என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
300-க்கும் மேற்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
- கடைகளில் நடந்த சோதனையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
- ஆய்வில் கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.38,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில்தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக் பொருட்கள் பயன்படு த்தப்படுகிறதா?. என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்ஆய்வு மேற்கொள்ள உத்தரவி ட்டார்.
அதன் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம் ஆகியோர் தலைமையில் விளார் ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி ரத்தினசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற ரத்னதினசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் கடை கடையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததுஇதையடுத்து தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக்பொருட்களை பறிமுதல் செய்ய ப்பட்ட தோடு சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விளார் பகுதியில் மட்டும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் தஞ்சை ஒன்றியம் முழுவதும் 61 ஊராட்சிகளில் மேற்கொ ள்ளப்பட்ட ஆய்வில் 300-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.38,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்த சோதனை மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இதில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சித்ரா ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனே இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்