search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM"

    முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேச வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறியுள்ளனர். #JactoGeo #Edappadipalaniswami

    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு ஒன்று திரண்ட ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    அப்போது ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் சுப்பிரமணி, வெங்கடேசன், அன்பரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜாக்டோ-ஜியோ கோரிக்கைகளில் நியாயம் உள்ளது. இதை நீதிமன்றம் உணர்ந்துள்ளது. எனவே முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு சுமூக தீர்வு காண முன் வர வேண்டும்.

    வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது என்று ஒரு மிரட்டல் கடிதத்தை தமிழகம் முழுவதும் தலைமை செயலாளர் அனுப்பி உள்ளார். (17)பி பிரிவை பயன்படுத்துவோம் என்று சொல்லி உள்ளார்.

    இந்த போராட்டத்தில் 8 லட்சம் பேர் பங்கேற்று உள்ளனர். அரசு மிரட்டலுக்கு பணிய மாட்டோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம். எஸ்மா, டெஸ்மா எந்த சட்டம் பாய்ந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். எங்களை கைது செய்தாலும் சம்பள பிடித்தம் செய்தாலும் கவலைப்பட போவதில்லை.


    எங்களது கோரிக்கைகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய உயர்வு முரண்பாடுகளை களைய வேண்டும், 35 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, நூலகர், செவிலியர்களை பணி நிரந்தரம் செய்தும், மதிப்பூதிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்தும் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கிற அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும், தொடக்க பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளோடு இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராடுகிறோம்.

    பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்த அரசு இருந்தால் தலைமை செயலாளரின் அறிக்கையை ஒதுக்கி வைத்து விட்டு முதல்-அமைச்சர் எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    தலைமை செயலாளர் 21 மாத நிலுவைத் தொகையை பெற்று விட்டார். தலைமைச் செயலாளருக்கு பென்சன் உண்டு. ஆனால் 5 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு இல்லை. அதைத்தான் கேட்கிறோம்.

    தமிழக அரசு எங்களை தொடர்ந்த ஏமாற்றியதால் நீதிமன்றமும் எங்களது வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்கவில்லை.

    எங்களது போராட்டத்தால் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாதிப்பு வராது. ஏனென்றால் அனைத்து பாடங்களையும் நடத்தி முடித்து அவர்களை தேர்வுக்கு தயார் செய்துள்ளோம். அப்படியே போராட்டம் நீடித்தாலும் ஆசிரியர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி பணியாற்றுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.  #JactoGeo #Edappadipalaniswami

    சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. #GIM2019 #TNCabinet #TNGovt
    சென்னை:
     
    சென்னையில் வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள் குறித்து இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின் முடிவில் புதிய நிறுவனங்கள், தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்நிலையில், சென்னையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
     
    ஏற்கனவே இதற்கு முன்பு நடத்தப்பட்ட 2 அமைச்சரவைக் கூட்டங்களிலும், உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு தொழில் நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    2015ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது. #GIM2019 #TNCabinet #TNGovt
    மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். கவர்னர் ஆனந்தி பென் அவருக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார். #Kamalnath #MadhyapradeshCM
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தல் முடிவுகளில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வுக்கும் காங்கிரசுக்கும் இடையே இழுபறி நிலை நீடித்தது. மறுநாள் அதிகாலைவரை நீடித்த வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை கிடைக்காமல் காங்கிரஸ் கட்சி திணறியது.

    அம்மாநிலத்தில் உள்ள 300 சட்டசபை தொகுதிகளில் 114 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பிடித்திருந்தது. பா.ஜ.க. 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி உரிமை கோரியது.

    இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநில தலைநகர் போபாலில் உள்ள ஜம்பூரி திடலில் இன்று பிற்பகல் நடைபெற்ற விழாவில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் முதல் மந்திரியாக கமல்நாத் பதவி ஏற்றுக்கொண்டார். அம்மாநில கவர்னர் ஆனந்தி பென் அவருக்கும் இதர மந்திரிகளுக்கும் பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.



    இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, மத்தியப்பிரதேசம் முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக இன்று பதவியேற்ற அசோக் கெலாட், துணை முதல் மந்திரி சச்சின் பைலட், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் திக்விஜய சிங், மல்லிகார்ஜுன் கார்கே, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #Kamalnath #MadhyapradeshCM

    மத்திய பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் கமல் நாத் வரும் 17-ம் தேதி முதல்வராகப் பதவியேற்க உள்ளார். #MadhyaPradeshCM #KamalNath
    போபால்:

    5 மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.
     
    ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரசுக்கு சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது. சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால், காங்கிரஸ் பலம் 121 ஆக உயர்ந்தது.



    இதையடுத்து, மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர்.

    பின்னர் முதல் மந்திரியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தனர். இவர்களில் திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் கமல்நாத் - ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக கமல் நாத் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வரும் 17-ம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார். போபாலில் உள்ள லால் பாரடே கிரவுண்டில் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. #MadhyaPradeshCM #KamalNath
    மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தன் பதவியை ராஜினாமா செய்தார். #MadhyaPradeshElections2018 #Mayawati #BSPSupportCongress
    போபால்:

    மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. மெஜாரிட்டியை நெருங்கிய காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பதற்கு, மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளனர்.



    பாஜக ஆட்சியை இழந்துள்ள நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று மதியம் ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சவுகான், ‘நான் இப்போது சுதந்திரமாக இருக்கிறேன். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளேன். பாஜகவின் தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். கமல் நாத்துக்கு என் வாழ்த்துக்கள்’ என கூறினார். #MadhyaPradeshElections2018 #Mayawati #BSPSupportCongress
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என நாகையில் ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #GajaCyclone #EdappadiPalaniswami
    நாகை:

    நாகையில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி ஆறுதல் கூறினர். பின்னர் நாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாகையில் புயல் பாதிப்பு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:-

    கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கஜா புயலுக்கு நாகையில் மட்டும் 15 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.



    அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

    புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளோம். மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #EdappadiPalaniswami


    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்வதற்கு முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். #GajaCyclone #EdappadiPalaniswami #CentralTeam
    சென்னை:

    கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர். பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசி, நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது.

    இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். மத்திய உள்துறை அதிகாரி டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான இந்த குழு, இன்று காலை சென்னை தலைமை செயலகத்துக்கு வந்தனர். தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர்.

    அப்போது, கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து பேசப்பட்டது. எந்தெந்த பகுதிகளில் எப்போது ஆய்வு செய்வது? அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன? என்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது.   இந்த சந்திப்பின்போது அமைச்சர் உதயகுமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

    அதன்பிறகு அதிகாரிகளுடனும் மத்திய குழு ஆலோசனை நடத்த உள்ளனர். அதன் பிறகு இன்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய குழுவினர் திருச்சிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டைக்கு சென்று கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிகிறது.



    அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளில் (25 மற்றும் 26-ந் தேதிகளில்) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். புயல் அதிகமாக பாதித்த இந்த 4 மாவட்டங்களை மட்டும் அவர்கள் பார்வையிடலாம் என தெரிகிறது.

    கஜா புயல் ஏற்படுத்திய சேத  விவரங்களை கணக்கிட்டு சில நாட்களில் மத்திய அரசுக்கு மத்திய குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கும்.   #GajaCyclone #EdappadiPalaniswami  #CentralTeam
    தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Diwali #TNCM #EdappadiPalaniswami #BanwarilalPurohit #TNGovernor
    சென்னை:

    இந்து மதத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இந்துக்கள் மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மதங்களும் கொண்டாடும் பொதுவான பண்டிகையாக திகழ்கிறது. இந்த தீபாவளி திருநாளில் புத்தாடை உடுத்தி, வெடி வெடித்து உறவினர்களிடமும், பெற்றோரிடமும் ஆசி பெறுவது வழக்கம்.

    இந்த வருடம் தீபாவளியில் வெடி வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.



    அதனை மறுபரிசீலனைக்கு கோரிய தமிழக அரசின் மனு நிராகரிக்கப்பட்டு, அதற்கு பதிலாக 2 மணி நேரம் என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்தது. இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.



    உத்தரவை மீறி வெடி வெடிப்பவர்களுக்கு, 6 மாதம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பட்டாசு விற்பனை சில இடங்களில் மந்தமடைந்தது.

    இருப்பினும், இன்று தீபாவளி திருநாள் அனைவராலும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வெடி வெடித்தும், பலகாரங்களை மத வேறுபாடு இன்றி பகிர்ந்தும் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த தீபாவளி திருநாளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், ஒளியின் திருநாள் இந்த தீபாவளி நாள் என்றும், நாடு முழுவதும் உள்ள மக்கள் மேல தாளத்துடன் கோலாகலமாக இந்த பண்டிகையை கொண்டாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



    இதே போல்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், நரகாசுரனை வதம் செய்த நாளை கொண்டாடும் தீபாவளி அன்று, மகிழ்ச்சியும், செழிப்பும் வந்து சேரட்டும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், துணை முதல்வர் ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #Diwali #TNCM #EdappadiPalaniswami #BanwarilalPurohit #TNGovernor
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DiwaliWishes #TNGovernor #TamilNaduCM
    சென்னை:

    இருள் நீக்கி ஒளி தரும் தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. மக்களை வதம் செய்த கொடிய அசுரனான நரகாசுரனை வதம் செய்த தினத்தையே தென் மாநிலங்களில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ராவணனை அழித்து வனவாசம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பியதும் அவருக்கு பட்டாபிஷேகம் செய்த தினமாக வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.



    இந்நிலையில் தீபாவளி கொண்டாடும் தமிழக மக்களுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DiwaliWishes #TNGovernor #TamilNaduCM
    ‘திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு’ திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த 70 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரூபாயை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #Thirukkural #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” எனும் திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிப்பு செய்யும் மாணவ, மாணவியர்கள் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குக் குறள் பரிசாக ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 2011-2012ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 36 பேருக்கு வழங்கப்பட்டு வந்த குறள் பரிசு, 2015-2016ம் ஆண்டு முதல் 50 பேருக்கு என உயர்த்தப்பட்டது.

    மேலும், 2018-2019ம் ஆண்டு முதல் 50லிருந்து 70 பேருக்கு குறள் பரிசு வழங்க முதல்-அமைச்சரால் உயர்த்தி ஆணையிடப்பட்டது. இதுவரை 329 மாணவ, மாணவியருக்கு குறள் முற்றோதல் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின் கீழ் 2018-2019ம் ஆண்டிற்கு 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த 70 மாணவ, மாணவியர்கள் தெரிவு செய்யப்பட்டு, குறள் முற்றோதல் பரிசு ஒட்டுமொத்தத் தொகையாக ஒவ்வொரு மாணவருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 7 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வெங்கடேசன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (பொறுப்பு) விஜயராகவன் கலந்து கொண்டனர். #Thirukkural #EdappadiPalaniswami

    தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முதல் அமைச்சருடன் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தினார். #MLAsDisqualificationCase #EdappadiPalaniswami #CVShanmugam
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு சென்றது.

    மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கி ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி நிறைவு செய்து தீர்ப்பை ஒத்திவைத்தார்.



    தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதல் அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

    இதேபோல் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.

    இதற்கிடையே சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. #MLAsDisqualificationCase #EdappadiPalaniswami #CVShanmugam

    விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை முழுமையாக கணினி மயமாக்கும் மின்னணு கொள்முதல் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை முழுமையாக கணினி மயமாக்கும் வகையில் 7 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மின்னணு கொள்முதல் திட்டத்திற்கான மென்பொருள் செயல்முறையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மின்னணு முறையில் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்முதல் செய்வதற்கு ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு ஒரு இயந்திரம் வீதம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் மொத்தமாக 2100 அதற்கு தேவையான மென்பொருள்களும் உருவாக்கப்பட்டு அதை நிறுவுவதற்கு தேவையான சாதனங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.



    மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு முழுமையான மின்னணு கொள்முதல் முறை நடைமுறைப்படுத்தப்படும்.

    546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குரோம்பேட்டை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உலக தரத்திலான உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

    காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களையும் திறந்து வைத்தார்.

    காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடியில் உள்ள முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

    கனிம நிறுவனத்தின் சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், செவ்வாத்தூர் கிராமத்தில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள வெர்மிகுலைட்டை விரிவாக்கும், தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். #EdappadiPalaniswami

    ×