search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cleaning work"

    • பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
    • வைத்தீஸ்வரன் கோவிலில் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இளம் நிலை உதவியாளர் பாமா மன்ற தீர்மானங்களை படித்தார்.

    தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    பின்னர் உறுப்பினர்க ளிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    கென்னடி (திமுக):-

    எனது வார்டு பகுதியில் உள்ள சாலைகளில் மண்டி கிடக்கும் முற் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரியங்கா (அதிமுக):-

    எனது பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராகவும், காவிநீராகவும் மாறியதால் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே கை பம்பு அமைத்து தர வேண்டும். சியாமளா தேவி (திமுக):-எனது வார்டு பகுதியில் தினம்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதலாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

    முத்துக்குமார் (பாமக):-

    வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தினமும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    ராஜ கார்த்திக் (அதிமுக):-

    பேரூராட்சியில் காலியாக உள்ள மேஸ்திரி பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

    வித்யா தேவி (சி பி ஐ);-

    வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் தாட்கோ கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனா (அதிமுக):-

    எனது பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    ஆனந்த் (திமுக):-

    எனது பகுதியில் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குப்பை த்தொட்டிகளை அமைத்து தர வேண்டும். செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவிலில் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை ஏற்படாத வகையில் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.

    பத்மாவதி (திமுக):-

    வைத்தீஸ்வரன் கோவில் மேல வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கோவில் வரும் பக்தர்களுக்கு ஏதுவாக போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    துணைத் தலைவர்:-

    பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமப்புகளை அகற்றுவது குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தலைவர்:-

    உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப நிறையற்ற ப்படும். குடிநீர், தெருவிளக்கு, சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்தினருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • ஜிப்மர் இயக்குனரிடம் தொழிற்சங்கத்தினர் மனு
    • ஆண் பெண் தொழிலாளர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயக்குநரிடம் சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் ரமேசு, முருகையன், விஜயன், ஜானகிராமன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநில தலைவர் மோதிலால் ஆகியோர் ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் ஒப்பந்ததாரரிடம் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வந்த ஆண் பெண் தொழிலாளர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டு பணிபுரிந்து வந்தவர்களுக்கு பணி மறுப்பது வேதனைக்குரியது. பணியில் சேர ரூ.1 லட்சம் வரை பணம் கேட்கும் இடைத்தரகர்கள் மீது குற்றநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த சந்திப்பின்போது பணிநீக்கம் செய்யப்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பலர் பங்கேற்றனர்.

    • சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி தூய்மை பணிக்காக 15-வது நிதிக்குழு மானியத்தில் 13 பேட்டரி வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், பொறியாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுகந்தி வரவேற்று பேசினார்.

    இதில் பழனிநாடார் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணிக்காக பேட்டரி வாகனங்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் கரையாளனுர் சண்முகவேல், ஆறுமுகசாமி, பூல்பாண்டியன், சாமுவேல் மனோகர், ஆலடிப்பட்டி ராமசாமி, அப்துல்காதர், சங்கரநயினார், கூட்டுறவு கணேசன், ஸ்டீபன் சத்யராஜ், முல்லை கண்ணன், கோமதிநாயகம், செல்வகுமார், சசிகுமார், ஜோசியர் தங்க இசக்கி, மோகன், பால் என்ற சண்முகவேல், தேவேந்திரன், சமுத்திரம், கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, ரமேஷ், பரமசிவன், அந்தோணி சுதா ஜேம்ஸ், சிவஞான சண்முகலட்சுமி, அம்சா பேகம், ஜெயச்சந்திரன், சாலமோன், கந்தையா, தபேந்திரன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 5-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர் அன்பரசன், செயல் அலுவலர் ரவிசங்கர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 5-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர் அன்பரசன், செயல் அலுவலர் ரவிசங்கர், வார்டு உறுப்பினர்கள். இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வை யாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 9-வது வார்டு பகுதிகளில் உள்ள செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின் விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பரா மரிப்பு செய்தல் போன்ற பொதுமக்களின் அத்தியா வசிய தேவைகள் அனைத்தும் மேற்கொண்டனர்.

    • நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
    • சாலையின் இரு புறங்களிலும் சுத்தப்படுத்தப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

    நெல்லை:

    தேரோட்டத்தை ஒட்டி மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், டவுன் உதவி கமிஷனர் வெங்கட் ராமன் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் 4 ரத வீதிகளிலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

    சாலைகளை சுத்தம் செய்தல், ப்ளீச்சிங் பவுடர் தூவுதல், சாக்கடைகள் அப்புறப்படுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்ட னர். இது தவிர டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து நயினார் குளம் சாலை வரையிலும் சாலையின் இரு புறங்களிலும் சுத்தப்படுத்தப்பட்டு ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.

    மேலும் மவுண்ட் ரோடுகளிலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்தனர்.

    மேலும் ஆங்காங்கே சின்டெக்ஸ் தொட்டிகள் அமைத்து குடிநீர் வழங்கி பக்தர்களின் தாகம் தீர்த்தனர். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தியை பக்தர்களும், தன்னார்வலர்களும் பாராட்டினர்.

    • விளையாட்டு மைதானத்தில், மரங்கள் வெட்டப்படாமல் புதர்போல மண்டி கிடப்பதாக கூறியுள்ளனர்.
    • பள்ளி மைதானத்தை முழுவதும் தூய்மை செய்யும் வரை இந்த பணி நடைபெறும் என அவர் கூறினார்.

    கடலூர்:

    விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளியில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விழிப்புணர்வு உரையாற்றினார். அப்போது பள்ளி மாணவிகள் தங்கள் பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானத்தில், மரங்கள் வெட்டப்படாமல் புதர்போல மண்டி கிடப்பதாகவும், அதனால் தங்களால் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட முடியாமல் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் சமூக விரோதிகள் சுவர் ஏறி குதித்து வந்தாலும் அதனை கண்காணிக்க முடியாத நிலையில் மரங்கள் புதர் போல சூழுந்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த டி.எஸ்.பி விருத்தாசலம் போலீஸ் கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், ஆலடி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை மற்றும் கருவெப்பிலங்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலைய ங்களில் பணிபுரியும் காவலர்களை கொண்டு பள்ளியின் மைதானத்தை தூய்மை ப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமையில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையில், 20 மகளிர் போலீசார் உட்பட 60க்கும் மேற்பட்ட காவலர்கள் விளையாட்டு மைதா னத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி மைதானத்தில் மண்டி கிடந்த புதர்கள், புற்கள் உள்ளிட்டவற்றை மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றை கொண்டு தூய்மைபடுத்தினர். இது பற்றி டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கூறுகையில், பள்ளி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகை யில் தூய்மை பணி நடைபெற்றதாகவும், பள்ளி மைதானத்தை முழுவதும் தூய்மை செய்யும் வரை இந்த பணி நடைபெறும் என அவர் கூறினார்.

    • ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.
    • நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.

    செங்கல்பட்டு:

    மறைமலைநகர் நகராட்சியில் கடந்த ஆண்டு ஜூன் 3-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    அதன்படி ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மறைமலைநகர் நகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நகராட்சி முழுவதும் மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டு துப்புரவு பணி நடந்து வருகிறது.

    திடக்கழிவுகளை பிரித்து சேகரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசக சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வீடு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 6 நீர்நிலைகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு சுமார் 1026 மரக்கன்றுகள் நடப்பட்டது. நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்கள், விளம்பர தட்டிகள் அகற்றப்பட்டன.

    கட்டிட இடிபாடுகள் 160 டன் அகற்றப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியில் அன்றாடம் திடக்கழிவுகளை உரிய முறையில் பிரித்தளித்த இல்லத்தரசிகள் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் மறைமலை நகராட்சி பகுதியில் இன்று சிறப்பு தூய்மை பணிகள் நடைபெற்றது.

    நகராட்சி தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தூய்மை பணிகள் நிகழ்ச்சியில் பொது மக்கள், வணிக நிறுவனங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள், தன்னார்வலர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    • நெல்லை மாநகரப் பகுதியில் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா உத்தரவின் பேரில் நெல்லை மாநகரப் பகுதியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரிலும் உதவி கமிஷனர் வெங்கட்ராமன், நகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரிலும் நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தீவிர தூய்மை பணி நடைபெற்றது.

    அதன்படி டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒட்டப்பட்டிருந்த அரசியல் கட்சி போஸ்டர்கள் கிழித்து சுத்தப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வழுக்கோடை சாலை, சேரன்மகாதேவி சாலை மற்றும் காட்சி மண்டபம் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

    இந்த பணியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார் வையாளர் மனோஜ், பரப்புரை யாளர்கள் முத்துராஜ், ஷேக், மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்்.

    • கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • கோவில் சுற்றுப்பிரகாரம், பிரகார மேடை ஆகிய வற்றில் உள்ள குப்பைகளை அகற்றினா்.

    அவினாசி :

    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் தோ்த்திருவிழாவை முன்னிட்டு சிவனடியாா்கள் சாா்பில் உழவாரப்பணி நடைபெற்றது.கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலி ங்கேஸ்வரா் கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை யொட்டி, சிவனடியாா்கள் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனா். கோவில் சுற்றுப்பிரகாரம், தளம், பிரகார மேடை ஆகிய வற்றில் உள்ள குப்பைகளை அகற்றினா். இதையடுத்து பட்டி அரசமர விநாயகா், அவிநாசி லிங்கேஸ்வரா், கருணாம்பிகையம்மன், முருகன், விநாயகா் , சண்டிகேஸ்வரா், காலபைரவா் கோவில்கள், அா்த்தமண்டபம், கனகசபை, மகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தினா்.

    இதைத்தொடா்ந்து மூலவா், உற்சவமூா்த்தி, பஞ்சலிங்கம், நந்திதேவா், கொடிக்கம்பம், பலிபீடம் ஆகியவற்றையும் கழுவி தூய்மைப்படுத்தினா். சுவாமிக்கு அணிவி க்கக்கூடிய அனைத்து வஸ்திரங்களையும் சலவை செய்து உலரவைத்து தூய்மை செய்தனா். உழவா ரப்பணியில் பெண்கள் உள்பட 100 க்கும் மேற்ப ட்டோா் பங்கேற்றனா். பிறகு தெப்பக்குளத்தையும் சுத்தம் செய்தனா். மதியம் அவிநாசி லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றன. நிறைவாக சிவனடியாா்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பஞ்சபுராணத்துடன் அனைவரும் கூட்டு பிராா்த்தனை செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை கலெக்டர் ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார்.
    • நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் நெகிழியின் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சள் பையின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக தீவிர தூய்மை பணி முகாம் பேரணியினை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து வாசுதேவநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து வாசுதேவநல்லூர் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 32.60 லட்சம் மதிப்பீட்டில் புதுக்காலனியில் பூங்கா அமைக்கும் பணிகளையும், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் செண்பகக்கால் ஓடைத் தெருவில் சிமெண்ட் பேவர் பிளாக் சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 161 லட்சம் மதிப்பீட்டில் பட்டா ஊரணியை மேம்பாடு செய்யும் பணிகளுக்கு தனுஷ்குமார் எம்.பி., வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ, சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத் தலைவர் லைலா பானு, செயல் அலுவலர் மோகன மாரியம்மாள், கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • தூய்மை பணியாளர்கள் போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.

    நெல்லை:

    சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் நடத்தப்படும் இந்த மெகா தூய்மை பணியில் இந்த மாதத்தில் 2-வது சனிக்கிழமையான இன்று வானகரம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது.

    டவுன் மண்டலத்துக்கு உட்பட்ட கீழரத வீதி, மேல ரதவீதி மற்றும் குற்றாலம் ரோடுகளில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில், உதவி கமிஷனர் வெங்கட் ராமன் மேற்பார்வையில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில், தூய்மை பணியாளர்கள் பொதுஇடங்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தினர்.

    இதேபோல் பாளை பகுதியில் சுகாதார அலுவலர் முருகேசன் தலைமையில் சுகாதார ஆய்வா ளர்கள் சங்கரநா ராயணன், பெருமாள், அந்தோணி மேற்பார் வையில் தூய்மை பணியா ளர்கள் போஸ்டர்களை கிழித்து அப்புறப்படுத்தும் பணியை தொடர்ந்தனர்.

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இறப்பு பதிவு செய்ய தனியாக ஒரு மருத்துவரை நியமிக்கவேண்டும். சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் ஷகிலா தலைமையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. செயல் அலுவலர் யமுனா துணைத்தலைவர் கேசவன் முன்னிலை வகித்தனர்.

    பிறப்பு-இறப்பு, வரவுசெலவுத்திட்டம் கவுன்சிலர்களின் கோரிக்கை உட்பட 24 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டம் தொடங்கியதும் ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் பேரூராட்சியின் தூய்மை பணிகள் செய்துதரப்படவில்லை என்று கடுமையாக சாடினர். தொடர்ந்து புகார் தெரிவித்தும் தூய்மை பணிகளில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக கூறினர். அதை தொடர்ந்து கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    மேலும் காந்திநகர் 11-வது வார்டில் நரிக்குறவர்கள் சுமார் 25 குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு சரியான குடிநீர் வசதி செய்து தர வேண்டும் தற்போது உள்ள குழாய்கள் பழமையானதும் சேதமடைந்தும் இருப்பதால் இதனை முறையாக மாற்றி தரவேண்டும்.

    இறப்பு பதிவு செய்வதற்கு மருத்துவர் சான்று பெறமுடியாமல் பலர் தவித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இறப்பு பதிவு செய்ய தனியாக ஒரு மருத்துவரை நியமிக்கவேண்டும். சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    9-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வனத்துறையினரிடம் தெரிவித்து அவற்றை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோட்டக்கரை அன்னா நகர் பகுதியில் ஆபத்தாக உள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் யமுனா தெரிவித்தார்.

    ×