search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துப்புரவு பணி"

    • சம்பளம் வழங்காததை கண்டித்து நடந்தது
    • பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் தூய்மை பணியில் 500 பெண்களும், 400 ஆண்களும் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். மாநகராட்சியில் தனி நபர் ஒருவர் ஒப்பந்தம் மூலம் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறார்.

    தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதம்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகஸ்டு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் ஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தில் இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் ஒப்பந்த ஊழியர்களின் கணக்கில் இ.எஸ்.ஐ, பி.எப் சேர்க்கப்படவில்லை.

    இதனை கண்டிக்கும் விதமாக மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வேலையை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் செய்தனர்.

    அவர்கள் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று 12 மணிக்குள் நிலுவை சம்பளத்தை வழங்குவதாகவும், இ.எஸ்.ஐ., பி.எப். வராதவர்களுக்கு 2 நாட்களில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மாநகராட்சி பகுதியில் பணிகள் பாதிக்கப்பட்டன.

    • பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
    • வைத்தீஸ்வரன் கோவிலில் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இளம் நிலை உதவியாளர் பாமா மன்ற தீர்மானங்களை படித்தார்.

    தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    பின்னர் உறுப்பினர்க ளிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    கென்னடி (திமுக):-

    எனது வார்டு பகுதியில் உள்ள சாலைகளில் மண்டி கிடக்கும் முற் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரியங்கா (அதிமுக):-

    எனது பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராகவும், காவிநீராகவும் மாறியதால் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே கை பம்பு அமைத்து தர வேண்டும். சியாமளா தேவி (திமுக):-எனது வார்டு பகுதியில் தினம்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதலாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

    முத்துக்குமார் (பாமக):-

    வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தினமும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    ராஜ கார்த்திக் (அதிமுக):-

    பேரூராட்சியில் காலியாக உள்ள மேஸ்திரி பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

    வித்யா தேவி (சி பி ஐ);-

    வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் தாட்கோ கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனா (அதிமுக):-

    எனது பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    ஆனந்த் (திமுக):-

    எனது பகுதியில் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குப்பை த்தொட்டிகளை அமைத்து தர வேண்டும். செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவிலில் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை ஏற்படாத வகையில் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.

    பத்மாவதி (திமுக):-

    வைத்தீஸ்வரன் கோவில் மேல வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கோவில் வரும் பக்தர்களுக்கு ஏதுவாக போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    துணைத் தலைவர்:-

    பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமப்புகளை அகற்றுவது குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தலைவர்:-

    உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப நிறையற்ற ப்படும். குடிநீர், தெருவிளக்கு, சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்தினருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    ×