search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளை கிராமத்தில் கண்காணிப்பு கேமரா
    X

    கள்ளை கிராமத்தில் கண்காணிப்பு கேமரா

    • கள்ளை கிராமத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது.
    • டி. எஸ்.பி. தொடங்கிவைத்தார்

    கரூர்:

    குளித்தலை அருகே தோகைமலை காவல் சரகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றால் கண்டுபிடிக்க ஏதுவாகவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாகவும் குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் அறிவுறுத்தல் பெயரில் கள்ளை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழர் தேசம் மாவட்ட செயலாளர் அருள்ராஜ், தனது சொந்த பொறுப்பில் கிராமத்தில் அனைத்து பகுதிகளிலும் 5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனர், இதனை குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார், இதுபோன்று குளித்தலை காவல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இது போன்ற கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினால் இப்பகுதிகளில் குற்ற நடவடிக்கைகள் நடக்காமல் தடுக்கலாம் என கூறினார், கள்ளைப் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தியதற்கு அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்,

    உடன் தோகைமலை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீஸார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×