search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "camera"

    • கேமராவை சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்திச் சென்றனர்.
    • வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ரங்கப்பனூர் பஸ் நிறுத்தத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசார ணையில், ரங்கப்பனூர் வடக்கு தெருவை சேர்ந்த கணபதி (வயது 25) என்பவர் கண்கா ணிப்பு கேமராவை உடைத்து சேதப்ப டுத்தியது தெ ரிய வந்தது. இதனை யடுத்து கணபதியை போலீசார் கைது செய்தனர்.

    • கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.
    • விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் மற்றும் கண்காணிக்கவும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வடபொன்பரப்பி போலீஸ் நிலையம் சார்பில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.

    இந்த கண்காணிப்பு கேமராவை யாரோ மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை உடைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
    • கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம்.

    ரத்த அழுத்தத்தை கண்காணிக்க குறைந்த விலையில் புதிய ஸ்மார்ட் போன்களை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷை பயன்படுத்தி பயனரின் விரல் நுனியில் ரத்த அழுத்தத்தை கண்காணிக்கும் எளிய, குறைந்த விலை கிளிப்பை அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டியாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த கிளிப் 3டி அச்சிடப்பட்ட பிளாஸ்டிக் இணைப்பு ஆகும். இது ஸ்மார்ட் போனின் கேமரா மற்றும் பிளாஷ் மீது பொருத்தலாம். ரத்த அழுத்தத்தை அளவிட பயனர், கிளிப்பை அழுத்தும்போது ஸ்மார்ட் போனின் பிளாஷ் விரல் நுனியில் ஒளிரும். பின்னர் ரத்த அழுத்த அளவீட்டை காட்டும்.

    இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, இந்த தொழில்நுட்பம் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு மிகவும் பயனளிக்கும். ரத்த அழுத்த கண்காணிப்புக்கான தடையை குறைக்க மலிவான தீர்வை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இந்த சாதனம் மற்ற ரத்த அழுத்த கண்காணிப்பில் இருந்து வேறுபடுகிறது. ரத்த அழுத்தத்தை அளவிட பயனர் விரல் நுனியில் கிளிப்பை அழுத்தினால் போதும் என்றனர்.

    • பெண் தோழி ஒருவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் நகரில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.
    • துரதிருஷ்டம் என்னவென்றால் அந்த டூ வீலர் பிரசன்னாவின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது.

    என்னங்க... பைக்கில் வேறு ஒரு பெண்ணுடன் நீங்கள் சென்றதை பார்த்ததாக பக்கத்து வீட்டு அக்கா சொன்னாங்க.. அது உண்மையா?

    "ஏய்... உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையா? யாரோ ஒருத்தர் சொன்னதை கேட்டு என்னை சந்தேகப்படுறீயே...

    அப்படி இல்லீங்க... காலம் போகும் போக்கு சரியில்லை. இந்த மாதிரி எத்தனையோ சம்பவங்களை தினமும் செய்திதாள்களில் படிக்கிறேன். அதான் பயமா இருக்கு! எனக்கும் நம் பிள்ளைகளுக்கும் துரோகம் செஞ்சிடாதீங்க...

    அட... என்ன நீ... உனக்கு நான் துரோகம் பண்ணுவேனா? என்னை நம்பு. உன் மீது சத்தியமா சொல்கிறேன். எந்த பெண்ணையும் நான் பைக்கில் ஏற்றி செல்லவில்லை என்று மனைவியை சமாளிப்பதற்குள் ஒரு வழியாகிவிடும்.

    ஆனாலும் முழு திருப்தி அடையாமல் லேசான சந்தேகத்துடன் 'அப்படி, ஏதாவது தப்பு செஞ்சீங்க... நான் பொம்பளையா இருக்க மாட்டேன்...' என்று மனைவி எச்சரிப்பதை கேட்டு 'அப்பாடா... ஒரு வழியா நம்ப வைத்து சமாளித்து விட்டோம்' என்று கணவர் ஆறுதல் அடைந்த காலம் உண்டு.

    கணவன்மாரே உஷார். நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உங்களை கண்டுபிடித்து ஆதாரத்துடன் உங்கள் மனைவியிடமே போட்டுக் கொடுக்கவும் வாய்ப்பு உண்டு. இதற்கு கேரளாவில் நடந்திருக்கும் சம்பவமே சாட்சி.

    கேரள மாநிலம் இடுக்கியை பூர்வீகமாக கொண்டவர் 32 வயது வாலிபர் பிரசன்னா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளார்கள். தற்போது இந்த தம்பதியினர் திருவனந்தபுரம் அருகே வசித்து வருகிறார்கள்.

    பிரசன்னா ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். தினமும் டூ வீலரில் வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருகிறார். அவருடைய போதாத நேரம் இப்படி சிக்குவோம் என்று அவர் எதிர்பார்த்து இருக்கவேமாட்டார்.

    கடந்த மாதம் 25-ந் தேதி கடையில் இருந்து திரும்பும்போது தனது பெண் தோழி ஒருவரை பைக்கில் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் நகரில் ஜாலியாக வலம் வந்துள்ளார்.

    கேரளாவில் முக்கிய இடங்கள் அனைத்திலும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் அதி நவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை அது படம்பிடித்து அனுப்பிவிடும். அபராத தொகையும் எவ்வளவு என்பது வீட்டுக்கே சென்றுவிடும்.

    ஒவ்வொருவரையும் நிறுத்தி அபராதம் விதிக்கும் பெரிய தலைவலி கேரள போக்குவரத்து போலீசுக்கு இல்லை. சம்பவத்தன்று பெண்ணுடன் ஊர் சுற்றிய பிரசன்னா ஜாலி மூடில் இருந்ததால் 'ஹெல்மெட்' அணிந்து செல்ல மறந்து போனார்.

    சாலையில் சென்றபோது இதை படம் பிடித்து இருக்கிறது கேமிரா. துரதிருஷ்டம் என்ன வென்றால் அந்த டூ வீலர் பிரசன்னாவின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது.

    எனவே கேமிரா பிடித்த போட்டோவை வண்டி உரிமையாளரான பிரசன்னாவின் மனைவியின் செல்போனுக்கே அனுப்பி வைத்துவிட்டது. அபராத தொகையை பற்றி பிரசன்னாவின் மனைவி கவலைப்படவில்லை. அவருக்கு பின்னால் 'ஈ' என்று இளித்தபடி ஒரு பெண் தோளில் கைபோட்டபடி இருக்கிறாளே அவள் யார்? என்பதுதான் ஆத்திரத்தில் கொந்தளிக்க வைத்தது.

    வரட்டும்... என்று காத்திருந்தவர் அழைப்பு மணி ஒலித்ததும் கணவர்தான் வருகிறார் என்பதை அறிந்து கதவை திறந்தார். மனைவி வழக்கம் போல் இல்லையே சேலையை வரிந்து கட்டிக் கொண்டு பத்திரகாளியாட்டம் தெரியுறாளே... என்னவென்று தெரியவில்லையே என்று மனதுக்குள் ஒருவிதமான கலக்கத்துடனேயே வீட்டுக்குள் சென்ற பிரசன்னா வேலை களைப்பில் நாற்காலியில் அமர்ந்தார்.

    வழக்கமாக வீடு திரும்பியதும் சிரித்து கொண்டே வரவேற்று ஆவிபறக்க கொண்டு தரும் காபி களைப்பை நீக்கிவிடும். ஆனால் இன்று முகத்திலும் சிரிப்பை காணோமே என்று யோசித்து கொண்டிருந்தபோது சமையலறையில் பாத்திரங்கள் விழுந்து உடைவது போல் பயங்கர சத்தம் கேட்டது.

    ஆஹா... ஏதோ வில்லங்கம் வரப்போகுது என்பதை பிரசன்னாவும் யூகித்து கொண்டார். சிறிது நேரத்தில் வெளியே வந்த மனைவி நேராக பிரசன்னாவின் அருகில் போய் நின்று கொண்டு "யாருய்யா.. அந்த பெண்" என்று நேராகவே கேள்வியை போட்டார்.

    பெண்ணா... நீ என்ன கேட்கிறாய்? என்று எதுவும் புரியாதது போல் தவித்த பிரசன்னாவிடம் "சமாளிக்காதேய்யா... அதான் உன் மூஞ்சியே சொல்லுதே பைக்கில் ஒருத்தியை ஏற்றிக் கொண்டு ஊர் சுத்துறியே அந்த பெண் யார்" என்று கேட்டேன் என்றார்.

    "ஏய்... நீ என்ன சொல்றே... பைக்கில் பெண்ணா... என்ன கனவு ஏதாச்சும் கண்டியா...? ஆமாய்யா... கனவு வேற காண வேண்டுமா? உன் லட்சணம் தான் ஊருக்கே தெரிந்து இருக்கிறதே. இதில் கனவு வேறு காண வேண்டுமாக்கும்...

    உண்மைய சொல்லு... இல்லாட்டி நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்றார். அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தார் பிரசன்னா. அதை பார்த்து 'என்னய்யா... அமைதியா இருந்தால் நடந்ததெல்லாம் இல்லை என்று ஆகிவிடுமா?' என்று அதிர்ந்தார்.

    சந்தேகப்படும் உன்னை எப்படி நான் சமாளிப்பது என்று கம்மிய குரலில் பம்மிய பிரசன்னாவிடம் தனது செல்போனில் இருந்த போட்டோவை காட்டி இனியாவது நம்புவியா? இது யார்? என்றார்.

    இதுக்குத்தான் இவ்வளவு கோபமா? என்று வலுக்கட்டாயமாக முகத்தில் சிரிப்பையும், கையையும் போட்டபடி அமர்ந்து இருக்கிறாளே? கேட்டு தகராறு செய்தார். இந்த தகராறு அன்றோடு முடிந்துவிட வில்லை.

    அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது. பிரசன்னாவும் பதிலுக்கு கத்த வீடே போர்க்களமாகிப் போனது. தகராறு முற்றிய நிலையில் அந்தப் பெண் கரமனை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். தனது கணவர் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னையும், தனது பிள்ளைகளையும் கொடுமைபடுத்துவதாக புகாரை கொடுத்து ஆதாரமாக கேமிரா அனுப்பி இருந்த போட்டோவையும் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இ.பி.கோ.321 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்), 341 (தவறான கட்டுப்பாடுகளை செய்தல்), 294 (பொது இடத்தில் ஆபாச செயலை செய்தல்), சிறார் சட்டம் 75 (குழந்தைகளை புறக்கணிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்தனர்.

    ஆணோ, பெண்ணோ... ஊருக்கு தெரியாது என்று தவறுகள் செய்தால் மனித கண்களை தாண்டி செயற்கை கண்களும் கண்காணிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    • சி.சி.டி.வி. கேமராவில் விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் துணைக்கோவிலாக காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு செல்ல பழைய படிக்கட்டு பாதை மற்றும் புதிய படிக்கட்டு பாதை என 2 வழிகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதைத்தொடர்ந்து இரவு கோவிலை பூட்டி சென்றனர்.

    நேற்று காலை கோவிலை திறப்பதற்காக கோவில் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சென்றனர். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

    மேலும் கோவிலுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பூஜை பொருட்கள், பித்தளை வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். யாரோ மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து பொருட்களை திருடி உள்ளனர். அவர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவின் ஹார்டு டிஸ்க்கையும் திருடிச்ெசன்றி ருக்கிறார்கள்.

    மேலும் சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளை சம்பவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் காமிரா மீது விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டியுள்ளனர்.

    கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை திருடிய சம்பவம் திருப்பரங் குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலைக்கு செல்லும் படிக்கட்டு பாதை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். காசி விசுவநாதர் கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு ள்ளது. இந்தநிலையில் தான் கோவிலில் திருட்டு நடந்திருக்கிறது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வாகனத்தின் உள்ளே டிரைவர் இருக்கையின் அருகில் தனியாக ஒரு கேமரா நிறுவப்பட உள்ளது.
    • ரோந்து வாகன கேமராக்கள் மூலமாக முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களை போலீசார் நேரடியாக கண்காணிக்க முடியும்.

    சென்னையில் குற்ற செயல்களை தடுக்க போலீஸார் ரோந்து வாகனங்களில் வலம் வருகிறார்கள். இதற்காக சென்னை மாநகர காவல்துறையில் 320 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வாகனத்தின் மேல்பகுதி மற்றும் பின்பகுதி ஆகியவற்றில் தலா ஒரு கேமராக்கள் என வாகனத்துக்கு வெளியே 2 கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    வாகனத்தின் உள்ளே டிரைவர் இருக்கையின் அருகில் தனியாக ஒரு கேமரா நிறுவப்பட உள்ளது. இந்த கேமராக்கள் மூலமாக குற்றச்செயல்களை தடுக்கவும், பணியில் உள்ள காவலர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும் முடியும்.

    இதன் பயன்பாடு என்ன என்பது பற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, ரோந்து வாகன கேமராக்கள் மூலமாக முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களை போலீசார் நேரடியாக கண்காணிக்க முடியும் என்றனர்.

    குற்றச்செயல்களை தடுக்க சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், கடைகள் மற்றும் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மட்டுமே தற்போது கைகொடுத்து வருகின்றன. ஆனால் பல நேரங்களில் இந்த கேமராக்கள் செயல்படாமல் போய்விடுகின்றன.

    இதன் காரணமாக குற்றவாளிகளை அடையாளம் காண்பதும், குற்றசெயல்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களை கண்டுபிடிப்பதும் சிரமமான காரியமாகி விடுகிறது. ஆனால் ரோந்து வாகனங்களில் பொறுத்தப்படும் கேமராக்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் சந்தேக நபர்களை துல்லியமாக படம் பிடிக்க முடியும். இதற்கான கட்டுப்பட்டு அறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும். அங்கிருந்தபடியே கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்க்கமுடியும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இப்படி வாகனத்தின் வெளிப்பகுதியில் பொறுத்தப்பட்ட்டுள்ள கண்கானிப்பு கேமராக்கள் மூலமாக குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்பது இந்த கேமராக்களின் சிறப்பாக இருக்கும் நிலையில் வாகனத்தின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள கேமராவின் மூலமாக போலீசார் என்ன செய்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்யலாம். இதன் மூலம் அவர்கள் வாகனத்தின் உள்ளே வைத்து தவறு ஏதும் செய்கிறார்களா? என்பதும் தெரிய வந்துவிடும்.

    இதனால் போலீசார் தப்பு செய்யாமல் பணியாற்ற வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ரோந்து வாகனங்களில் கேமராக்களை பொருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    • ஜெயங்கொண்டம் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்
    • நாகல் குழி கிராமத்தில் உள்ள நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கிராமம் முழுவதும் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் முக்கிய வீதி உள்ளிட்ட இடங்களில் தவறுகள் நடப்பதை தடுப்பதற்கு அனைத்து கிராமங்களிலும் இளைஞர்கள், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையாக முன்னதாக வாரியங்காவல் கிராமத்தில் அனைத்து வீதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு விட்டது. இரண்டாம் கட்டமாக நாகல் குழி கிராமத்தில் உள்ள நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கிராமம் முழுவதும் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் தொடங்கி வைத்தார்.மேலும் அவர் பேசுகையில் தொடர்ந்து குற்ற செயல் நடைபெற்று வருவதாகவும் அதை தடுத்து நிறுத்த அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த பட வேண்டும்.

    அப்படி பொருத்தினால் தான் குற்றங்களை நாம் தடுத்து நிறுத்த முடியும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தி வருவதாக அவர் பேசினார்.முன்னதாக உடையார்பாளையம் ஆய்வாளர் வேலுச்சாமி வரவேற்று பேசினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, நாகல் குழி நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் வீரமணி, செயலாளர் கார்த்திக், பொருளாளர் சின்னமணி மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    • கடையின் வெளியே சாலைகள் தெரியும் அளவிற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
    • உங்களுக்கு ரவுடிகளால் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று போலீசார் -வணிகர்கள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமை தாங்கி பேசியதாவது :-

    கடைகளில் யாராவது பொருட்கள் திருடுகிறார்களா என கண்காணிப்பதற்காக கடையின் உள்ளே கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளீர்கள். அதேபோல் கடையின் வெளியே சாலைகள் தெரியும் அளவிற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    அப்படி செய்தால் தான் மர்ம நபர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என கண்டுபிடிக்க முடியும். உங்களுக்கு ரவுடிகளால் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

    உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் சார்பில் குழு அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வணிகர்கள் கூறும்போது, போலீசாருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். நகரில் இரவு நேரங்களில் அதிக அளவில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும்.

    மாநகரில் 1400 கண்காணிப்பு கேமரா பொருத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அந்த கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

    • கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
    • ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் போலீசார் இடையேயான கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கஞ்சா, சாராயம் போன்ற போதைப்பொருட்கள் விற்பவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் நடக்காத வகையில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கிராமப்பகுதிகளில் தங்களது குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால் நீர்நிலைகள் அல்லது தண்ணீர் தேங்கிய பகுதிகளில் குளிக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தனியாக அனுப்பக்கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நள்ளிரவு 2 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அருகே லாரிகள் வந்த போது, ஒரு லாரி பழுதாகி நின்று விட்டது. அவர்களில் ஒருவர் திடீரென காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.
    • சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் அங்குள்ள கேமரா பதிவில் சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு சேலம் வழியாக காற்றாலை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் இறக்கைகளை ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்த லாரிகளை கர்நாடகா மாநிலம், ஹசன் மாவட்டம், சென்னார்யாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மோகன் (35) என்பவர் காரில் கண்காணித்த படி பின்னால் சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அருகே லாரிகள் வந்த போது, ஒரு லாரி பழுதாகி நின்று விட்டது.

    இதையடுத்து 2 லாரிக–ளையும் சாலையோரமாக நிறுத்தி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் கார் டிரைவர் மோகனிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் லாரியில் தண்ணீர் இருக்கி–றது, எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.

    அந்த சமயத்தில், அவர்களில் ஒருவர் திடீரென காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் அங்குள்ள கேமரா பதிவில் சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • கடந்த ஆண்டு சென்னையில் 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
    • விதிமீறல் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கவும், வாகன திருட்டை கண்காணிக்கவும் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிவதற்காக கடந்த ஆண்டு 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

    ஏ.என்.பி.ஆர். எனப்படும் இந்த கேமராக்கள் போக்குவரத்து சிக்னல்களில் விதிமுறைகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை தானாக படம் பிடித்து கண்டறியும். சிக்னலில் நிற்காமல் செல்லும் வாகனங்கள், சிக்னல் எல்லைக் கோட்டை தாண்டி நிற்கும் வாகனங்கள், செல்போன் பேசிக் கொண்டே செல்பவர்களின் வாகனங்களை அடையாளம் கண்டறியும்.

    இந்த ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் வஹான் போர்ட்டலுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் பெயரில் தானாக மின் ரசீதுகள் உருவாக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அவை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அனுப்பப்படும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அபராதம் செலுத்தாதவர்களை அழைத்து வர பிரத்யேக கால்சென்டரும் ஏற்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கவும், வாகன திருட்டை கண்காணிக்கவும் சென்னையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான டெண்டரை மாநகர போலீசார் நாளை (திங்கட்கிழமை) இறுதி செய்கிறார்கள்.

    புதிய கேமராக்கள் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிவதோடு ஒரு அறிவார்ந்த வீடியோ மேலாண்மை அமைப்பை இயக்க பயன்படுத்தப்படும். இது சாலைகளில் வாகன திருட்டை கண்காணிக்கவும், எச்சரிக்கை செய்வதற்கான திறனையும் கொண்டுள்ளது.

    இந்த கண்காணிப்பு அமைப்பு திருடப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை கண்டறிந்து எச்சரிக்கை குரல் அழைப்புகள் மற்றும் தகவல்களை எஸ்.எம்.எஸ். அல்லது வாட்ஸ் அப் மூலம் அருகில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கும்.

    மேலும் அனைத்து கேமராக்களில் இருந்தும் அதேநேரத்தில் பெறப்பட்ட டேட்டாக்களை ஒருங்கிணைத்து திருடப்பட்ட வாகனம் கொண்டு செல்லப்படும் வழியை கண்காணிக்க உதவும்.

    திருடப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி செயின் பறிப்பு, கொள்ளை, கொலை சம்பவங்கள் நடத்தப்படுவதால் இந்த கேமராக்கள் அதை தடுக்க உதவியாக அமையும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா மையத்தை எஸ்பி திறந்து வைத்தார் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகமும், வர்த்தக சங்கமும் இணைந்து நகரம் முழுவதும் 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்க போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் வரவேற்றார்.

    மாரிமுத்து எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் , வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கண்காணிப்பு மையத்தை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்து பேசும்போது :-

    நகர சுற்று வட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது

    திருத்துறைப்பூண்டியில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் போலீஸ் நிலையத்தில் நிறுத்து வாகனம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது .இதில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் இரண்டாகப் பிரிப்பதற்கு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், நகராட்சி நியாயமான குழு உறுப்பினர் பாண்டியன், ஆணையர் அப்துல் ஹரிஷ், நகராட்சி பொறியாளர் பிரதன் பாபு ,நகராட்சி துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வீரசேகரன் , இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    ×