search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bodi"

    போடி மற்றும் கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 320 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி பஸ்நிலையத்தில் இருந்து முந்தல் வழியாக மூணாறு பகுதிக்கு அரசு பஸ்சில் ரேசன் அரிசி கடத்துவதாக புகார் எழுந்தது.

    அதனடிப்படையில் தேனி பறக்கும்படை தாசில்தார் ஜாகீர்உசேன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணி ஆகியோர் தலைமையில் பறக்கும்படையினர் போடி முந்தல் வாகன சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறி சோதனைபோட்டனர். அப்போது 10 சிப்பம் கொண்ட 320 கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்த பறக்கும்படையினர் கண்டக்டர், டிரைவரிடம் விசாரணை மேற் கொண்டனர்.

    அப்போது அவர்கள் இதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். எனினும் ரேசன் அரிசியை பஸ்சில் கடத்திவந்தவர் யார்? இதற்கு மூளையாகஇருப்பது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    போடி மெட்டு மலைப் பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. #Landslide

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு ஆகிய மலைச்சாலைகள் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே நேற்று முன்தினம் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு வாகனங்கள் அனைத்தும் கம்பம் மெட்டு சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டன.

    நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, அடிமாலி, இடுக்கி உள்ளிட்ட இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல் குமுளியில் இருந்து கோட்டயம், வண்டி பெரியாறு செல்லும் சாலை முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சரக்குகள் ஏற்றிச் சென்ற லாரிகள் கடந்த 3 நாட்களாக குமுளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

    கன மழை நீடித்து வருவதால் போடி மெட்டு பகுதியிலும் சாலைகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. இதே போல் தோண்டிமலை சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள், மரங்கள் சாய்ந்தன.

    இதனால் போடியில் இருந்து மூணாறு செல்லும் வாகனங்கள் முந்தல் சோதனைச்சாவடியில் திருப்பி விடப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகரித்து காணப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

    இதனை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #Landslide

    போடியில் இறந்தவர்களின் உடல்களை சற்றும் கூச்சமின்றி எடுத்து அடக்கம் செய்து வரும் பெண்மணி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.
    போடி:

    இயக்குனர் பாலாவின் பிதாமகன் படத்தில் நடிகர் விக்ரம் வெட்டியான் வேலை பார்த்து வருவார். சுடுகாட்டிலேயே தங்கி அங்கேயே சாப்பிட்டு வாழ்க்கையை நடத்துவார். இது ஆணுக்கு மட்டும் பொருந்தாது பெண்ணாலும் செய்ய முடியும் என ஒருவர் நிரூபித்துள்ளார்.

    சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் எத்தனை தைரியசாலியாக இருந்தாலும் இரவு நேரத்தில் தனியாக செல்ல அச்சப்படுவார்கள். ஆனால் ஒரு பெண் அங்கேயே தங்கி தனது குடும்பத்துக்காக உழைத்து வருகிறார் என்ற செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

    மதுரை மாவட்டம் ஆணையூரைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி (வயது 32). இவருக்கும் போடியைச் சேர்ந்த கருப்பையா என்பவருக்கும் கடந்த 2003-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது தொழில் துணிகளை சலவை செய்து கொடுப்பதாகும். போடியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள கொட்டக்குடி ஆற்றங்கரை ஓரத்தில் குடிசை போட்டு பிழைப்பு நடத்தி வந்தார்.

    சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்த இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சொந்த வீடு இல்லாததால் சுடுகாடு அருகிலேயே குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர். மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் இருக்காது. இதனால் சுடுகாட்டு பகுதியில் வசிப்பது ஆரம்பத்தில் முருகேஸ்வரிக்கு பயமாக இருந்துள்ளது.

    ஆனால் வாழ்க்கையே இனி இப்பகுதியில்தான் என முடிவான பிறகு சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ கற்றுக் கொண்டார். ஆனால் வறுமை இவர்கள் குடும்பத்தை துரத்திக் கொண்டே வந்தது. சலவைத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் ரேசன் கடையில் வழங்கும் இலவச அரிசியை வாங்கி பசியை போக்கினர்.



    இருந்த போதும் குடும்பத்தின் மற்ற தேவைகளுக்கு பணம் தேவைப்பட்டது. இந்த சமயத்தில் 2012-ம் ஆண்டு போடி சுடுகாடு நகராட்சி எரிவாயு தகன மேடையாக மாற்றப்பட்டது. இங்கு பிணங்களை எரியூட்ட ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். பெரியார் சமத்துவ மையத்தின் சார்பில் முருகேஸ்வரியை வெட்டியான் வேலைக்கு தேர்வு செய்தனர். பல ஆண்டுகளாக இதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் என்பதால் சமத்துவ மையத்தின் நிர்வாகிகள் முருகேஸ்வரி மற்றும் அவரது கணவருக்கு பணியை ஒதுக்கினர்.

    மயானத்தின் அருகே குடிசை போட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ரேசன் கார்டு, பெறுவதில் சிக்கல் எழுந்தது. ரேசன் கார்டில் விலாசம் குறித்த விபரத்தில் சுடுகாடு என எழுதப்பட்டு இருந்ததால் வருவாய்த்துறை அதிகாரிகள் கார்டு கொடுக்க மறுத்தனர். அதன் பிறகு நிலைமையை எடுத்து கூறி தங்கள் வசிப்பிடத்தின் புகைப்படத்தையும் அளித்து ரேசன் கார்டு பெற்றனர்.

    சுடுகாட்டில் பணியாற்றி வந்ததால் உறவினர்களால் ஒதுக்கப்பட்டார். இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவர் கருப்பையாவின் கண்பார்வை குறைந்து அவரால் வேலை செய்ய இயலாத நிலை உருவானது. கணவரையும் பராமரித்து தனது 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி குடும்பத்தையும் முருகேஸ்வரியே தற்போது கவனித்து வருகிறார்.

    இதுகுறித்து முருகேஸ்வரி தெரிவிக்கையில், இதுவரை 1,890 சடலங்களை எரியூட்டியுள்ளேன். 500-க்கும் மேற்பட்ட சடலங்களை மண்ணில் புதைத்து காரியங்கள் செய்துள்ளேன். ஆரம்பத்தில் சுடுகாட்டில் வசிக்கவே பயந்த எனக்கு தற்போது இதுவே தாய்வீடு போல மாறிவிட்டது. எனது சுகம், துக்கம், மகிழ்ச்சி என அனைத்தையும் குடும்பத்துக்காக ஒதுக்கி வாழ்ந்து வருகிறேன். என் குழந்தைகள் 2 பேரும் நல்ல முறையில் படித்து வேலைக்கு சேர்ந்தால் போதும். அதுவே எனது லட்சியமாக கருதுகிறேன் என்றார்.

    ஆணுக்கு பெண் எதிலும் சளைத்தவர் இல்லை என்பதை பல வி‌ஷயங்களில் பார்த்து வருகிறோம். ஆனால் இது போன்ற ஒரு பெண் மணியை பார்க்கும் போது சற்றே வித்தியாசமாக தெரிந்தாலும் உழைக்க மறுக்கும் பலருக்கு உத்வேகமாக விளங்குகிறார்.



    போடி அருகே சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால் ஓட்டல் ஊழியர் தாக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (வயது21). பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இந்த ஓட்டலுக்கு அதே பகுதியை சேர்ந்த பிரதீப், கார்த்திக் மற்றும் மாயவேல் ஆகியோர் உணவு சாப்பிட வந்தனர். சாப்பிட்டு விட்டு அவர்களிடம் உணவுக்கான தொகையை ஊழியர்கள் கேட்டனர். ஆனால் 3 பேரும் பணம் தராமல் தகராறில் ஈடுபட்டனர்.

    முகமது இஸ்மாயில் அவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு செல்லுமாறு கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை தாக்கினர். இது குறித்து போடி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயவேலை கைது செய்தனர். தப்பி ஓடிய பிரதீப் மற்றும் கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

    ‘காலா’ படத்திற்கு டிக்கெட் கிடைக்காத அதிர்ச்சியில் ரஜினி ரசிகர் மயங்கி விழுந்து இறந்தார்.
    போடி:

    தேனி மாவட்டம் போடி கீழராஜவீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் குமரேசன் (வயது29). நகை பட்டறை தொழில் செய்து வந்தார்.

    தீவிர ரஜினி ரசிகரான இவர் நேற்று போடியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்திற்கு சென்றார். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் குமரேசன் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பினார்.

    பின்னர் சோர்வுடன் காணப்பட்ட அவர் வீட்டு வாசலில் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவரம் அறிந்ததும் அவரது உடலுக்கு ஏராளமான ரஜினி ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    போடியில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது30). இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 மகன், 1 மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அக்கம் பக்கத்தினர் சமரசம் பேசியபோதும் குடும்பத்தில் பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கலைச்செல்வி கோவித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனையடைந்த அண்ணாமலை தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடியில் சமோசா வியாபாரி மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி பெருமாள் கோவில் அருகே அரசமர தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 55). இவர் தள்ளுவண்டியில் வடை, சமோசா வியாபாரம் செய்து வந்தார். இவரது குடும்பத்தினர் திருப்பூரில் உள்ளனர். தனியாக வசித்து வந்த அவர் வீட்டுக்குள் பிணமாக கிடந்தார். அங்கிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் போடி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

    தகவல் அறிந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் உடல் அழுகிய நிலையில் கிடந்தார். அந்த உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    எனினும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்துடவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே பிளாஸ்டிக் பை தயாரிப்பு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவர் போடி மீனா விலக்கு பகுதியில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் தொழிற்கூடத்தை பூட்டி விட்டு தொழிலாளர்கள் அனைவரும் சென்று விட்டனர்.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் யாரும் அங்கு இல்லை. அதிகாலை நேரத்தில் தொழிற்கூடத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. இதனை அறிந்த அங்குள்ளவர்கள் உரிமையாளர் கணபதி மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் எந்திரங்கள், அங்குள்ள பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

    போடி அருகே கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி பரமசிவன் கோவில் தெருவில் சாத்தாவுராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது வைகாசி திருவிழா மணிகண்டன் (வயது 55) என்பவர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுரளி (33), ராமச்சந்திரன் (36), முருகதாஸ் (33) ஆகியோர் காவடி எடுக்க சென்றனர்.

    அப்போது அவர்களுக்கும் அங்கிருந்த மேளவாத்திய கலைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை மணிகண்டன் தட்டிக் கேட்டார். அப்போது காவடி எடுக்க சென்ற 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் திருவிழாவுக்காக கட்டப்பட்டு இருந்த அலங்கார வளைவுகளையும் டியூப் லைட்டுகளையும் உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து மணிகண்டன் போடி நகர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுரளி உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ராமச்சந்திரன் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போடியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 160 கிலோ ரேசன் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டம் கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி மலைச்சாலை வழியாக அதிக அளவு ரேசன் அரிசி கடத்தப்படுகிறது. போலீசார் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தாலும் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடிவதில்லை.

    போடி முந்தல் சோதனைச் சாவடியில் தாசில்தார் ஆர்த்தி தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர் மருதுபாண்டி, வருவாய் ஆய்வாளர் ராமர் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது போடியில் இருந்து மூணாறு நோக்கி சென்ற அரசு பஸ்சில் சோதனை நடத்தினர்.

    பயணிகள் அமரும் இருக்கைக்கு அடியில் 3 பைகளில் ரேசன் அரிசி இருந்தது. ஆனால் அதற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து 3 பைகளில் இருந்த 160 கிலோ ரேசன் அரசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போடி அருகே இன்று திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    போடி அருகே தேவாரம் டி.செல்லாயிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டவர். இவது மகன் இளங்கோவன் (வயது 31). இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இன்று திருமணம் நடக்க இருந்தது.

    இதனால் பத்திரிகை கொடுப்பதற்காக புது மாப்பிள்ளை இயங்கோவன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த ஆண்டவர் உறவினர்களுடன் இளங்கோவனை தேடிப்பார்த்தார்.

    மேலும் அக்கம் பக்கம் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தும் காணாததால் தேவாரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமணம் பிடிக்காமல் இளங்கோவன் மாயமானாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முத்து சரவணன் (வயது 28). சம்பவத்தன்று பெருமாள் குடும்பத்துடன் வீரபாண்டி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அங்கிருந்து முத்துசரவணன் நண்பர்களை பார்ப்பதற்காக கோவிலை விட்டு வெளியே சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவரை காணாததால் பெருமாள் அவரது நண்பர்களிடம் விசாரித்து பார்த்தார்.

    அவர்களும் முத்து சரவணனை பார்க்கவில்லை என்று கூறியதால் வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான முத்து சரவணனை தேடி வருகின்றனர். #Tamilnews
    போடி அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி சந்தைப் பேட்டை ஏகாளிசந்து பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). இவர் அதே பகுதியில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார். 

    அப்போது பால்குடம் எடுத்து வந்த சிறுமிகளை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (36) என்பவர் கீழே தள்ளி விட்டுள்ளார். இதனை சீனிவாசன் கண்டித்தார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    அதன் பிறகு ராஜ்குமார் அரிவாளால் சீனிவாசனை தாக்கி விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து சீனிவாசன் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

    ×