search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவிப்பதாக பெண் கவுன்சிலர் புகார்
    X

    பெண் கவுன்சிலர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த காட்சி.

    கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவிப்பதாக பெண் கவுன்சிலர் புகார்

    • அன்னதானம் வழங்குவதற்கு கோவில் கமிட்டியிடம் அனுமதி பெற்று இருந்தேன்.
    • மின் மயானம் அமைப்பதில் இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் சுகன்யா ஜெகதீஸ். இவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலில் அன்னதானம் வழங்குவதற்கு கோவில் கமிட்டியிடம் அனுமதி பெற்று இருந்தேன். தற்போது, என்னையும், எனது கணவரையும், கோவிலுக்குள் வரவேண்டாம் என்றும் அன்னதானத்தை வேறு நபர் வழங்குவதாகவும் கூறுகின்றனர். இது குறித்து கேட்டபோது மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறும்போது " அந்தப் பகுதியில் மின் மயானம் அமைப்பதில் இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. தற்போது கோவில் வழிபாட்டில் எதிரொலிக்கிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றனர்.

    Next Story
    ×