search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொத்தனூர் பேரூராட்சியில் 5-ம் கட்ட தூய்மை பணி
    X

    பொத்தனூர் பேரூராட்சியில் 5-ம் கட்ட தூய்மை பணி

    • பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 5-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
    • முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர் அன்பரசன், செயல் அலுவலர் ரவிசங்கர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 5-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர் அன்பரசன், செயல் அலுவலர் ரவிசங்கர், வார்டு உறுப்பினர்கள். இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வை யாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 9-வது வார்டு பகுதிகளில் உள்ள செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின் விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பரா மரிப்பு செய்தல் போன்ற பொதுமக்களின் அத்தியா வசிய தேவைகள் அனைத்தும் மேற்கொண்டனர்.

    Next Story
    ×