search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வங்கி ஏ.டி.எம். சரிவர இயங்காததால் வாடிக்கையாளர்கள் அவதி
    X

    வங்கி ஏ.டி.எம். சரிவர இயங்காததால் வாடிக்கையாளர்கள் அவதி

    • ரிசர்வ் வங்கி விதிப்படி 24 மணி நேரமும் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை பாதுகாப்பாக காவலுடன் வைக்கவேண்டும்.
    • டிஜிட்டல் எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியாமல் அழிந்தநிலையில் இருக்கின்றன.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட நுகர்வோர்பாதுகாப்பு மையம் கோரிக்கதிருத்துறைப்பூண்டி நகரில் தேசிய மற்றும் தனியார் வங்கி களின்10 ஏடிஎம் எந்திரங்கள் இயங்கி வருகின்றன. வங்கிகளில் நேரடியாக வரும் கூட்டத்தை குறைப்பதற்காக ரிசர்வ் வங்கி ரோடு ஓரங்களில்ஏடிஎம் எந்திரங்களை 24 மணி நேரம் இயக்கி பணம் எடுக்க வசதியாக தேசியதனியார் வங்கிகளை ஏடிஎம் எந்திரங்கள் அமைக்க அனுமதித்துள்ளது.

    ரிசர்வ் வங்கி விதிப்படி 24 மணி நேரமும் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை பாதுகாப்பாக காவலுடன் வைக்கவேண்டும். இதன்படி சிசி டிவியும் கேமராவுடன்அமைக்க ப்பட்டுள்ளது.

    ஆனால் தேசிய மற்றும் தனியார் வங்கிகள் ஏடிஎம்களை முறையாக பராமரி க்கவில்லை.

    இரவு நேரங்களில் பணம் இருப்பதில்லை.

    டிஜிட்டல் எழுத்துக்கள் கண்ணுக்கு தெரியாமல் அழிந்தநிலையில் இருக்கின்றன.

    கோளாறுகளை உடன் சீர் படுத்துவதில்லை.

    அவசரமாக மருத்துவமனை க்குசெல்லும் நோயாளிகள் மற்றும்வெளியூர் பயனாளிகள் ஆகியோர் ஏடிஎம்மில் பணம் எடுக்க இயலாமல் தடுமாறு கின்றனர்.

    இது சம்பந்தமாக திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு புகாரும் வந்துள்ளது.

    ஆதலால் திருவாரூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக ஏடிஎம் எந்திரங்களில் ஏற்பட்டுள்ள குறைகளை நீக்கி 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மையம் சார்பாக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×