search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Computerization"

    விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை முழுமையாக கணினி மயமாக்கும் மின்னணு கொள்முதல் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் கொள்முதல் பணிகளை முழுமையாக கணினி மயமாக்கும் வகையில் 7 கோடியே 6 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மின்னணு கொள்முதல் திட்டத்திற்கான மென்பொருள் செயல்முறையினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் மூலம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மின்னணு முறையில் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்முதல் செய்வதற்கு ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு ஒரு இயந்திரம் வீதம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் மொத்தமாக 2100 அதற்கு தேவையான மென்பொருள்களும் உருவாக்கப்பட்டு அதை நிறுவுவதற்கு தேவையான சாதனங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.



    மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு முழுமையான மின்னணு கொள்முதல் முறை நடைமுறைப்படுத்தப்படும்.

    546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குரோம்பேட்டை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு உலக தரத்திலான உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை காணொலிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

    காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களையும் திறந்து வைத்தார்.

    காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணியிலுள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஆவடியில் உள்ள முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

    கனிம நிறுவனத்தின் சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், செவ்வாத்தூர் கிராமத்தில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள வெர்மிகுலைட்டை விரிவாக்கும், தொழிற்சாலையை திறந்து வைத்தார்.

    ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் 1 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதி திராவிடர் நலப்பள்ளி மாணவர் விடுதிக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். #EdappadiPalaniswami

    நாமக்கல்லில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையத்தை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள துணைமின் நிலைய வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மைய திறப்பு விழா நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலையில், கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்து மின் பயனீட்டாளர்கள் அளிக்கும் புகார்கள் கணினி மூலம் பதிவு செய்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டார்.

    பின்னர் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு மண்டல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உட்பட்ட நாமக்கல் மின்பகிர்மான வட்டத்திற்கு என பிரத்யேகமான கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் புதியதாக அமைக்கப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மின் பகிர்மான வட்டமானது நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், மற்றும் பரமத்திவேலூர் ஆகிய 4 கோட்டங்களும், 16 உபகோட்டங்களும், 76 பிரிவு அலுவலகங்களும் அடங்கியதாகும்.

    நாமக்கல் மின்பகிர்மான வட்டத்தில் மொத்தம் 6,36,000க்கு மேல் மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இதில் வீட்டு மின் இணைப்புகள் மட்டும் 4,06,273 ஆகும்.

    நாமக்கல் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட அனைத்து மின் பயனீட்டாளர்களும் 24 மணிநேரமும் செயல்படும் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மையம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1912 அல்லது 180042519124 (அனைத்து வாடிக்கையாளர்கள்)-ஐ தொடர்பு கொண்டு தங்களது மின்தடை பழுதுகளை சரி செய்து கொள்ளலாம். மின் பயனீட்டாளர்கள் மேற்கண்ட இலவச மின்சாரவாரிய சேவையை உபயோகித்து பயன்பெற வேண்டும். மின்தடை பழுது புகார்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட களப்பணியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு விரைந்து சரிசெய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி மின்தடை பழுது நீக்கும் மைய சேவை குறித்த துண்டு பிரசுரங்களை அமைச்சர் பி. தங்கமணி பொதுமக்களுக்கு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் சந்திரசேகர், நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சந்தானம் உள்பட அனைத்து பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்து 800 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதாக முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை அவிநாசி பாளையத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஓருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    கெக்டர் கே.எஸ்.பழனிசாமி முன்னிலை வகித்தார். கருவூலக் கணக்குத் துறை, முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது-

    தமிழக நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற, மாநிலஅரசு நிதிமேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியன இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்காக,தமிழக அரசு ரூ.288.91 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கியுள்ளது.

    இத்திட்டத்தினைச் செயல்படுத்த கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் முடிவுற்றுள்ளன.

    சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, பணியிட மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இப்பணியினை அக்டோபர் 2018-க்குள் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினி மயமாக்கப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்து 800 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    இத்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த 4 நாட்கள் பயிற்சி பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், கூடுதலாக 2 நாட்கள் கருவூல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

    இப்பயிற்சியின் கீழ் சம்பளம் மற்றும் சம்பளம் சாராபட்டியல்கள் தயாரித்தல். மின் பணிப்பதிவேடு பராமரித்தல், ஓய்வூதிய கருத்துருக்கள் தயாரித்தல் மற்றும் இதர இனங்கள் தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுக்கும் மேலும் பட்டியல் கடவுசெய்தல், காப்பறை செயல்பாடுகள், முத்திரைத் தாட்கள் மேலாண்மை, மின் அலுவலகம், ஓய்வூதிய வழங்கல் மற்றும் இதர இனங்கள் குறித்து கருவூலத்துறை அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மேலும் அரசின் வரவினமாக இந்நிதியாண்டில் மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் ரூ.2350 கோடி அரசுக் கணக்கில் கருவூலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×