search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bundles of alcohol"

    • போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தினர்.
    • சாராய பாட்டில்கள் ஒரு மூட்டையில் 50 பாட்டில்கள் வீதம் 28 மூட்டைகள் உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் காவல் சரகம் மகாராஜபுரம் மெயின் ரோடு வழியாக காரில் சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்ககாிடைத்துள்ளது.

    இதன்ரிபேரில் இரவு 9 மணியளவில் ரகசிய தகவலின் பேரில் செம்பனா ர்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வந்த காரை தடுத்து நிறுத்தினர். அப்பிபோது காரில் இருந்த 2 பேர் காரை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.பின்னர் காரை சோதனையிட்டதில் அதில் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து காரை கைப்பற்றி, காவல் நிலையம் கொண்டு வந்தனர். இதில் சோதனையில் 28 மூட்டைகளில் (ஒரு மூட்டையில் 5 லிட்டர் கொண்ட சாராய பாக்கெட்டுகள் 5 உள்ளது) சாராயம் இருந்தது. சாராய பாட்டில்கள் ஒரு மூட்டையில் 50 பாட்டில்கள் வீதம் 28 மூட்டைகள் உள்ளது. மொத்தம் 56 மூட்டைகள் உள்ளது. 952 லிட்டர் கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளார்.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த

    2 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

    ×