி தக்காட் (34) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    முக்கிய குற்றவாளியான நிசார் அலி துபாயில் கால் சென்டர் நடத்தி வருகிறார். அவர் தான் தங்கத்தை பித்தளை என கூறி துபாயில் இருந்து கடத்தி மும்பைக்கு கொண்டு வருவார். இதற்கு பித்தளை பொருள் வியாபாரி ஹாப்பி தக்காட் உடந்தையாக இருந்து உள்ளார்.

    தங்கம் மும்பை வந்தவுடன் சோயிப், ராஜூ மனோஜ் ஜெயின் ஆகியோர் அதை கள்ள சந்தையில் விற்பனை செய்வார்கள். அந்த பணத்தை துபாய் திர்ஹாமாக மாற்றி பழ வியாபாரி ஆகுல், நிசார் அலிக்கு அனுப்பி வைத்து உள்ளார். அப்துல் மற்றும் சேக் ஆகாத் டிரைவர்கள் ஆவர்.

    கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கும் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    மொத்தமாக கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.32 கோடி மதிப்பிலான 106 கிலோ தங்கம் மற்றும் ரூ.1 கோடியே 81 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பல் கடந்த 3 மாதங்களில் துபாயில் இருந்து மும்பைக்கு பித்தளை என கூறி 200 கிலோ தங்கத்தை கடத்தி வந்திருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடத்தல் கும்பலிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    தங்கச்சிமடம் பகுதியில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ராமேசுவரம்:

    தமிழக அரசு ஜனவரி 1-ந் தேதி முதல் பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.

    அதன்பேரில் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உணவுக்கடைகள், மளிகைக் கடைகள், தேனீர் கடைகள் உள்பட வர்த்தக நிறுவனங்களில் பாலிதீன் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.

    ராமேசுவரம் தாலுகா தங்கச்சிமடம் ஊராட்சி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட சிறு கடைகள் முதல் உணவு கடைகள் என பெரிய வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

    இந்த பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்ரா தலைமையில் அதிகாரிகள் சோதணை நடத்தினர். அப்போது 66 கடைகளில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன்னுக்கும் மேலான ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுத்து அபராத தொகை வசூல் செய்யப்படும் என்றும் எச்சரித்தனர்.

    இந்த சோதனையில் ராமேசுவரம் வட்டாட்சியர் சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜீவா, செந்தில்குமார், ஊராட்சி செயலாளர் கதிரேசன் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர். #tamilnews
    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற முன்னாள் பெண் கவுன்சிலரை கைது செய்த போலீசார் 90 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    இரணியல்:

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரணியல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயன் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அவர்கள் திங்கள்நகர் சந்தை அருகே வரும்போது அங்கு சந்தேகப்படும் படியாக பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறினார்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சாந்தாகுமாரி (வயது 48) என்பது தெரியவந்தது. அந்த பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர் பதுக்கிவைத்திருந்த 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாந்தாகுமாரி முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் துவரங்காடு சந்திப்பில் வரும்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த வள்ளி நாயகம் (40) என்பதும், அவர் அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசார் தொடர்ந்து அனுமதியின்றி மது விற்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். #tamilnews
    வத்தலக்குண்டுவில் ரூ.2¼ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் மளிகை கடையின் உரிமையாளரை கைது செய்தனர்.
    வத்தலக்குண்டு:

    தமிழகத்தில் புகையிலை, குட்கா, போதைபாக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டபோதும் பல்வேறு பகுதிகளில் பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் அதிக அளவு போதை பாக்குகள் விற்கப்படுகின்றன.

    குடோன்களில் பதுக்கி இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. போதை பழக்கத்துக்கு அடிமையானால் அவர்களே தேடி வந்து போதை பாக்குகளை வாங்குவதால் கடைக்காரர்கள் கூடுதல் விலை வைத்தபோதும் விற்பனை குறையவில்லை. போலீசார் இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வத்தலக்குண்டு பகுதியில் சில மாணவர்கள் மயங்கி கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்தபோது அவர்கள் குட்கா பொருட்கள், போதைபாக்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். எஸ்.பி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வத்தலக்குண்டு பிளீஸ்புரம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதே பகுதியில் உள்ள மளிகை கடையில் மாணவர்கள் போதை பாக்குகள் வாங்கியது தெரிய வந்தது. அங்கு சென்று சோதனை நடத்திய போது 18 மூடைகளில் சுமார் ரூ2¼ லட்சம் மதிப்பிலான போதை பாக்கு, குட்பா பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளர் பாலரமேஷ் என்பரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    மோட்டார் கொட்டகையில் அனுமதிபெறாமல் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எம்.அகரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் புதிதாக கிணறு வெட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கந்தன் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அங்குள்ள மோட்டார் கொட்டகையில் அனுமதி பெறாமல் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சனுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் மற்றும் மங்கலம் பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ராஜேந்திரனின் விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையை ஆய்வு செய்தபோது அங்கு அட்டை பெட்டிகளில் எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அட்டை பெட்டிகளில் இருந்த 164 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும், 155 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் தொழிலாளி கந்தன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக கந்தனின் மனைவி விஜயாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் கொட்டகையில் அனுமதிபெறாமல் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
    கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக மொபட்டில் கொண்டு சென்ற புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    மலைக்கோட்டை:

    உயிருக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு கடைகளில், விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்கள் மொபட்டில் கொண்டு சென்று வினியோகம் செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், நேற்று மாலை உணவுபாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அதிகாரி சித்ரா தலைமையில் அதிகாரிகள் திருச்சி-மதுரை சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் புகையிலை பொருட்களை ஏற்றி கொண்டு ஒரு நபர் சென்றார். அந்த, நபரை நிற்குமாறு சைகை காட்டியபோது நிற்காமல் வேகமாக சென்றதால் அவரை அதிகாரிகள் காரில் விரட்டி சென்று மெயின்கார்டுகேட் சிக்னல் அருகே மடக்கி பிடித்தனர்.

    இதையடுத்து அவர் மொபட்டில் வைத்து இருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், மொபட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் உறையூரை சேர்ந்த சிவகுமார் என்பதும், மாநகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு புகையிலை பொருட்கள் வினியோகம் செய்ததற்கான ரசீது வைத்து இருந்ததும் தெரியவந்தது.

    ஆனால், அவர் புகையிலை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார். அவற்றை பதுக்கி வைத்துள்ள குடோன் எங்குள்ளது என்ற தகவல்களை தெரிவிக்க மறுத்து விட்டார். இதையடுத்து உணவுபாதுகாப்புத்துறையினர் அவரை கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    விளாத்திகுளத்தில் கிட்டங்கியில் பதுக்கி வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் கிட்டங்கியில் பதுக்கி வைத்து இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விளாத்திகுளம் காமராஜர் நகரை சேர்ந்தவர் கனிராஜ். இவருடைய மகன் ஜெயராஜ் (வயது 45). அவர் மிட்டாய், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரி. வெளியூர்களில் இருந்து மொத்தமாக வாங்கி வரும் பொருட்களை விளாத்திகுளம் கீழரத வீதியில் உள்ள கிட்டங்கியில் வைத்து, சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இவருடைய கிட்டங்கியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு, அவைகள் வெளியூர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலையில் குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.இதனையடுத்து போலீசார் அந்த புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    தூத்துக்குடியில் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தார். #Tobacco
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுப்பையா தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 50). இவர் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய சந்திப்பு பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்து விற்பனை செய்து வந்தார். இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் அந்த கடையில் சோதனை நடத்தினார். கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த தடைசெய்யப்பட்ட 20 புகையிலை பாக்கெட்டுகளை அவர் பறிமுதல் செய்தார். இது தொடர்பாக மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

    இதே போன்று புதுக்கோட்டை அருகே உள்ள மங்கலகிரி விலக்கு பகுதியில் சுரேஷ்குமார்(35) என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரை புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகராஜா கைது செய்தார். அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை அவர் பறிமுதல் செய்தார்.
    திருப்பூரில் 2 கடைகளில் இருந்து 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பாலித்தீன் பைகள், டம்ளர், விரிப்புகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதனால் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்களை மாநகராட்சி அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். அதன்படி, திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட பி.என்.ரோட்டில் உள்ள மொத்த வியாபார மளிகை கடைகளில் நேற்று காலை உதவி ஆணையர் செல்வநாயகம் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கடையில் இருந்து சுமார் 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

    இதேபோல் மற்றொரு கடையிலும் ½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக பொதுமக்களிடம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் ஆலோசனை கூறினார்கள். இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் சின்னத்துரை உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். 
    தமிழகத்தில் கட்டிட காண்டிராக்டர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.120 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் சிக்கியது. #ITRaid #SPKConstruction
    சென்னை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியை சேர்ந்தவர் செய்யாத்துரை (வயது 60). இவர் அரசு முதல் நிலை காண்டிராக்டர். இவருக்கு கருப்பசாமி, ஈஸ்வரன், நாகராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய 4 மகன்கள் உள்ளனர்.

    செய்யாத்துரை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளில் நடைபெறும் பல்வேறு சாலைப்பணிகள், கட்டிட கட்டுமான பணிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதும் செய்து வருகிறார்.

    தற்போது மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கப்பலூர் வரையிலான சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிக்கான ஒப்பந்தத்தை சேகர்ரெட்டி என்பவர் எடுத்து இருந்தாலும் அந்தவேலையை செய்யாத்துரையே செய்து வருகிறார். இதே போல் விருதுநகர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை 5 ஆண்டுகளுக்கு பராமரிக்க சுமார் ரூ.600 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது.



    அருப்புக்கோட்டை, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் முக்கிய சாலை அமைக்கும் பணிகளும், கட்டுமான பணிகளும் நடப்பதால் அங்கு அலுவலகங்களும் உள்ளன. இவருக்கு கல்குறிச்சியில் நூற்பாலையும், கல்லூரணி பகுதியில் ஒரு கல்குவாரியும் உள்ளன. மேலும் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் எஸ்.பி.கே. என்ற 5 நட்சத்திர ஓட்டலும் உள்ளது.

    இந்த நிலையில் பாலையம்பட்டியில் உள்ள அவரது வீடுகளுக்கு நேற்று காலை 6 மணி அளவில் வருமான வரித்துறையினர் 5 கார்களில் வந்து அதிரடியாக நுழைந்தனர். வீட்டிற்குள் இருந்த யாரையும் வெளியே செல்லவும், யாரும் உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. 16-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.



    செய்யாத்துரைக்கு சொந்தமான 3 வீடுகள் மற்றும் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடைபெற்றது. செய்யாத்துரையின் மகன்கள் கருப்பசாமி, பாலசுப்பிரமணியன் ஆகியோரை அழைத்து விசாரணை செய்து பின்னர் கருப்பசாமியை விருதுநகர் ரோட்டில் உள்ள வங்கிக்கு காரில் அழைத்துச் சென்றனர். அங்கும் விசாரணை மேற்கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் 50 இடங்களில் 200 வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, நேற்று காலை 6 மணி முதல் சோதனையை மேற்கொண்டு உள்ளனர்.

    சென்னையில் எஸ்.பி.கே. நிறுவனத்துடன் தொடர்புடைய, பெசன்ட் நகரில் உள்ள டி.வி.எச் என்ற நிறுவனத்திலும் சோதனை நடந்தது. இதன் உரிமையாளர் கே.என். ரவிச்சந்திரன், திருச்சியை சேர்ந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார். இவருடைய வீட்டிலும் சோதனை நடந்தது. ரவிச்சந்திரன் வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த கார் எஸ்.பி.கே. நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும் கூறப்படுகிறது.

    இதே போன்று, சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரிரெங்கன் சாலை, பார்த்த சாரதி கார்டன் தெருவில் உள்ள செய்யாத்துறையின் உறவினர் தீபக் என்பவருடைய வீடு மற்றும் கோவிலம்பாக்கத்தில் உள்ள அவருக்கு சொந்தமான ‘எவால்வு குளோத்திங் கம்பெனி’யிலும் சோதனை நடந்தது. தீபக் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் மூட்டையாக கட்டி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

    சேத்துப்பட்டில் உள்ள ஜோன்ஸ் என்பவருடைய வீடு மற்றும் மேத்தா நகரில் உள்ள கூட்டு நிறுவனத்தின் நிர்வாகி வீடு மற்றும் செய்யாத்துரையின் மகன் நாகராஜின் வீடு உள்பட எஸ்.பி.கே. நிறுவனத்தின் தொடர்புடைய நிறுவன அலுவலகங்கள் மற்றும் அதனுடைய நிர்வாகிகளின் வீடுகள் உள்ள அண்ணாநகர், அபிராமபுரம், பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனை நடந்தபோது அலுவலகங்கள் முற்றிலும் இழுத்து மூடப்பட்டு உள்ளே இருந்து வெளியேயும், வெளியில் இருந்து உள்ளேயும் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    இந்த சோதனையின் போது வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், கட்டுமானம் நடந்து வரும் பணிகளுக்கான ஒப்பந்த கோப்புகள், வங்கி ஆவணங்கள் உள்பட பல்வேறு ஆவணங்களை விசாரணைக்காக வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.

    இந்த சோதனையில் கணக் கில் வராத ரூ.120 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    வீடுகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டு இருந்த கார்களை சோதனை செய்தனர். அந்த கார்களில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் திகைப்படைந்தனர். பின்னர் அந்த பணத்தை கைப்பற்றி அவற்றை எண்ணினார்கள்.

    திருவள்ளூர், நாமக்கல், பொள்ளாச்சி, ராமநாதபுரம் கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர் இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால், இப்பகுதியில் 5 ஆண்டுகளுக்கு நடக்கும் பராமரிப்பு, புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை இந்த நிறுவனம் கவனித்து வருவதாக கூறப் படுகிறது.

    புதிதாக விருதுநகர் கோட்டத்தையும் இந்த நிறுவனத்துடன் ஒப்படைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டதால், இந்த விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    எஸ்.பி.கே. கட்டுமான நிறுவனம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் நிர்வாகிகளின் வீடுகளில் இருந்து மூட்டை, மூட்டையாக பறி முதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மதிப்பிடப்பட்டு வருகிறது. சேத்துப்பட்டைச் சேர்ந்த ஜோன்ஸ் என்பவருடைய காரில் இருந்து ரூ.25 கோடி, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் காரில் இருந்து ரூ.24 கோடி மற்றும் தீபக் வீட்டில் இருந்து ரூ.28 கோடியும் பறி முதல் செய்யப்பட்டது.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டு வருகிறது. அதே போன்று பறிமுதல் செய்யப்பட்ட 100 கிலோ தங்கம் மதிப்பீடு செய்யும் பணியும் நடந்து வருகிறது. எஸ்.பி.கே. நிறுவனம் மற்றும் அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய கூட்டு நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தொழில் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மேலும் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்க வேண்டியிருப்பதால் தொடர்ந்து வருமான வரி சோதனையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.
    ×