search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுத்தம் செய்யும் பணி"

    • விளையாட்டு மைதானத்தில், மரங்கள் வெட்டப்படாமல் புதர்போல மண்டி கிடப்பதாக கூறியுள்ளனர்.
    • பள்ளி மைதானத்தை முழுவதும் தூய்மை செய்யும் வரை இந்த பணி நடைபெறும் என அவர் கூறினார்.

    கடலூர்:

    விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கோடை விடுமுறை முடிந்து கடந்த திங்கட்கிழமை பள்ளி திறப்பை முன்னிட்டு பள்ளியில் விருத்தாசலம் டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விழிப்புணர்வு உரையாற்றினார். அப்போது பள்ளி மாணவிகள் தங்கள் பள்ளி வளாகத்தில் விளையாட்டு மைதானத்தில், மரங்கள் வெட்டப்படாமல் புதர்போல மண்டி கிடப்பதாகவும், அதனால் தங்களால் விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட முடியாமல் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் சமூக விரோதிகள் சுவர் ஏறி குதித்து வந்தாலும் அதனை கண்காணிக்க முடியாத நிலையில் மரங்கள் புதர் போல சூழுந்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த டி.எஸ்.பி விருத்தாசலம் போலீஸ் கோட்டத்திற்கு உட்பட்ட விருத்தாசலம் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், ஆலடி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை மற்றும் கருவெப்பிலங்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலைய ங்களில் பணிபுரியும் காவலர்களை கொண்டு பள்ளியின் மைதானத்தை தூய்மை ப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

    டி.எஸ்.பி ஆரோக்கி யராஜ் தலைமையில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலையில், 20 மகளிர் போலீசார் உட்பட 60க்கும் மேற்பட்ட காவலர்கள் விளையாட்டு மைதா னத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி மைதானத்தில் மண்டி கிடந்த புதர்கள், புற்கள் உள்ளிட்டவற்றை மண்வெட்டி, அரிவாள் உள்ளிட்டவற்றை கொண்டு தூய்மைபடுத்தினர். இது பற்றி டி.எஸ்.பி ஆரோக்கியராஜ் கூறுகையில், பள்ளி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகை யில் தூய்மை பணி நடைபெற்றதாகவும், பள்ளி மைதானத்தை முழுவதும் தூய்மை செய்யும் வரை இந்த பணி நடைபெறும் என அவர் கூறினார்.

    • மாலையில் மாடுகளுக்கு வண்ண பலூன் கட்டி ஊர்வலம் செல்வதற்கு தயாராகி உள்ளனர்
    • சில்வர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மகிழ்ந்து விளையாட உள்ளனர்.

     கடலூர்:

    தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு மாவட்ட முழுவதும் வீடுகளில் அசைவம் சமைத்து சாமிக்கு படையல் இட்டு மாலையில் மாடுகளுக்கு வண்ண பலூன் கட்டி ஊர்வலம் செல்வதற்கு தயாராகி உள்ளனர்.  

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வருகிற 19- ந் தேதி ஆற்று திருவிழாவை வருடந்தோறும் மாவட்ட முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீர்த்தவாரிக்கு ஆறுகளில் சாமி ஊர்வலமாக நேரில் வருகை தந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, மலட்டாறு, பரவனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் திரண்டு காலை முதல் மாலை வரை ஆனந்தமாக குடும்பத்துடன் விளையாடி மகிழ்ந்து வீட்டில் இருந்து சமைத்துக் கொண்டு வரும் உணவுகளை ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு தங்களுக்கு தேவையான பொருட்கள், காய்கறி வகைகள் வாங்கிகொண்டு மகிழ்வாக வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் ஆறுகளிலும் மற்றும் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மகிழ்ந்து விளையாட உள்ளனர். இதனை தொடர்ந்து கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஆற்று திருவிழாவை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையாளர் நவேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது தென் பெண்ணையாறு பகுதிகளில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் பொதுமக்கள் எளிமையாக வந்து செல்வதற்கு சரியான முறையில் சுத்தம் செய்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் ப்ளீச்சிங் பவுடர் தெளித்து முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தினர். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் கே. எஸ்.ராஜா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுத்தம் செய்யும் பணியினை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாஅவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
    • சிறப்பாக பணிபுரிந்த நிர்வாகத்திற்கும், துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி சார்பில் எனது குப்பை எனது பொறுப்பு என்பதனை வலியுறுத்தி கடலூர் மாநகராட்சி முழுவதும் மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று காலை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் எனது குப்பை எனது பொறுப்பு என்பதனை வலியுறுத்தி கடற்கரை முழுவதும் இருந்த குப்பைகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரி, புனித வள்ளலார் கலைக் கல்லூரி மற்றும் நகராட்சி மேல்நிலை பள்ளியை சேர்ந்த மாணவர்கள் எனது குப்பை எனது பொறுப்பு அடிப்படையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணிபுரிந்த நிர்வாகத்திற்கும், துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா, மாணவரணி தி.மு.க. துணை அமைப்பாளர் பாலாஜி, மண்டல குழு தலைவர் பிரசன்னா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சுதா ரங்கநாதன், செந்தில் குமாரி இளந்திரையன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.
    • வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதனையொட்டி பாசன தண்ணீர் கடை மடை வரை சென்றடைய வேண்டும் என்பதற்காக பல்லடம் பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி அந்தந்த பாசன சபைகள் மூலம் நடைபெற்று வருகிறது.

    இதனை பொள்ளாச்சி பி.ஏ.பி. தலைமை செயற்பொறியாளர் ரவி நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மாபாளையம் பிரிவில் உள்ள அரசங்காடு பகுதியில் உள்ள அமுக்குபாலம் இறங்கி இருப்பதால் அதனை சீரமைக்கும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் உதவி செயற்பொறியாளர் ஆனந்தபாலதண்டபாணி, உதவி பொறியாளர் சியாமளா, பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பாசன திட்ட உதவியாளர்கள் உதயகுமார், ராஜ்குமார், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    ×