என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பொன்முடி 9 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது: சட்ட நிபுணர்கள் கருத்து
- 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- 2 ஆண்டுக்கு மேல் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் நிற்கவும் முடியாது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் 2006-2011 காலக் கட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பொன்முடி அப்பீல் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவர் இப்போது சிறைக்கு செல்ல வேண்டியதில்லை. ஆனாலும் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது. பதவி இழந்துவிட்டார். எம்.எல்.ஏ. பதவியும் பறிபோய் விடுகிறது. சட்டசபைக்கும் செல்ல முடியாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (1)ன் படி ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் ஒருவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்புக்கு ஆளாக நேரிடும். அந்த வகையில் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோய் உள்ளது.
இந்த விஷயத்தில் 2 ஆண்டுக்கும் மேல் தண்டனை பெறுபவர்கள் தேர்தலில் நிற்கவும் முடியாது. பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால் அவர் அப்பீல் செய்து அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் சிறைக்குதான் செல்ல வேண்டும்.
அந்த வகையில் 3 ஆண்டு தண்டனை அனுபவித்தால் அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது. ஆகமொத்தம் 9 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் நிற்க இயலாது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்