search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camera"

    • 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா மையத்தை எஸ்பி திறந்து வைத்தார் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகமும், வர்த்தக சங்கமும் இணைந்து நகரம் முழுவதும் 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்க போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் வரவேற்றார்.

    மாரிமுத்து எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் , வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கண்காணிப்பு மையத்தை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்து பேசும்போது :-

    நகர சுற்று வட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது

    திருத்துறைப்பூண்டியில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் போலீஸ் நிலையத்தில் நிறுத்து வாகனம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது .இதில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் இரண்டாகப் பிரிப்பதற்கு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், நகராட்சி நியாயமான குழு உறுப்பினர் பாண்டியன், ஆணையர் அப்துல் ஹரிஷ், நகராட்சி பொறியாளர் பிரதன் பாபு ,நகராட்சி துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வீரசேகரன் , இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • தனியார் தொழிற்சாலை பங்களிப்போடு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • இதனை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இயக்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    நெட்டபாக்கம் மும்முனை சந்திப்பில் குற்ற சம்பவங்களை தடுக்க இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை பங்களிப்போடு சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனை போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் இயக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், தனியார் தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் கணேஷ் உட்பட ஊர் பிரமுகர்கள் புருஷோத்தமன், வெங்கடேசன், சரவணன், முருகன், சண்முகம், காந்தி தாஸ், வீரப்பன், ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காரை அரசு பள்ளி வளாகத்தில் ரூ. 1 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது
    • சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே காரை கிராமத்தில் அரசுமேல்நிலைப்பள்ளி இயங்கிவருகிறது. இந்தபள்ளியில் காரை தெரணி வரகுபாடி புதுக்குறிச்சி நாரணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 485 மாணவர்க ள்பயின்றுவருகின்றனர்.நல்ல சுற்றுச்சூழலுடன் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பள்ளியில் பள்ளி முடிந்த பிறகும் விடுமுறைநாட்களில் சமூகவிரோதிகள் நுழைந்து மதுஅருந்துவதும் மது அருந்திய பாட்டில்க ளை அங்கேயே விட்டு செல்வதுமாக இருந்துள்ளனர். மறுநாள் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் போது வளாகத்திற்குள் மதுபாட்டில்கள் கிடப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

    இதனை தடுக்க வேண்டும் என நினைத்த பள்ளிதலைமை ஆசிரியர் அக்பர்கான் தலைமையிலான ஆசிரியர்கள், காரை பகுதிகளில் சமூகப்பணி செய்துவரும் கலைவேந்தன் என்பவரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் கலைவேந்தன் சொந்தசெலவில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 சிசிடிவி கேமராக்களை பள்ளி வாளகத்தில் அமைத்து க்கொடுத்துள்ளார்.

    அதன் பிறகு சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் வருவது அடியோடு தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காரை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் நிம்மதியும் மகிழ்சியும் அடைந்துள்ளனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர் கலைவேந்தனிடம் கேட்ட போது பிற அரசுபள்ளிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தன்னால் முடிந்ததை செய்து தர தயாராக இருப்பதாகவும், ஏற்கனவே வரகுபாடி கிராமத்தில் மாற்றுத்திறனாளி மற்றும் வறியவர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து கால்நடை(மாடு)வாங்கி இலவசமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    • குற்ற தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • பனியன் கம்பெனிகள், அதிகமான மக்கள் குடியிருக்கும் பகுதியாகும்.

     பெருமாநல்லூர் : 

    திருப்பூரில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கணக்கம்பாளையம். இந்த நால் ரோடு சாலை மிகவும் முக்கியமான சந்திப்பு இடமாகும். பல பனியன் கம்பெனிகள், அதிகமான மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இதை கருத்தில் கொண்டு குற்ற தடுப்பு நடவடிக்கையாக சுமார்ரூ .1 லட்சம் மதிப்புள்ள கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளதாக பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

    • ஒருவரை ஒருவர் சரமாரியாக கத்தியில் மாறி மாறி குத்திக் கொள்கின்றனர்.
    • இந்த காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.

    திருவாரூர்:

    திருவாரூர் விஜயபுரம் பகுதியில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை பல வருடங்களாகஇயங்கி வருகிறது.

    இந்த மருத்துவ மனையில் திருவாரூர் புது தெருவைச் சேர்ந்த 38 வயதான சுரேஷ் என்பவர் தனது மனைவி புவனேஷ்வரியை பிரசவத்தி ற்காக அனுமதித்துள்ளார்.

    அவருக்கு அங்கு நேற்று இரவு குழந்தை பிறந்து சிகிச்சையில் உள்ளார். இதன் காரணமாக சுரேஷ் அங்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் திருவாரூர் புதுத் தேர்வை சேர்ந்த 55 வயதான கண்ணன் என்பவர்  அந்த மருத்துவமனை வளாகத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வருகிறார்.

    அவர் வண்டியை நிறுத்துவதற்குள் சுரேஷ் அவரை வண்டியுடன் சேர்த்து தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்துகிறார்.

    இதில் நிலைத்தடுமாறிய கண்ணன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷை குத்துவதற்காக  முயன்றார்.

    இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கட்டி புரண்டு கத்தியால் மாறி மாறி குத்தி கொள்கின்றனர்.

    இந்த காட்சிகள் மருத்துவம னையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த மருத்துவமனை அரசு தாய் சேய் நல மருத்துவமனை என்பதால் பெண்கள் மட்டுமே அந்த நேரத்தில் மருத்துவமனைக்குள் இருந்துள்ளனர்.

    இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனையின் வாயிற் கதவை பூட்டியுள்ளனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் நகர காவல் துறையினர் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சுரேஷ் என்பவரின்  மாமியாருக்கும் கண்ணன் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக இருவரும் கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்டதாககவும் தெரியவந்துள்ளது.

    இது குறித்து மேலும் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தொண்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ஆலோசனை செய்யப்பட்டது.
    • தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலைப் பேரூராட்சி பகுதியானது கடலோரப் பகுதியாகவும், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி பகுதிகளில் இருந்து ராமேசுவரம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாகவும் உள்ளது.

    இதனால் தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குற்றங்களை தடுக்கவும், விபத்துகளை கண்காணிக்கவும், தொண்டியில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களை ஆய்வு செய்து கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ரோட்டரி சங்கமும், ராமநாதபுரம் தனியார் நிறுவனமும் மற்ற தன்னார்வ நிறுவனங்களும் முன்வந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ரோட்டரி கிளப் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் முருகேசன், பட்டயத் தலைவர் ஷேக் மஸ்தான் ராஜா, முன்னாள் தலைவர்கள் மரிய அருள், சிவராமகிருஷ்ணன் ரஜினி, வீரகுமார் முன்னிலை வகித்தனர். தொண்டி நகர் பகுதியில் 16 இடங்களில் 60 காமிராக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் அனுமதியுடன் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

    அனைத்து காமிராக்களையும் தொண்டி போலீஸ் நிலையத்தில் இருந்து 24 மணிநேரமும் கண்காணிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டது.

    • கள்ளை கிராமத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.
    • டி. எஸ்.பி. தொடங்கிவைத்தார்

    கரூர்:

    குளித்தலை அருகே தோகைமலை காவல் சரகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் கண்டுபிடிக்க ஏதுவாகவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாகவும் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் அறிவுறுத்தல் பெயரில் கள்ளை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழர் தேசம் மாவட்ட செயலாளர் அருள்ராஜ், தனது சொந்த பொறுப்பில் கிராமத்தில் அனைத்து பகுதிகளிலும் 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனர், இதனை குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார், இதுபோன்று குளித்தலை காவல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது போன்ற கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் இப்பகுதிகளில் குற்ற நடவடிக்கைகள் நடக்காமல் தடுக்கலாம் என கூறினார், கள்ளைப் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தியதற்கு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்,

    உடன் தோகைமலை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீஸார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டியில் பிரதான சாலையில் உள்ள ஓடையை முறையாக தூர்வாரி, தடுப்புச்சுவரை கட்டி நடைமேடையை உடனடியாக அமைக்க வேண்டும்.
    • குற்ற செயல்களை தடுப்பதற்கு 33 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    கோவில்பட்டி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா, கோவில்பட்டியில் உள்ள பேரமைப்பு அலுவல கத்தில், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கோவில்பட்டியில் பிரதான சாலையில் உள்ள ஓடையை முறையாக தூர்வாரி, தடுப்புச்சுவரை கட்டி நடைமேடையை உடனடியாக அமைக்க வேண்டும்.

    பிரதான சாலைகளில் முக்கிய இடங்களில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும். புதுரோடு, மார்க்கெட் சாலை உள்ளிட்ட சாலைகளை செப்பனிட வேண்டும். பிரதான சாலை - மாதாங்கோவில் தெரு சந்திப்பில் உள்ள குறுகிய பாலத்தை விரிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மூலம், கோவில்பட்டி பகுதியில் நிலவும் குற்ற செயல்களை தடுப்பதற்கு 33 கண்கா ணிப்பு காமிராக்கள் பொருத்தி செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அந்த கண்காணிப்பு காமிராக்கள் செயல்படாமல் உள்ளது.

    எனவே, குற்ற நடவடிக்கை களை தடுக்க கண்காணிப்பு காமிரா அவசியம் என்று கூறும் காவல் துறை, செயல்படாமல் உள்ள அனைத்து கண்காணிப்பு காமிராக்களையும் உடனடி யாக செயல்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப்பாதை யின் இருபுறமும் காலதாம தமின்றி அணுகுசாலை அமைத்து, போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உணவு பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சரக்கு, சேவை வரியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு விதித்துள்ள செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும். அறநிலையத் துறைக்கு பாத்தியப்பட்ட கடைகளுக்கான வாடகை கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றார்.

    பேட்டியின்போது, மண்டல தலைவர் ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் அசோகன், செயலர் யேசு ராஜா, பொருளாளர் கண்ணன், தொழில் அதி பர்கள் கணேஷ் பேக்கரி ரவிமாணிக்கம், கார்த்திக் மிட்டாய் கார்த்திகேயன், கே.என்.ஆர். கடலை மிட்டாய் கண்ணன், முத்துராஜ், மோகன், சிவா னந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • ரிசர்வ் வங்கி விதிப்படி 24 மணி நேரமும் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை பாதுகாப்பாக காவலுடன் வைக்கவேண்டும்.
    • டிஜிட்டல் எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியாமல் அழிந்தநிலையில் இருக்கின்றன.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட நுகர்வோர்பாதுகாப்பு மையம் கோரிக்கதிருத்துறைப்பூண்டி நகரில் தேசிய மற்றும் தனியார் வங்கி களின்10 ஏடிஎம் எந்திரங்கள் இயங்கி வருகின்றன. வங்கிகளில் நேரடியாக வரும் கூட்டத்தை குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி ரோடு ஓரங்களில்ஏடிஎம் எந்திரங்களை 24 மணி நேரம் இயக்கி பணம் எடுக்க வசதியாக தேசியதனியார் வங்கிகளை ஏடிஎம் எந்திரங்கள் அமைக்க அனுமதித்துள்ளது.

    ரிசர்வ் வங்கி விதிப்படி 24 மணி நேரமும் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை பாதுகாப்பாக காவலுடன் வைக்கவேண்டும். இதன்படி சிசி டிவியும் கேமராவுடன்அமைக்க ப்பட்டுள்ளது.

    ஆனால் தேசிய மற்றும் தனியார் வங்கிகள் ஏடிஎம்களை முறையாக பராமரி க்கவில்லை.

    இரவு நேரங்களில் பணம் இருப்பதில்லை.

    டிஜிட்டல் எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியாமல் அழிந்தநிலையில் இருக்கின்றன.

    கோளாறுகளை உடன் சீர் படுத்துவதில்லை.

    அவசரமாக மருத்துவமனை க்குசெல்லும் நோயாளிகள் மற்றும்வெளியூர் பயனாளிகள் ஆகியோர் ஏடிஎம்மில் பணம் எடுக்க இயலாமல் தடுமாறு கின்றனர்.

    இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு புகாரும் வந்துள்ளது.

    ஆதலால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக ஏடிஎம் எந்திரங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை நீக்கி 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மையம் சார்பாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய குழு தலைவர்
    • குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில், ஒன்றிய குழு சாதாரண கூட்டம், ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டம் துவங்கும் முன் ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மு க்கு மன்றத்தின் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில், குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஒவ்வொரு ஊராட்சி பகுதியில் கண்காணிப்பு கேமராக்களும், ஒவ்வொரு ஊராட்சிக்குட்பட்ட இரு தொடக்கப்பள்ளி அல்லது நடுநிலைப் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டதாக ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகர் கூறினார்.தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய வரவு செலவுகள் மற்றும் திட்ட பணிகள் குறித்து 19 தீர்மானங்களை மேலாளர் சுரேஷ் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது, கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    ஒட்டப்பிடாரம் தொகுதியில் 143 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
    ஒட்டப்பிடாரம்:

    ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் பொதுமக்கள் வாக்களிக்க 257 பூத்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூத்கள் 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள 257 வாக்குச்சாவடிகளிலும் மத்திய அரசின் ஊழியர்களை நுண்பார்வையாளர்களாக நியமித்துள்ளனர். இதையடுத்து டெல்லி உள்ளிட்ட எந்த இடத்தில் இருந்தும் வாக்குப்பதிவை கண்காணிக்கும் வகையில் இதில் 143 வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    மொத்தம் களத்தில் 15 வேட்பாளர்கள் உள்ளதால் ஒரு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிபடுத்த ஒரு வி.வி.பாட் எந்திரங்களும் வைக்கப்படுகிறது. 257 வாக்குச் சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக ஒரு வீல் சேர் உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு தொகுதி முழுவதும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

    பதற்றமான வாக்குச்சாவடிகள் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 3 மத்திய கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. இது தற்சமயம் கிடைக்கும் சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் கொண்டதாகும். #Samsung



    சாம்சங் நிறுவனம் புதிதாக 64 எம்.பி. கேமரா சென்சார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. புதிய சென்சார் தற்சமயம் சந்தையில் கிடைக்கும் மற்ற சென்சார்களை விட அதிக ரெசல்யூஷன் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. ISOCELL பிரைட் GW1 சென்சார் சாம்சங்கின் 48 எம்.பி. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சார் போன்று 0.8 மைக்ரான் பிக்சல்களை பயன்படுத்துகிறது. 

    பிக்சல் அளவு ஒன்று தான் என்ற வகையில், புதிய 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 சென்சார் அளவில் பெரியதாக இருக்கிறது. இதன் காரணமாக புகைப்படம் எடுக்கும் போது அதிக வெளிச்சத்தை உள்வாங்கும். இதனால் புகைப்படம் வழக்கமான சென்சார்களை விட அதிக தெளிவாக இருக்கும். இந்த சென்சார் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் சந்தையில் அறிமுகமாகும் என தெரிகிறது.

    அந்த வகையில் புதிய 64 எம்.பி. சென்சார் சாம்சங்கின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாம்சங் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் இந்த கேமரா சென்சாரை எதிர்பார்க்கலாம். சாம்சங் நிறுவனம் வழக்கமாக தனது கேலக்ஸி நோட் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை ஒவ்வொரு ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது.



    புதிய சாம்சங் கேமரா சென்சார் குறைந்த வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் 16 எம்.பி. தரத்தில் தெளிவான புகைப்படங்களை வழங்கும். இவ்வாறு வழங்க டெட்ராசெல் எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுகிறது. இது நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒரே புகைப்படமாக வழங்கும்.

    சாம்சங்கின் 48 எம்.பி. கேமராவும் 12 எம்.பி. தரத்தில் புகைப்படங்களை வழங்குகிறது. இந்த கேமரா சென்சார் 64 எம்.பி. தரத்திலும் புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. சாம்சங் புதிய 64 எம்.பி. ISOCELL சென்சார் ரியல்-டைம் ஹெச்.டி.ஆர். வசதி கொண்டிருக்கிறது. இது அதிகபட்சம் 100 டெசிபல் திறன் கொணிடிருப்பதால் நிறங்களை மிக நுட்பமாக பிரதிபலிக்கும்.

    புதிய சென்சார் உற்பத்தி பணிகள் 2019 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் துவங்கும் என்றும் இது ஸ்மார்ட்போன்களிலும் அதே காலக்கட்டத்தில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×