search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்
    X

    குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

    • குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என்று ஒன்றிய குழு தலைவர்
    • குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில்

    கரூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில், ஒன்றிய குழு சாதாரண கூட்டம், ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய குழு துணை தலைவர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், கூட்டம் துவங்கும் முன் ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மு க்கு மன்றத்தின் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில், குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஒவ்வொரு ஊராட்சி பகுதியில் கண்காணிப்பு கேமராக்களும், ஒவ்வொரு ஊராட்சிக்குட்பட்ட இரு தொடக்கப்பள்ளி அல்லது நடுநிலைப் பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் முடிவு செய்யப்பட்டதாக ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகர் கூறினார்.தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய வரவு செலவுகள் மற்றும் திட்ட பணிகள் குறித்து 19 தீர்மானங்களை மேலாளர் சுரேஷ் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது, கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×