என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட்போன்"

    • விற்பனை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி, பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
    • இத்துடன் டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் மோட்டோரோலா நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 5.99 மில்லிமீட்டர் அளவில் மிக மெல்லியதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் புதிய மோட்டோ ஸ்மார்ட்போனி 5000mAh பேட்டரியுடன், 68W டர்போ-பவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ஸ்மார்ட்போன் பிரியர்கள் விரும்பும்படியான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டி மூலம் மோட்டோரோலா எட்ஜ் 70 மாடல் இயங்குகிறது. இத்துடன் அட்ரினோ 722 ஜிபியு கிராஃபிக்ஸ் கார்டு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு அப்டேட், 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    புதிய எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்புடன் 6.7 இன்ச் 2712x1220 பிக்சல் pOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, முன்புறம் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் மோட்டோ ஏஐ 2.0 மூலம் ஏ.ஐ. இமேஜ் ஸ்டூடியோ (AI Image Studio), ஸ்கெட்ச் டூ இமேஜ் (Sketch to Image), ஸ்டைல் சின்க் (Style Sync) போன்று கேமரா சர்ந்த அம்சங்கள் இந்த மாடலில் நிறைந்துள்ளன.

    இந்த ஸ்மார்ட்போன் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி பாதுகாப்பு, IP68 மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.29,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதனால் ஸ்மார்ட்போனினை ரூ.28,999 முதல் வாங்கலாம். விற்பனை வருகிற டிசம்பர் 23ஆம் தேதி, பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.

    புதிய மோட்டோரோலா எட்ஜ் 70 ஸ்மார்ட்போன் பேண்டோன் லில்லி பேட், பேண்டோன் கேஜெட் கிரே மற்றும் பேண்டோன் ப்ரோன்ஸ் கிரீன் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

    • இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
    • ஹானர் X70 மாடலில் இருந்ததைப் போல 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம்.

    சீன சந்கையில் 10,000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படும் புதிய ஸ்மார்ட்போனில் சுமார் 10,080mAh பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இது மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும்போது நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அளவில் பெரிய பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலம் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹானர் பவர் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக இது ஹானர் பவர் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. முந்தைய ஹானர் பவர் ஸ்மார்ட்போன் 8000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது பிரிவில் முதல் முறையாகும். இதன் தொடர்ச்சியாக ஹானர் நிறுவனம் 8300mAh பேட்டரியுடன் கூடிய ஹானர் X70 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

    டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இந்த ஸ்மார்ட்போன் 6.79-இன்ச் 1.5K 120Hz AMOLED 120Hz டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 சிப்செட் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஹானர் X70 மாடலில் இருந்ததைப் போல 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம்.

    Saber என்ற குறியீட்டுப் பெயரில் உருவாகி வரும் புதிய ஸ்மார்ட்போன் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமராவுடன் வரும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னோ ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ஹானர் பவர் 2 அறிமுகம் செய்யப்படலாம். இதன் விலை 2199 யுவான்கள் (இந்திய மதிப்பில் ரூ. 28,360) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    • ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது.

    இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, ரெட்மி நோட் 14 5ஜி விலை குறைக்கப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 15 சீரிசின் இந்திய வெளியீட்டுக்கு முன் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் ரெட்மி நோட் 15 சீரிஸ் வருகிற ஜனவரி 6ஆம் தேதி அறிமுகமாகும் என்று சியோமி உறுதிப்படுத்தியது.

    நாட்டில் தனது சந்தைப் பங்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கில் சியோமி நிறுவனத்திற்கு இது ஒரு முக்கியமான ஸ்மார்ட்போன் சீரிசாக இருக்கும்.

    புதிய விலை விவரங்கள்:

    ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2024ஆம் ஆண்டில் ரெட்மி நோட் 14 5ஜி சீரிசின் ஆரம்ப விலையாகும். தற்போது, இந்த விலை ரூ.1,500 குறைக்கப்பட்டு ரூ.16,499 ஆக மாறியுள்ளது.

    இத்துடன் HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் போது, நீங்கள் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,499 ஆகக் குறையும். இவைதவிர மாத தவணை சலுகைகளும் உள்ளன. பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனினை சியோமி இந்தியா வலைத்தளத்தில் இருந்து நேரடியாக வாங்கலாம்.

    அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில், இந்த ஸ்மார்ட்போன் அதன் பிரிவில் அதிக பிரைட்னஸ் கொண்டிருந்தது. இத்துடன் சோனி நிறுவனத்தின் மூன்று கேமரா சென்சார்களை கொண்டிருந்தது. இதில் 50MP சோனி பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்கு, முன்புறத்தில் 20MP சென்சார் உள்ளது.

    இந்த நிறுவனம் 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5110mAh பேட்டரியை வழங்கியுள்ளது. பாதுகாப்பிற்காக, திரையின் மேல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7025 பிராசஸரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் கொண்டிருக்கிறது.

    • ரெட்மி நோட் 15 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது.
    • நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் உள்ளது.

    ரெட்மி நிறுவனம், ரெட்மி நோட் 15 5ஜி, நோட் 15 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகியவற்றை போலந்தில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் புதிய நோட் 15 சீரிஸ் உலகளவில் வெளியாகியுள்ளது. இவை பிரகாசமான AMOLED டிஸ்ப்ளே, பெரிய சிலிக்கான்-கார்பன் பேட்டரிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா கொண்டுள்ளன.

    புதிய நோட் 15 5ஜி மாடலில் 6.77-இன்ச் AMOLED FHD+ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் ஆகியவை அதிகரித்த பிரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 உடன் சற்றே பெரிய 6.83-இன்ச் CrystalRes பேனல்களுடன் வருகின்றன. மூன்று மாடல்களிலும் 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் வருகின்றன.

    இத்துடன் நோட் 15 மாடலில் IP65 ரேட்டிங், நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடல்களில் IP68 ரேட்டிங் உடன் வருகின்றன. நோட் 15 5ஜி 4nm ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 பிராசஸர் பயன்படுத்துகிறது. நோட் 15 ப்ரோ உலகளவில் மீடியாடெக் டிமென்சிட்டி 7400 அல்ட்ரா பிராசஸருடன் வருகிறது. நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 4 சிப் பயன்படுத்துகிறது. ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 12 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.

    பேட்டரியை பொருத்தவரை ரெட்மி நோட் 15 மாடலில் 5,520mAh, நோட் 15 ப்ரோ மாடலில் 6,580mAh மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் 100W சார்ஜிங் கொண்ட 6,500 mAh யூனிட் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க ரெட்மி நோட் 15 5ஜி மாடலில் 108MP பிரைமரி கேமரா கொண்டுள்ளது. ரெட்மி நோட் 15 ப்ரோ மற்றும் நோட் 15 ப்ரோ பிளஸ் மாடல்களில் 4x ஆப்டிகல் ஜூம் கொண்ட 200MP சென்சார்களை கொண்டிருக்கின்றன. மூன்று மாடல்களிலும் 8MP அல்ட்ரா-வைடு கேமரா உள்ளது. நோட் 15 ப்ரோ பிளஸ் மாடலில் மட்டும் 2MP மேக்ரோ லென்ஸ் உள்ளது.

    மூன்று மாடல்களும் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டிருக்கிறது. இத்துடன் கூகுள் ஜெமினி AI சப்போர்ட் உள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, வைபை 6E, ப்ளூடூத், NFC, GPS/GLONASS/Galileo/BeiDou, IR பிளாஸ்டர் மற்றும் யுஎஸ்பி சி கொண்டிருக்கின்றன.

    • இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.
    • ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.

    ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிறுவனம் தற்போது புதிய ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. சியோமி சமீபத்தில் தனது ரெட்மி 15C ஸ்மார்ட்போனினை ரூ.11,999 விலையில் அறிமுகப்படுத்தியது.

    இந்த நிலையில், தற்போது ரெட்மி நோட் 15 5ஜி சீரிசை இந்திய சந்தையில் கொண்டுவர இருக்கிறது. ரெட்மி நோட் 15 சீரிஸ் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    ரெட்மி நோட் 15 5ஜி சீரிஸ் இந்தியாவில் ஜனவரி 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படலாம். இந்த சீரிசில் ஸ்டான்டர்டு ரெட்மி நோட் 15 மற்றும் ரெட்மி நோட் 15 ப்ரோ, நோட் 15 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    இவற்றில் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6s Gen 3 பிராசஸர் மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம். ரெட்மி நோட் 15 5ஜி சீரிசுடன், சியோமி நிறுவனம் உலகளவில் சியோமி 17சீரிசையும் அறிமுகப்படுத்தலாம்.

    சியோமி 17 மற்றும் சியோமி 17 அல்ட்ரா ஆகிய மாடல்கள் 2026 ஆம் ஆண்டில் உலகளவில் சியோமி அறிமுகம் செய்ய இருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்கள் தலைசிறந்த பிராசஸர், அதிநவீன கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    • இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது.
    • பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் போக்கோ நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் "போக்கோ C85" அறிமுகத்தை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 15C 5ஜி-யின் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    போக்கோ C85 5ஜி ஸ்மார்ட்போனில் 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் HD+ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 SoC வழங்கப்படுகிறது. இது மலிவு விலையில் நம்பகமான 5G இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




    புகைப்படம் எடுப்பதற்கு, 50MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி உள்ளது. இது நீண்ட கால பேட்ரி பேக்கப் வழங்குவதை உறுதி செய்கிறது. பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டு இருக்கிறது. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு போக்கோ C85 5ஜி ஸ்மர்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படும்.

    • இரண்டு ஸ்கிரீன்களும் 1Hz முதல் 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் பயன்படுத்துகின்றன.
    • சாதனம் கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன்® 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முதல் trifold ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z trifold-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் ஒரு நிலையான ஸ்மார்ட்போனில் இருந்து 10 இன்ச் டேப்லெட் அளவிலான டிஸ்ப்ளே வரை விரிவடையும் பல-மடிப்பு டிசைன் கொண்டுள்ளது.

    கேலக்ஸி Z trifold அதன் இரண்டு தனித்துவமான டிஸ்ப்ளேக்களால் வரையறுக்கப்படுகிறது. கவர் ஸ்கிரீன் 6.5-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X பேனல் ஆகும், இது நிலையான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பரிமாணங்களை பிரதிபலிக்கிறது. இது 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

    விரிக்கும்போது, சாதனம் 2160 x 1584 தெளிவுத்திறன் கொண்ட 10.0-இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X பிரதான திரையை வெளிப்படுத்துகிறது. இரண்டு ஸ்கிரீன்களும் 1Hz முதல் 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் பயன்படுத்துகின்றன.



    சாம்சங் நிறுவனம் Z TriFold மாடலை புகைப்படங்கள் எடுக்க தலைசிறந்த சாதனமாக நிலைநிறுத்துகிறது. இதில் OIS, F1.7 200MP வைடு-ஆங்கிள் கேமரா உள்ளது. இத்துடன் 12MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 30x வரை டிஜிட்டல் "ஸ்பேஸ் ஜூம்" வழங்கும். செல்ஃபி எடுக்க இரண்டு தனித்தனி 10MP சென்சார்களை கொண்டுள்ளது.

    இந்த சாதனம் கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன்® 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது. இது 16 ஜிபி ரேம், 512 ஜிபி அல்லது 1 டிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த சாதனம் 5,600mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    விலை விவரங்கள்:

    புதிய கேலக்ஸி Z TriFold 512 ஜிபி மாடலின் விலை 2,445 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2,19,235 ஆகும். இது டிசம்பர் 12ஆம் தேதி முதல் கொரியாவில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து சீனா, தைவான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற சந்தைகளில் வெளியிடப்படும்.

    • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.
    • பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    ரியல்மி நிறுவனம் C சீரிசில் முற்றிலும் புதிய பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி C85 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் HD+ 144Hz LCD ஸ்கிரீன் கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர், 5300+ mm² VC கூலிங், 8 ஜிபி ரேம், 10 ஜிபி வரை டைனமிக் ரேம் மற்றும் ரேம் எக்ஸ்பான்ஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ரியல்மி யுஐ 6 கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, AI எடிட் ஜீனி, 8MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. மேலும் இதில் IP69 Pro வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது.

    புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 7000mAh பேட்டரி கொண்டுள்ளது, இது 2 நாட்கள் வரை பயன்பாட்டை உறுதியளிக்கிறது, இத்துடன் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 6.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. மெமரியை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 128 ஜிபி, 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் உள்ளது.

    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3, GPS, GLONASS, கலிலியோ, QZSS, USB டைப்-C உள்ளது.

    ரியல்மி C85 5ஜி ஸ்மார்ட்போன், பரோட் பர்பிள் மற்றும் பீகாக் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மாடலின் விலை ரூ. 15,499 ஆகும். 6GB + 128GB மாடலின் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கிறது.

    • புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும்.
    • இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    இந்தியாவில் ஒன்பிளஸ் 15 சிரீசின் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 15R அடுத்த மாதம் 17ஆம் தேதி அறிமுகப்படுத்துவதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 16 கொண்டிருக்கும். இத்துடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K மதிப்பீடுகளுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வாழ்நாள் முழுக்க உத்தரவாதத்துடன் கிரீன் லைன் (பச்சை கோடு) பிரச்சினை ஏற்படாது என ஒன்பிளஸ் உறுதியளிக்கிறது.

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் மிண்ட் பிரீஸ் வண்ணங்களில் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இந்த வார இறுதியில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஒன்பிளஸ் ஏஸ் 6T-ஐ போலவே இருக்கும் என தெரிகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 மற்றும் 8000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

     


    இதன் இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் சீன வெர்ஷனில் 50MP + 8MP கேமரா சென்சார்கள் இடம்பெறுகின்றன.

    இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்த வாரங்களில் வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் கூறுகிறது. வழக்கம் போல், புதிய ஒன்பிளஸ் 15R ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும். அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும்.

    • இத்துடன் 6.77-இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டிருக்கிறது.

    நத்திங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல் இம்மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 27ஆம் தேதி நத்திங் போன் (3a) லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புறத்தில் டெம்பர்டு கிளாஸ், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமராக்கள், கிளிஃப் லைட், 2TB வரை மெமரியை நீட்டிக்கும் வசதி மற்றும் டூயல் 5G உடன் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்படும் என்று தெரிகிறது.



    இத்துடன் 6.77-இன்ச் FHD+ 120Hz சூப்பர் AMOLED ஸ்கிரீன் கொண்டுள்ளது, இது 3000 nits வரை பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இது போன் (3a)-ஐ போன்றது. இது சிஎம்எஃப் போன் 2 ப்ரோ மாடலை போன்றே மீடியாடெக் டிமென்சிட்டி 7300 ப்ரோ பிராசஸரால் இயக்கப்படுகிறது.

    இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த நத்திங் ஓஎஸ் 3.5 கொண்டிருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு 16 அப்டேட் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நத்திங் நிறுவனம் 3 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இது 20 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்ய முடியும். மற்ற மாடல்களை போன்றே, இந்த ஸ்மார்ட்போனும் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

    • இது ஸ்மார்ட்போன்களின் கேமரா பயன்பாட்டில் உள்ள டெலி-கன்வெர்ட்டர் பயன்முறையைப் பயன்படுத்தி தானாகவே செயல்படுத்த முடியும்.
    • விவோ X300 சீரிசில் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் வழங்கப்படும்.

    விவோ நிறுவனத்தின் X300 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. விவோX300 மற்றும் X300 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் இன்னும் இரு வாரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், விவோ X300 ஸ்மார்ட்போனின் விலை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் தகவலின் அடிப்படையில், இது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனுடன் போட்டியிடக்கூடும். கூடுதலாக, ப்ரோ வேரியண்ட் உடன் தனித்தனியாக வாங்கக்கூடிய டெலி-கன்வெர்ட்டர் கிட் இந்திய விலையையும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.

    விவோX300 இந்தியாவில் விலை விவரம்:

    டிப்ஸ்டர் சஞ்சு சௌத்ரி தனது எக்ஸ் தள பதிவில் விவோ X300 பேஸ் மாடலின் விலையை பகிர்ந்துள்ளார். அதன்படி விவோX300 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 89,999 என்று அவர் கூறியுள்ளார். இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 74,999 ஆகவும், 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 80,999 ஆகவும் இருக்கலாம்.

    இது தவிர, இந்தத் சீரிசுக்கான டெலி-கன்வெர்ட்டர் கிட் அல்லது டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் கிட் விலை இந்திய சந்தையில் ரூ. 20,999 என கூறப்படுகிறது. இந்த கிட், கிளிக் செய்யப்படும் எந்தப் படத்தின் ஆப்டிகல் ஜூமையும் நீட்டிக்கும் Zeiss 2.35x டெலி-கன்வெர்ட்டர் லென்ஸ்களை வழங்குகிறது. இது ஸ்மார்ட்போன்களின் கேமரா பயன்பாட்டில் உள்ள டெலி-கன்வெர்ட்டர் பயன்முறையைப் பயன்படுத்தி தானாகவே செயல்படுத்த முடியும்.

    புதிய விவோX300 ஸ்மார்ட்போன் சம்மிட் ரெட் நிறத்தில் வெளியாகும் என்று டிப்ஸ்டர் கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் மிஸ்ட் ப்ளூ மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரீமியம் X300 ப்ரோ மாடல் டூன் பிரவுன் மற்றும் ஃபாண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    இது தவிர, விவோ X300 சீரிசில் 3nm மீடியாடெக் டிமென்சிட்டி 9500 சிப்செட் வழங்கப்படும் என்றும், இது VS1 ப்ரோ இமேஜிங் சிப் மற்றும் V3+ இமேஜிங் சிப் உடன் இணைக்கப்படும் என்றும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஒரிஜின் ஓஎஸ் 6 இல் இயங்கும்.

    • 3 மாதங்களில் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது.
    • இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் விற்கப்பட்ட போன்களை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும்.

    மனிதனின் 6-வது விரல் ஸ்மார்ட்போன் என சொல்லும் அளவுக்கு அதன் பயன்பாடும் சேவையும் அதிகரித்துள்ளது. தகவல் தொடர்பு, இணைய அணுகல், புகைப்படம் எடுக்கும் வசதி, பண பரிவர்த்தனை, ஏ.ஐ., என பல அம்சங்களை ஒருங்கே பெற்ற தொழில்நுட்ப சாதனமாக ஸ்மார்ட்போன் விளங்குகிறது. தற்போதைய டிஜிட்டல் உலகம் ஸ்மார்ட்போன் இல்லாமல் இயங்காது என்பதால் ஸ்மார்ட்போன் யுகம் என்ற சொல்பதத்துக்கு பொருத்தமாக அதன் செயல்பாடு உள்ளது. மேலும் செல்போன் ஒரு ஆடம்பர குறியீடாகவும், பெண்களுக்கான பாதுகாப்பு அம்சமாகவும் மாறியுள்ளது.

    இத்தகைய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச டேட்டா கார்ப்ரேஷன் (ஐ.டி.சி.) என்னும் பிரபல தரவு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் இந்த நிதியாண்டுக்கான 2-ம் காலாண்டில் (ஜூலை-செப்) நாட்டின் மொத்த ஸ்மார்ட்போன் விற்பனை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3 மாதங்களில் 4 கோடியே 80 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலத்தில் விற்கப்பட்ட போன்களை காட்டிலும் 4.3 சதவீதம் அதிகமாகும். ஜி.எஸ்.டி. வரிசீர்திருத்தம், பண்டிகை காலம், வசதியான தவணை வசதி மற்றும் பழைய சாதனங்களை மாற்றும் திட்டங்களால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

    அந்த ஆய்வின்படி அடிப்படை நிலை ஸ்மார்ட்போன்களைவிட பிரிமியம் ரகம் என்னும் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் விற்கப்படும் போன்களே அதிகளவில் விற்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் விவோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அது 18.3 சதவீத சந்தை மதிப்பை பெற்றுள்ளது. விவோ நிறுவனம் இந்த பட்டியலில் 7-வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அதனை தொடர்ந்து ஒபோ நிறுவனம் 13.9 சதவீதம் சந்தை மதிப்பை பெற்றுள்ளது. சாம்சங் 12.6 சதவீதம் அளவில் சந்தை மதிப்பை பெற்றது. செப்டம்பரில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்தநிலையில் அந்த நிறுவனம் 50 லட்சம் செல்போன்களை விற்று இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக மோட்டோரோலா நிறுவனம் 52.4 சதவீதம் வருடாந்திர உயர்வை கண்டு பட்டியலில் 7-ம் இடம் பிடித்துள்ளது. ஸ்மார்ட்போன் விற்பனை சராசரி ரூ.26,079 (294 டாலர்கள்) ஆக இருந்துள்ளது.

    ×