search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
    X

    வேலூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

    • சம்பளம் வழங்காததை கண்டித்து நடந்தது
    • பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களில் தூய்மை பணியில் 500 பெண்களும், 400 ஆண்களும் ஒப்பந்த ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர். மாநகராட்சியில் தனி நபர் ஒருவர் ஒப்பந்தம் மூலம் தூய்மை பணியை மேற்கொண்டு வருகிறார்.

    தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதம்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகஸ்டு மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் ஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தில் இ.எஸ்.ஐ., பி.எப். பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் ஒப்பந்த ஊழியர்களின் கணக்கில் இ.எஸ்.ஐ, பி.எப் சேர்க்கப்படவில்லை.

    இதனை கண்டிக்கும் விதமாக மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வேலையை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டம் செய்தனர்.

    அவர்கள் நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று 12 மணிக்குள் நிலுவை சம்பளத்தை வழங்குவதாகவும், இ.எஸ்.ஐ., பி.எப். வராதவர்களுக்கு 2 நாட்களில் வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் மாநகராட்சி பகுதியில் பணிகள் பாதிக்கப்பட்டன.

    Next Story
    ×