search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus"

    • இசக்கிபாண்டி பாளையில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • பஸ் டிரைவர்களின் அலட்சி யத்தினால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்கு நேரி அருகே உள்ள அ.சாத்தான்குளம் கிராமம் பிள்ளை யார்கோவில் தெருவை சேர்ந்த வர் ராமச்சந்திரன். இவரது மகன் இசக்கிபாண்டி(வயது 13).

    8-ம் வகுப்பு மாணவன்

    இவர் பாளையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் அவர் ஊரில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்து, அங்கிருந்து மாநகர பஸ்சில் ஏறி பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்றும் பள்ளிக்கு வந்த இசக்கிபாண்டி, மாலையில் வீட்டுக்கு புறப்பட்டான்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து அவரது ஊருக்கு செல்லும் பஸ்சை பிடிக்க வேண்டும் என்பதற்காக இசக்கி பாண்டி அவசரமாக பள்ளிக்கு வெளியே வந்துள்ளான். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் மாணவர்கள் கூட்டம் இருந்த நிலையில், வேறு வழியின்றி மாணவன் அந்த பஸ்சில் ஏறி படிக்கட்டில் நின்றபடி பயணித்துள்ளார்.

    படுகாயம்

    அப்போது பாளை பஸ் நிலையத்திற்கு முன்பாக நூலகம் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக இசக்கிபாண்டி பஸ்சில் இருந்து கீழே விழுந்தான். இதில் இசக்கி பாண்டியின் ஆசனவாய் பகுதி 2 ஆக கிழிந்து படுகாயம் அடைந்தார். உடனே பஸ் பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.

    பின்னர் படுகாயம் அடைந்த இசக்கிபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக மாநகர பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள் பஸ் இல்லாததால் கூட்டம் மிகுந்த பஸ்களில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. ஆனால் பஸ் டிரைவர்களின் அலட்சி யத்தினால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

    நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் இருந்து சேரன்மகா தேவி சுற்றுவட்டாரங்களுக்கு செல்லும் மாணவர்கள் மாலையில் வீடு திரும்பும்போது இதே நிலைக்கு தான் தள்ளப்படு கிறார்கள். நேற்று கூட அந்த பள்ளி மாணவர்களை முறையாக நிறுத்தி பஸ்சில் ஏற்றி செல்லாமல் டிரைவர் அவசரமாக பஸ்சை எடுத்து சென்றதால் மாணவர்கள் தவறி விழுந்த வீடியோ காட்சி கள் வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில் மற்றொரு பள்ளி மாணவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    எனவே பள்ளி விடும் நேரங்களில் கிராமப்புறங்க ளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி யிலும் பணியாற்றும் ஆசிரிய ர்கள், பஸ்சில் மாணவர்களை பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும். டிரைவர்கள் முறையாக நின்று மாணவர்களை ஏற்றி செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்துகின்றனர்.

    நேரம் தொடர்பான பிரச்சினை: துறையூரில் நடுரோட்டில் பஸ்சை நிறுத்திய மினி பஸ் டிரைவரால் பரபரப்பு

    துறையூர்,  

    திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து கீரம்பூர் மார்க்கத்தில் 2 தனியார் மினி பஸ்கள் 10 நிமிட இடைவெளியில் புறப்பட்டு செல்கிறது. இந்த 2 பஸ்களுக்கிடையே நேரம் தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்படுவதும், பின்னர் இரு தரப்பினரும் மாறி,மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, சமரசமாக செல்வதும் வழக்கம்.

    இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் இந்த இரு பஸ்களுக்கு இடையே நேரம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு மினி பஸ் டிரைவர் பஸ்சினை துறையூர் - திருச்சி பிரதான சாலையில் எதிர் திசையில் நிறுத்தினார். பின்னர் 2 டிரைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதித்தடு. பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் நின்றன. சம்பவ இடத்திற்கு போக்குவரத்து போலீசார் வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துறையூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் வகையில்,புதிதாக போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்பட்டு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் போக்குவரத்து போலீசார் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் நகரப் பகுதிகளில் சரக்குகளை இறக்க வரும் வாகனங்களை கண்டுகொள்ளாததாலும், கடும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.

    மேலும் துறையூர் பகுதியில் இயங்கும் ஒரு சில தனியார் மினி பஸ்கள் உரிய வழித்தடங்களில் இயங்காமல், அவர்களுடைய இஷ்டத்திற்கு தகுந்தற்போல் பல்வேறு வழித்தடங்களில் இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு,விபத்தும் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து ஆணையரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆகவே இனி வரும் காலங்களில் துறையூர் நகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் துறையூர் பகுதியில் அனுமதி பெறாமலும் மற்றும் அனுமதி பெற்று உரிய வழித்தடங்களில் இயங்காத மினி பஸ்களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துறையூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வரை தினமும் காலை, மாலையில் இயக்கப்படும் என அறிவிப்பு
    • புலிகள் காப்பக துணை களஇயக்குநா் வித்யா போக்குவரத்தை தொடங்கி வைத்தாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடி கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் பள்ளிக்கு சென்றுவர தெப்பக்காடு சூழல் மேம்பாட்டுக்குழு சாா்பில் புதிய பஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனை புலிகள் காப்பக துணை கள இயக்குநா் வித்யா தொடங்கி வைத்தாா்.

    நிகழ்ச்சியில் வனச்சரக ஊழியர்கள், பழங்குடி மக்கள், கூடலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

    பழங்குடி மாணவா்கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்ப வசதியாக,தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வரை மேற்கண்ட பஸ் தினமும் காலை, மாலையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆயுதபூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு புதுக்கோட்டையில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது
    • புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் இரா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட், புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் இரா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    21.10.2023, 22.10.2023, சனி, ஞாயிறு வார விடுமுறை, 23.10.2023 ஆயுத பூஜை, 24.10.2023 விஜய தசமி என தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக, புதுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும்,

    சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளா ங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களி லிருந்து திருச்சிக்கும், புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்க ண்ணி ஆகிய ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு முக்கிய விடுமுறை நாட்களான 3 தினங்களுக்கு மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 24.10.2023 மற்றும் 25.10.2023 செவ்வாய், புதன் நாட்களில் சென்னை தடத்தில் 300 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 200 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை, நாகப்ப ட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளா ங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    20.10.2023, 21.10.2023 மற்றும் 22.10.2023 தொடர் விடுமுறைகாரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொ ள்ளப்படுகி றார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • மாணவர்கள் பள்ளி செல்வதற்கும், பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்வதற்கும் நகர பஸ்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.
    • போதுமான அளவிற்கு நகர பஸ்களும், பஸ் உள்ளே நிற்பதற்கு போதுமான இடங்கள் இருந்தாலும் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கி செல்கின்றனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட கிராமபுறங்களில் இருந்து செங்கோட்டை மற்றும் இலஞ்சி பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி செல்வதற்கும், பள்ளி முடிந்து வீடுகளுக்கு செல்வதற்கும் நகர பஸ்களில் பயணம் மேற்கொள்கின்றனர்.

    போதுமான அளவிற்கு நகர பஸ்களும், பஸ் உள்ளே நிற்பதற்கு போதுமான இடங்கள் இருந்தாலும் காலை, மாலை நேரங்களில் இந்த மாணவர்கள் முன்பக்க, பின்பக்க படிக்கட்டுகளில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான முறையில் தொங்கி செல்கின்றனர். இதனை பார்ப்போர் நெஞ்சை பதபத வைக்கிறது.

    குறிப்பாக செங்கோட்டையில் இருந்து சுரண்டை, கடையநல்லூர், தெற்குமேடு, கற்குடி, தென்காசி, குற்றாலம் செல்லும் பஸ்களில் இந்நிலை காணப்படுகிறது. எனவே மாணவர்களின் ஆபத்தான படிக்கட்டு பயணத்தை தடுக்க அனைத்து நகர பஸ்களிலும் தானியங்கி கதவுகளை பொருத்த போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவல்துறையினரும் மாணவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.
    • போராட்டம் காரணமாக அங்கு பஸ், லாரி கடைகள் எதுவும் இயங்கவில்லை.

    கோவை,

    காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்து விடும் படி கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதற்கு கன்னட அமைப்புகள், அங்குள்ள விவசாய அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு மத சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

    கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக அங்கு பஸ், லாரி கடைகள் எதுவும் இயங்கவில்லை. போராட்டம் காரணமாக தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

    கோவையிலிருந்து பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 30 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதுபோல தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு காலை நேரத்தில் 4 பஸ்களும், மாலையில் 4 பஸ்களும் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்கள் மூலம் கோவையில் இருந்து ஏராளமானோர் தினசரி பணி விஷயமாக சென்று வருவது வழக்கம். அதே போன்று, பெங்களூருவில் இருந்தும் படிப்பு மற்றும் பணி நிமித்தமாக கோவை க்கு வருகின்றனர்.

    இன்று நடந்த போராட்டம் காரணமாக கோவையில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டு விட்டன.

    அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்களின் சேவை குறைக்கப்பட்டு ஓசூர் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    • உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.
    • பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 10-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான மாணவ மாண விகள் படித்து வருகிறார்கள்.

    பெரும்பாலும் இவர்கள் அரசு பஸ்களில் வந்து செல்கிறார்கள். காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ்நிலையத்தில் இருந்து மானாம்பதி, கீழ்ரோடு வழியாக உத்திரமேரூர் செல்லும் பஸ்களில் மாணவர்கள் அதிகம் தொங்கியபடி பயணம் செய்கிறார்கள்.

    இதனால் பல நேரங்களில் மாணவர்களுக்கும், பஸ்டிரைவர், கண்டக்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறினார்.
    • காயமடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் சுராஜ்முகமது(வயது58).

    விவசாயியான இவர் கட்டி மேட்டிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்வதற்காக வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறினார்.

    கட்டி மேடு பகுதி வளைவில் பஸ் திரும்பிய போது பஸ்சின் பின்பக்க படியில் நின்று கொண்டிருந்த சுராஜ்முகமது மற்றும் கண்டக்டர் பிரசன்னா ஆகிய இருவரும் பஸ்சில் இருந்து வெளியே சென்று விழுந்தனர்.

    இதில் சுராஜ் முகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கண்டக்டா் பிரசன்னாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    காயமடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களை பாிசோதனை செய்த டாக்டர்கள் சுராஜ்முகமது உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

    கண்டக்டர் பிரசன்னா உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிைரவர் வருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர்.
    • தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    செங்கல்பட்டு:

    விநாயகர் சதூர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்த பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குசென்றனர்.

    இதேபோல் வடமாநில தொழிலாளர்களும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வழக்கத்தை விட ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ்நிலையத்தில் குவிந்தனர். இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்து ஏறினர். நேற்று மாலை முதல் பலத்த மழை கொட்டியதால் வெளியூர் செல்ல வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அனைத்து அரசு பஸ்கள், மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு முழுவதும் முடிந்ததால் பல பயணிகள் நின்றபடியும் படிக்கட்டில் தொங்கிய படியும் சென்றனர். மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வந்த ஏராளமான பயணிகள் பஸ் கிடைக்காமல் குடும்பத்துடன் தவித்தனர்.

    சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு வரை ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருந்தனர். ஏற்கனவே சென்னையில் இருந்து வந்த பஸ்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பியதால் அவர்கள் செல்ல முடியாத நிலையில் தவித்தனர். சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர். கூடு வாஞ்சேரி பகுதியிலும் நள்ளிரவு வரை பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் தவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிலர் சரக்கு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வேறு வழியின்றி சென்னையில் இருந்து வந்த சரக்கு வாகனங்களில் சென்றனர். அதிலும் இடம் கிடைக்காமல் போட்டி போட்டு ஏறிச்சென்றனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • 2-3 பஸ்கள் மாறி பயணம் செய்து தான் மருதமலை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
    • கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

    குனியமுத்தூர்,

    கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மலுமிச்சம்பட்டி, ஈச்சனாரி, காந்திநகர், சுந்தராபுரம், குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மருதமலைக்கு பஸ்கள் இயங்கி வந்தன. அது மருதமலை செல்லும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது. எளிதாக பயணம் செய்து மருதமலை சென்று முருகனை தரிசித்து வந்தனர்.

    ஆனால் தற்போது சில ஆண்டுகளாக அந்த பஸ்கள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மருதமலை பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. தமிழகத்தில் உள்ள பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் மருதமலைக்கு செல்வது வழக்கம்.

    வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் கூட காந்திபுரம் அல்லது ரயில் நிலையத்திலிருந்து மருதமலைக்கு எளிதாக பஸ் ஏறி செல்கின்றனர். ஆனால் கோவையிலேயே பொள்ளாச்சி ரோட்டில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு மருதமலைக்கு செல்லும் அவல நிலை தற்போது உள்ளது.

    2-3 பஸ்கள் மாறி பயணம் செய்து தான் மருதமலை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே பொள்ளாச்சி சாலையில் இருந்து மருதமலைக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டால், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    பொள்ளாச்சி ரோட்டில் இருந்து மருதமலைக்கும், திருச்சி சாலை சிங்காநல்லூருக்கும், மேட்டுப்பாளையம் ரோடு துடியலூருக்கும் நேரடி பஸ் வசதி கிடையாது. ஏற்கனவே 8 ஏ பேருந்து போத்தனூரில் இருந்து திருச்சி சாலை வழியாக சிங்காநல்லூர் மற்றும் இருகூர் பகுதிக்கு இயங்கி வந்தது.

    46-ம் நம்பர் பஸ் போத்தனூரில் இருந்து மருதமலைக்கு சென்று வந்தது. 4-ம் நம்பர் பஸ் கோவை பொள்ளாச்சி ரோடு குறிச்சி ஹவுசிங் யூனிட்டில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையத்திற்கு சென்று வந்தது. இவை அனைத்தும் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

    இத்தகைய வழித்தடங்களில் பேருந்து இல்லாத காரணத்தால் இந்த பகுதிக்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்த நிலையில் உள்ளனர். மேலும் அங்கு வசிக்கும் பயணிகள் 2-3 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    கோவை பொள்ளாச்சி ரோடு, குறிச்சி, சுந்தராபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் அன்றாடம் வேலைக்கு செல்பவர்களும், கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.

    எனவே போக்குவரத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை பொள்ளாச்சி ரோட்டில் இருந்து மேற்படி வழித்த டங்களில் பேருந்துகளை இயக்கினால் பயணிகளின் சிரமம் குறைவது மட்டுமின்றி, இனிதான பயணமும் மேற்கொள்ள முடியும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பிரதமரின் இ.பஸ் சேவை திட்டத்தில் திருச்சி மாநகரம் தேர்வு
    • சுற்றுச்சூழல் மாசு குறைந்து பசுமை அதிகரிக்கும்

    திருச்சி,

    சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத ெ பாதுப் போக்கு வரத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடி க்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிக் பஸ்கள (இ.பஸ்) அதிகம் பயன்படுத்த நடிவடிக்கை எடுத்து வருகி றது. அடுத்த 10 ஆண்டுகளில் பொது போக்குவரத்தில் இ.பஸ்களின் பங்கு அதிகம் இருக்கும்.கடந்த மாதம் 16-ந் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமரின் இ.பஸ் சேவா திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.இத்திட்டத்துக்காக ரூ.57 ஆயிரத்து 613 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 10 ஆயிரம் எலக்ட்ரிக் பஸ்களை நாடு முழுவதும் பல்வேறு நகரங்க ளில் இயக்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் நகர பஸ் சேவையை விரிவு படுத்துவது, சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமையான நகர்ப்புற சேவையை அளி ப்பது ஆகிய இலக்குகள் எட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இத்திட்டம் 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகரங்களில் அமல்படுத்த ப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு தகுதி யான 169 நகரங்களை தேர்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி தமிழகத்தில் இத்திட்டத்திற்காக 10 லட்சம் முதல் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட பிரிவில் திருச்சி மாநகரம் இடம் ெபற்றுள்ளது.20 முதல் 40 லட்சம் மக்கள் தொகை பிரிவில் ேகாவையும், 5 முதல் 10 லட்சம் மக்கள் தொகை பிரிவல் ஈரோடு, சேலம், திருப்பூரும், 5 லட்சத்துக்கு குறைவாக மக்கள் தொகை பிரிவல் அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் நகரங்களும் இடம் பெற்றுள்ளன.அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் செயல்படு த்தப்பட உள்ள இத்திட்ட த்தின் கீழ் பஸ் பணிம னைகள், பராமரித்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட வசதிகளை அரசு தரப்பு ஏற்படுத்தி தரும் இ.பஸ்கள் ஸ்டாண்டர்டு, மிடி, மினி என 3 பிரிவுகளில் இ.பஸ் கள் வழங்கப்பட உள்ளன.திருச்சி மாநகரத்துக்கு இத்திட்டத்தின் கீழ் 100 பஸ்கள் வழங்கப்படும் என தெரிகிறது.இது குறித்து போக்குவ ரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கும் போது, பிரதம ரின் இ.பஸ் சேவை திட்டத்தி ன் கீழ் திருச்சி தேர்வு யெ்ய ப்பட்டுள்ளது.திருச்சியில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் போது, இபைக், சைக்கிள் பயன்பாடு மற்றும் அதற்கான வழித்த டம் ஏற்படுத்துதல் ஆகியவை உருவாக்க வாய்ப்புண்டு.இதன் மூலம் சுற்றுசுழல் மாசுபடுவது குறைந்து, பசுமை அதிகரிக்கும் என்ற னர்.

    • பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.
    • பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்தின் கடைசி நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு வேலை முடிந்ததையடுத்து, இன்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கேரளா அரசு பஸ்ஸில் பயணம் செய்தார். இளம்பெண்ணின் பின்னால் இருந்த இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

    அவர் பஸ்புறப்பட்ட சிறிது நேரத்திலேயே முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் என்ஜினியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த இளம்பெண், வாலிபரை எச்சரித்தார். இதனால் உஷாரான அந்த வாலிபர் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் இருந்தார்.

    பின்பு மீண்டும் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கூச்சலிட்டதுடன், அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். அப்போது பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் மார்த்தாண்டத்தில் பஸ்சை விட்டு இறங்க முயன்றார். ஆனால் அவரை பஸ்சை விட்டு இறங்கவிடாமல் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    அவர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும், இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது அவர் மதுரை பகுதியை சேர்ந்தவர் என்பதும், என்ஜினீயராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு ஊருக்கு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    ஓடும் பஸ்ஸில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு சக பயணிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×