search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman councilor"

    • அன்னதானம் வழங்குவதற்கு கோவில் கமிட்டியிடம் அனுமதி பெற்று இருந்தேன்.
    • மின் மயானம் அமைப்பதில் இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஸ். இவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்குவதற்கு கோவில் கமிட்டியிடம் அனுமதி பெற்று இருந்தேன். தற்போது, என்னையும், எனது கணவரையும், கோவிலுக்குள் வரவேண்டாம் என்றும் அன்னதானத்தை வேறு நபர் வழங்குவதாகவும் கூறுகின்றனர். இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறும்போது " அந்தப் பகுதியில் மின் மயானம் அமைப்பதில் இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. தற்போது கோவில் வழிபாட்டில் எதிரொலிக்கிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற முன்னாள் பெண் கவுன்சிலரை கைது செய்த போலீசார் 90 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    இரணியல்:

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இரணியல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயன் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அவர்கள் திங்கள்நகர் சந்தை அருகே வரும்போது அங்கு சந்தேகப்படும் படியாக பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறினார்.

    இதில் சந்தேகம் அடைந்த போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சாந்தாகுமாரி (வயது 48) என்பது தெரியவந்தது. அந்த பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர் பதுக்கிவைத்திருந்த 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாந்தாகுமாரி முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் துவரங்காடு சந்திப்பில் வரும்போது அங்கு வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த வள்ளி நாயகம் (40) என்பதும், அவர் அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். போலீசார் தொடர்ந்து அனுமதியின்றி மது விற்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து வருகின்றனர். #tamilnews
    ×