search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தை இரண்டாக பிரிக்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்- எஸ்.பி. பேச்சு
    X

    கண்காணிப்பு கேமரா மையத்தை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்து பேசினார்.

    திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தை இரண்டாக பிரிக்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்- எஸ்.பி. பேச்சு

    • 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா மையத்தை எஸ்பி திறந்து வைத்தார் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகமும், வர்த்தக சங்கமும் இணைந்து நகரம் முழுவதும் 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்க போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் வரவேற்றார்.

    மாரிமுத்து எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் , வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கண்காணிப்பு மையத்தை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்து பேசும்போது :-

    நகர சுற்று வட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது

    திருத்துறைப்பூண்டியில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் போலீஸ் நிலையத்தில் நிறுத்து வாகனம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது .இதில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் இரண்டாகப் பிரிப்பதற்கு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், நகராட்சி நியாயமான குழு உறுப்பினர் பாண்டியன், ஆணையர் அப்துல் ஹரிஷ், நகராட்சி பொறியாளர் பிரதன் பாபு ,நகராட்சி துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வீரசேகரன் , இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×