search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
    X

    புதுக்கோட்டையில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    • ஆயுதபூஜை விடுமுறை தினங்களை முன்னிட்டு புதுக்கோட்டையில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது
    • புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் இரா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட், புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளர் இரா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    21.10.2023, 22.10.2023, சனி, ஞாயிறு வார விடுமுறை, 23.10.2023 ஆயுத பூஜை, 24.10.2023 விஜய தசமி என தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக, புதுக்கோட்டை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும்,

    சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளா ங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதா ரண்யம், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களி லிருந்து திருச்சிக்கும், புதுக்கோட்டையிலிருந்து காரைக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்க ண்ணி ஆகிய ஊர்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    இவ்வாறு முக்கிய விடுமுறை நாட்களான 3 தினங்களுக்கு மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 24.10.2023 மற்றும் 25.10.2023 செவ்வாய், புதன் நாட்களில் சென்னை தடத்தில் 300 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 200 சிறப்பு பேருந்துகளும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை, நாகப்ப ட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளா ங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், இராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    20.10.2023, 21.10.2023 மற்றும் 22.10.2023 தொடர் விடுமுறைகாரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொ ள்ளப்படுகி றார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள ப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×