என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "plastic bag company fire"
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் கணபதி. இவர் போடி மீனா விலக்கு பகுதியில் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்கூடம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்ததும் தொழிற்கூடத்தை பூட்டி விட்டு தொழிலாளர்கள் அனைவரும் சென்று விட்டனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் யாரும் அங்கு இல்லை. அதிகாலை நேரத்தில் தொழிற்கூடத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் நெருப்பு பற்றி எரியத் தொடங்கியது. இதனை அறிந்த அங்குள்ளவர்கள் உரிமையாளர் கணபதி மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் எந்திரங்கள், அங்குள்ள பிளாஸ்டிக் பைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்