search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai high court"

    • பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் சங்கம், பதிவாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யாக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உயர்கல்வித் துறை செயலாளரின் பரிந்துரையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்து உள்ளார்

    நிதி முறைகேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த தங்கவேல் மீதான ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை பரிந்துரை செய்திருந்தது.

    எனினும், பரிந்துரையை செயல்படுத்தாமல் துணைவேந்தர் ஜெகநாதன் காலம் தாழ்த்தி வந்த நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் சங்கம், பதிவாளரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யாக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் உயர்கல்வித் துறை செயலாளரின் பரிந்துரையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளராக இருந்த தங்கவேல் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், பல்கலைக்கழகம் என்பது தனிச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு , மனுதாரர் 34 வருட அனுபவம் கொண்டவர் என்றும் தெரிவித்தார். நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் இடைநீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    எனவே பணியிடை நீக்கம் தொடர்பான பரிந்துரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி உயர் கல்வித் துறை செயலாளரின் பரிந்துரை குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். அப்போது தற்போதைய பதிவாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரகுமார், இது குறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் குழு தான் முடிவெடுக்க வேண்டும் என இந்த பரிந்துரைகள் சிண்டிகேட் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதி குறுக்கிட்டு முந்தைய பதிவாளர் தங்கவேலை பணியிட நீக்கம் செய்யும் பரிந்துரை மீது முடிவெடுக்காமல் ஏன் மீண்டும் அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினீர்கள் என கேள்வி எழுப்பினார்.

    பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளராக இருந்த தங்கவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக குற்ற வழக்கு உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் இந்த வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டார். முன்னாள் பதிவாளர் தங்கவேலுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு தடை இல்லை எனவும் அவருக்கு எதிராக நடைபெற்ற விசாரணை அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

    • நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை.
    • பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை அமல்படுத்த வேண்டும்.

    பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக கல்லூரி மாணவிகள் 7 பேர் கலாஷேத்ரா பவுண்டேஷன் மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் வந்தது.

    அப்போது, "மாணவிகள் அளித்த பாலியல் தொல்லை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா அறக்கட்டளை கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது" என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    மேலும், "நீதிபதி கண்ணன் குழு பிரந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக உடனடியாக பரிசீலிக்க வேண்டும்" என கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சம்பவம் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என்றும், புகாருக்கு உள்ளான பேராசிரியரை நீக்க வேண்டுமென்ற குழுவின் பரிந்துரை உடனடியாக அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு.
    • பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

    பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அண்மையில் ஓஷன் லைஜப் ஸ்பேஷஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    ரூ.50 கோடி வரை பணிபரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இந்நிலையில், தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு என நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் வாதம் செய்தது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாக கட்டுமான நிறுவனம் வாதித்தது.

    வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்ததோடு, பதிலளிக்குமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • கரூர் கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்தது.
    • இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 5 பேருக்கு எதிரான வழக்கை ரத்துசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்துசெய்யுமாறு சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மனு தாக்கல் செய்து இருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது.

    • மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம்.
    • எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மறு உத்தரவு வரும்வரை, அந்த நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கோயம்பேடு மட்டுமின்றி போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் இயங்கக்கூடாது.

    ஆன்லைன் மற்றும் மொபைல் செயலிகளில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது. 

    • தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையில் கருத்து கொள்ள கூடாது.
    • வழக்குகளை யார் விசாரிப்பது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார்.

    தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து பதிவு செய்ததற்கு எதிராக அமைச்சர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவின் மேல்முறையீடு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. 

    அப்போது, தலைமை நீதிபதி முன் அனுமதி இல்லாமல் தனி நீதிபதி வழக்கு பதிவு செய்து உத்தரவிட்டதாக, தலைமை பதிவாளர் ஜோதிராமன் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

    மேலும், தனி நீதிபதி தானாக வந்து வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் குழப்பத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றும், நீதிமன்றம் தானாக முன்வந்து பதிவு செய்யும் வழக்குகளை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சங்வி தெரிவித்துள்ளார். தலைமை நீதிபதியின் ஒப்புதலை தனி நீதிபதி பெற்றுள்ளார் என பதிவாளர் ஜோதிராமன் தரப்பு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்குகள் இறுதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ள சூழலில் என்ன சிக்கல் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    மேலும், தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பலாமா?

    அமைச்சர்களுக்கு எதிராக தானாக, தனி நீதிபதி முன்வந்து வழக்கு பதிவு செய்வதற்கு முன் தலைமை நீதிபதியிடம் கேட்டிருக்க வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு, தானாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணையில் கருத்து கொள்ள கூடாது.

    தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளை யார் விசாரிப்பது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

    • சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி.
    • பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தது.

    மனுவில், பயணிகள் மட்டுமின்றி தனியார் பேருந்து நிறுவனங்களும் அசௌகரியத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும் வழக்கு முடியும் வரை தொடர்ந்து கோயம்பேட்டிலிருந்து தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றம் முன் வந்தது. இதில், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளை மேலும் சில வாரங்களுக்கு சென்னை கோயம்பேட்டிலிருந்து இயக்க முடியுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    மேலும் இதுதொடர்பாக தமிழக போக்குவரத்து துறை ஆணையர், நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கு.
    • ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங்.

    சென்னையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் வந்தது.

    நீதிமன்றத்தில் ஆஜரான இளைஞர் ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக் கொண்ட நிலையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார்.

    மேலும், ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் இளைஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். 

    வழக்கு விசாரணையின்போது, "ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல. மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம்" என நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.

    மேலும், "90's கிட்ஸ் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ, அதேபோல் 2K கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

    அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவடைய வேண்டும். பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்" என்றது.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு.

    சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.

    3வது முறையாக ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

    • முன்னாள் மாணவி அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும்.
    • புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவு.

    கலாசேத்ரா பாலியல் தொல்லை புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உரிய முறையில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி தமிழக டிஜிபிக்கு உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, பாலியல் தொல்லை கொடுத்ததாக கலாசேத்ரா கல்லூரி நடன ஆசிரியருக்கு எதிராக முன்னாள் மாணவி அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கலாசேத்ரா அறக்கட்டளையின் நடன ஆசிரியர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக மற்றொரு மாணவி சென்னை காவல்துறையில் புகார் தெரிவித்தார்.

    இந்நிலையில், விளம்பரத்திற்காக புகார் அளிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தால் புகார்தாரர் மீது நடவடிக்கை வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

    • பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவு இணையதளத்திலும் பார்க்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
    • அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதும், தகுதி இழப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து விடும்.

    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததுடன் எம்.எல்.ஏ. பதவியையும் தானாக இழந்துள்ளார்.

    பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியும் காலியாக விட்டது.

    அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடவடிக்கைகளை தமிழக சட்டசபை செயலகம் மேற்கொள்ள உள்ளது. பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை விவரங்களை சென்னை ஐகோர்ட்டு வெளியிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவு இணையதளத்திலும் பார்க்கும் வகையில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

    அது மட்டுமின்றி அந்த உத்தரவின் நகல் சட்டசபை செயலகத்துக்கும் இன்னும் ஓரிரு நாளில் அனுப்பப்பட்டு விடும். அந்த விவரங்கள் கிடைத்ததும் சட்டசபை செயலகம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி பொன்முடியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும். அந்த அறிவிப்பாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டதும், தகுதி இழப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்து விடும்.

    இது குறித்து சட்டசபை செயலக அதிகாரிகளிடம் கேட்டபோது, பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை கிடைத்துள்ளதால் தீர்ப்பு வழங்கிய ஒரு வாரத்துக்குள் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த வகையில் சட்டசபை செயலகம் பணியை தொடங்கும்.

    ஐகோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி பொன்முடியை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்வதற்கான நடவடிக்கையை ஒரு வாரத்திற்குள் விரைந்து செயல்படுத்தி விடுவோம். இதில் காலதாமதம் செய்ய வாய்ப்பில்லை என்று தெரிவித்தனர்.

    எனவே அடுத்த வாரம் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு சட்டசபை செயலகம் கருத்துரு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
    • 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் நிற்கவும் முடியாது.

    கடந்த தி.மு.க. ஆட்சியில் 2006-2011 காலக் கட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    பொன்முடி அப்பீல் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் இப்போது சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது. பதவி இழந்துவிட்டார். எம்.எல்.ஏ. பதவியும் பறிபோய் விடுகிறது. சட்டசபைக்கும் செல்ல முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (1)ன் படி ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் ஒருவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். அந்த வகையில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோய் உள்ளது.

    இந்த விஷயத்தில் 2 ஆண்டுக்கும் மேல் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் நிற்கவும் முடியாது. பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால் அவர் அப்பீல் செய்து அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் சிறைக்குதான் செல்ல வேண்டும்.

    அந்த வகையில் 3 ஆண்டு தண்டனை அனுபவித்தால் அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆகமொத்தம் 9 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்க இயலாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ×