search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உழவாரப்பணி"

    • அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
    • முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும்.

    திருவண்ணாமலை:

    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த விழாவானது 10 நாட்கள் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு கோவிலில் மின்விளக்கு அலங்காரம் அமைக்கும் பணி, பந்தல் அமைக்கும் பணி, சாமி வீதி உலா செல்லும் வாகனங்கள் சீரமைக்கும் பணி, வாகனங்களுக்கு வர்ணம் பூசும் பணி, பஞ்சமூர்த்தி தேர்கள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு உழவார பணிகள் நடைபெற்றது. திருப்பூரை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இந்த உழவார பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோவிலில் உள்ள கொடிமரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் கழுவி சுத்தம் செய்வது, விளக்குகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டனர்.

    கோவில் வளாகத்தை கழுவி சுத்தம் செய்தனர்

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா 24-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடு கள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், சமய உரை போன்ற பல் வேறு நிகழ்ச்சிகள் நடக்கின் றன.

    10-ம் திருவிழாவான 24-ந்தேதி அம்மன் பாணா சுரனை வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 1-ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி நாகர்கோ வில் அருகே உள்ள இருளப்பபுரம் பிரசன்ன பார்வதி பசுபதீஸ்வரர் கோவில் பெண் சிவனடியார்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் உழவாரப்பணி யில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள்அம்மன் கொலு விருக்கும் கொலுமண்டபம், 24 மணி நேரமும் அணையா விளக்கு எரிந்துகொண்டி ருக்கும் வாடா விளக்கு மண்டபம், கொடிமர பிரகாரம், மூலஸ்தான கருவறை முன்பு உள்ள மண்டபம், உள்பிரகாரம், வெளி பிரகாரம் மற்றும் அனைத்து சன்னதி பகுதி களிலும் இந்த உழவாரப்பணி நடந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் சிவனடி யார்கள் கோவில் முழுவதும் தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்தனர். இந்த உழவாரப்பணி நடந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகம் முழுவதும் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.

    • அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பைங்காநாடு சிவன் கோயில் வளாகத்தில் உழவாரப்பணி நடந்தது.
    • தூய்மை இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வலியுறுத்தியதுடன் உண்மை, அகிம்சை ஆகியவை சொற்கள் அல்ல செயல்கள்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேனிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பைங்காநாடு சிவன் கோயில் வளாகத்தில் உழவாரப்பணி நடை பெற்றது.

    ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.

    பைங்காநாடுஅரசுமேனிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அசோகன், முன்னாள் தலைவர் மலர்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேனிலைப் பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் முனைவர் இராசகணேசன் தொடங்கி வைத்து பேசும்போது, காந்தியடிகளின் பிறந்தநாளில் மகாத்மா காண விரும்பிய தூய்மை இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வலியுறுத்தியதுடன் உண்மை, அகிம்சை ஆகியவை சொற்கள் அல்ல செயல்கள்.

    இவற்றை வாழ்வில் கடைப்பிடித்தாலே வாழ்வின் பயனை நாம் உணரலாம்.

    தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அடுத்தொரு பிறவி எடுத்தாவது திருக்குறளைமுழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய மகாத்மாகாந்தியின் சுயசரிதையான சத்திய சோதனை நூலை அனைவரும் படிக்க வேண்டும்.

    காந்திய சிந்தனை உலக உய்விற்கான வழி, அதனால்தான் உலக நாடுகள் எல்லாம் காந்தியின் தனிமனித வாழ்க்கையிலிருந்து நிறைய பாடங்களைக் கற்று வருகின்றன என்று கூறியதுடன்பாரதியாரின் காந்திபுகழ் வணக்க பாடல்களையும், ரகுபதி ராகவ ராஜாராம் காந்தி பஜனைப் பாடலையும் பாடினார்.

    முன்னதாக அனைவரையும் திட்ட அலுவலர் பிரான்சினா விண்ணரசி வரவேற்றார். முடிவில் உதவித்திட்ட அலுவலர் சுசீலா நன்றி கூறினார். தமிழாசிரியை இசபெல்லா நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.

    • உழவாரப் பணி மேற்கொள்ள 250 பேர்கள் குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர்.
    • கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    தஞ்சாவூர்:

    இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில் தமிழகத்தில் உள்ள பழங்கால கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு உழவாரப்பணி மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி இன்று காலை புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உழவாரப்பணி நடைபெற்றது. இதற்கு மன்ற நிறுவனர் கணேசன் தலைமை தாங்கினார்.

    இதில் இந்த மன்றத்தை சேர்ந்த சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து 250 பேர் கலந்து கொண்டு வளாகத்தில் இருந்த தேவையில்லாத புல் செடிகளை அகற்றி சுத்தப்ப டுத்தினர். குப்பைகளை அகற்றினர்.

    இந்த உழவாரப் பணியில் இறைப்பணி மன்றத்துடன் சேர்ந்து அழகிய தஞ்சை-2005 இயக்கம், உழவார பணிக்குழுவினரும் ஈடுபட்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் அழகிய தஞ்சை -2005 திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், உழவாரப்பணி குழு நிர்வா கிகள் புண்ணியமூர்த்தி ,செழியன், சீனிவாசன், முத்தமிழ் ,ஜெய்சங்கர் ,விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் பெரிய கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது.

    இதையடுத்து பெரிய கோவிலில் இருந்து உழவாரப்பணி விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியானது தெற்கு வீதி , திலகர் திடல் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வழியாக சென்றது. பின்னர் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் உழவாரப் பணி மேற்கொள்ள 250 பேர்கள் குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் அந்தந்த கோயில்களில் சுத்த பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    இன்று மாலையில் பெரிய கோவிலில் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளன.

    • நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது.
    • கோவில் வளாகத்தில் பள்ளி மாணவிகள் உழவாரப்பணி மேற்கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் உழவாரப்பணி நடைபெற்றது.

    ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தலைமை தாங்கினார்.

    திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் செயல் அலுவலர் முருகையன் உழவார பணியை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட உதவி அலுவலர் பிரேமா தேவி அனை வரையும் வரவேற்றார்.

    நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கோவில் வளாகத்தில் உழவாரப்பணி மேற்கொண்டனர். இதில் யோகா பயிற்றுனர் ஹரி கிருஷ்ணன், சர்வாலய உழவாரப்பணி செயலாளர் ஜெயபிரகாஷ், துணை தலைவர் முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    முடிவில் ஆசிரியை சத்யா நன்றி கூறினார்.

    பணிக்கான ஏற்பாடுகளை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிர்வா கத்தினர் செய்திருந்தனர்.

    • 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.
    • மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் சார்பில் 251-வது உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நடைபெற்றது. 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.

    அப்போது, ஆலயங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பை இலவசமாக வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் கந்தசாமி கோவில் அருகில் உள்ள குளம் மட்டுமின்றி மலைக் கோவில் கைலாசநாதர் கோவில், சிதம்பர சுவாமிகள் திருமடம், விநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் தியாகராஜன் ஒத்துழைப்புடன், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்ற தலைவர் ச.கணேசன் செய்திருந்தார்.

    • வருடம் தோறும் வைகாசி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி பாடலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் 63 நாயன்மார் அமைப்பு சார்பில் ராமலிங்கம் தலைமையில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • கோவில் சுற்றுப்பிரகாரம், பிரகார மேடை ஆகிய வற்றில் உள்ள குப்பைகளை அகற்றினா்.

    அவினாசி :

    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் தோ்த்திருவிழாவை முன்னிட்டு சிவனடியாா்கள் சாா்பில் உழவாரப்பணி நடைபெற்றது.கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலி ங்கேஸ்வரா் கோவில் சித்திரைத் தோ்த் திருவிழா ஏப்ரல் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை யொட்டி, சிவனடியாா்கள் கோவிலில் உழவாரப்பணி மேற்கொண்டனா். கோவில் சுற்றுப்பிரகாரம், தளம், பிரகார மேடை ஆகிய வற்றில் உள்ள குப்பைகளை அகற்றினா். இதையடுத்து பட்டி அரசமர விநாயகா், அவிநாசி லிங்கேஸ்வரா், கருணாம்பிகையம்மன், முருகன், விநாயகா் , சண்டிகேஸ்வரா், காலபைரவா் கோவில்கள், அா்த்தமண்டபம், கனகசபை, மகா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தினா்.

    இதைத்தொடா்ந்து மூலவா், உற்சவமூா்த்தி, பஞ்சலிங்கம், நந்திதேவா், கொடிக்கம்பம், பலிபீடம் ஆகியவற்றையும் கழுவி தூய்மைப்படுத்தினா். சுவாமிக்கு அணிவி க்கக்கூடிய அனைத்து வஸ்திரங்களையும் சலவை செய்து உலரவைத்து தூய்மை செய்தனா். உழவா ரப்பணியில் பெண்கள் உள்பட 100 க்கும் மேற்ப ட்டோா் பங்கேற்றனா். பிறகு தெப்பக்குளத்தையும் சுத்தம் செய்தனா். மதியம் அவிநாசி லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனைகள் நடைபெற்றன. நிறைவாக சிவனடியாா்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பஞ்சபுராணத்துடன் அனைவரும் கூட்டு பிராா்த்தனை செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கோவில் வளாகத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றினர்.
    • ஆன்மீக பயணமாகவும், இறை பணியாகவும் உள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் கிராமத்தில் உள்ள பெரியநாயகி ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் கோவில் மற்றும் பேட்டையில் உள்ள சவுந்தரநாயகி அம்பாள் கோவில் ஆகிய இரு கோவில்களிலும் நேற்று உழவாரப்பணி நடைபெற்றது.

    அறநிலையத்துறையின் அனுமதியுடன் கரூர் பகுதியை சேர்ந்த 90 பெண்கள், 40 ஆண்கள் என 130 தன்னார்வலர்கள் கனகராஜ் தலைமையில் பல்வேறு உபகரணங்களுடன் வந்து 2 குழுக்களாக பிரிந்து கோவிலூர் கோவில் மற்றும் பேட்டை கோவிலுக்கு சென்று அங்குள்ள கொடிமரம், ராஜகோபுரம், மண்டபம் என கோவிலின் அனைத்து பகுதிகளையும் தூய்மைப்படுத்தி, வளாகத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளையும் அகற்றினர்.

    மேலும், கோவிலில் இருந்த விளக்குகள், பாத்திரங்கள், கோவில் மணி உள்பட அனைத்து பொருட்களையும் சுத்தம் செய்தனர். இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்:-

    நாங்கள் சுமார் 8 ஆண்டு களுக்கு மேல் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம். மாதம் 2 பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கோவிலை தூய்மைப்படுத்தி வருகிறோம்.

    இது எங்களுக்கு முழு மன திருப்தியை தருகிறது. மேலும், ஆன்மீக பயணமாகவும், இறை பணியாகவும் உள்ளது. கூலி தொழிலாளர்கள் முதல் அரசு வேலைக்கு செல்பவர்கள் வரை எவ்வித பாரபட்சமுமின்றி ஒன்றாக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.

    • கோவில் பிரகாரத்தில் படர்ந்திருக்கும் புற்கள், செடி, கொடிகளை அகற்றினர்.
    • 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவார பணி மேற்கொண்டு கோவில் பிரகாரத்தில் படர்ந்திருக்கும் புற்கள், செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

    உழவார பணியை கோவில் செயல் அலுவலர் விமலா தொடங்கி வைத்தார்.

    இதில் திட்ட அலுவலர் மற்றும் முதுகலை ஆசிரியை ராஜகுமாரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியை திவ்யா, சர்வாலயா பணிக்குழு அமைப்பு செயலாளர் எடையூர் மணிமாறன், செயலாளர் ஜெயபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் துரை.ராயப்பன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வை சர்வாலய உழவாரப்பணி குழு ஒருங்கிணைத்தது.Cultivation work in Piravi Darshaeeswarar temple

    • இறை பணி மன்றம் சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கோவிலை அடைந்தது.

    அவிநாசி : 

    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.

    கோவிலில் உள் மற்றும் பிரகாரம், கோவில் வளாகம், கொடி மரம் என அனைத்து பகுதிகளிலும் சிவனடியார்கள் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். அதன்பின் திருமுறை பாராயணம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக சென்றனர். இதனை, கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற சிவனடியார்கள் ஆன்மிகம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    இது குறித்து இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் நிறுவனர் கணேசன் கூறியதாவது:- இதுவரை 246 கோவில்களில் 300க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப் பணிகள் மேற்கொண்ட வருகிறோம். கொங்கேழு சிவாலயங்களில் கோவை - பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலிருந்து துவங்கியுள்ளோம்.

    அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்,வெஞ்ச மாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவ ஸ்தலங்களில் உழவாரப்பணிகள் மேற்கொண்டோம்.

    உழவாரப் பணி மேற்கொள்ளும் கோவில்களில் பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடுதல், கூட்டு பிரார்த்தனை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

    • சிறுவாபுரி சிவன் கோவிலில் 6 வாரங்கள் வந்து வணங்கினால் வாழ்வில் ஆனந்தம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
    • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோவில் பிராகாரத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்றி உழவாரப்பணி செய்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி கிராமத்தில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் 6 வாரங்கள் வந்து வணங்கினால் வாழ்வில் ஆனந்தம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பழமைவாய்ந்த இந்த கோயிலுக்கு 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் சென்னை இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி சங்கம் ஆகியவை இணைந்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கோவில் பிராகாரத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்றி உழவாரப்பணி செய்தனர். இதில், கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், சின்னம்பேடு ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சேகர், வடக்குநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரிதாஸ், பி.சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×