search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி
    X

    செடிகளை அகற்றும் பணியில் மாணவிகள்.

    பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி

    • கோவில் பிரகாரத்தில் படர்ந்திருக்கும் புற்கள், செடி, கொடிகளை அகற்றினர்.
    • 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவார பணி மேற்கொண்டு கோவில் பிரகாரத்தில் படர்ந்திருக்கும் புற்கள், செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

    உழவார பணியை கோவில் செயல் அலுவலர் விமலா தொடங்கி வைத்தார்.

    இதில் திட்ட அலுவலர் மற்றும் முதுகலை ஆசிரியை ராஜகுமாரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியை திவ்யா, சர்வாலயா பணிக்குழு அமைப்பு செயலாளர் எடையூர் மணிமாறன், செயலாளர் ஜெயபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் துரை.ராயப்பன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வை சர்வாலய உழவாரப்பணி குழு ஒருங்கிணைத்தது.Cultivation work in Piravi Darshaeeswarar temple

    Next Story
    ×