search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soldier arrested"

    • 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயதுடைய சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்த சிறுமி சம்பவத்தன்று தனியாக இருந்தார். அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் ஆசைபாண்டி(வயது68) என்பவர் சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

    பின்னர் அந்த சிறுமிக்கு ஆசைபாண்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை அவரது பாட்டியிடம் அழுதுக் கொண்டே கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாட்டி இதுகுறித்து அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார்.

    ோலீசார் விசாரணை நடத்தியதில் ஆசைபாண்டி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ஆசைபாண்டியை கைது செய்தனர்.

    • சத்தம் கேட்டு குடும்பத்தினர் கண்விழித்துப் பார்த்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் சோழவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் வயது(40).

    இவர் இந்திய ராணுவத்தில் லடாக் பகுதியில் சிக்னல் ெரஜ்மெண்டில் பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் 20-ந் தேதி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    நேற்று அதிகாலை 4 மணி அளவில் குடிபோதையில் ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள சின்ன மேட்டு குடிசை கிராமத்துக்கு பைக்கில் சென்றார்.

    அப்போது மேட்டு குடிசை பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதை பயன்படுத்தி பன்னீர்செல்வம் மேட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவரது வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி 20 கிராம் வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டிருந்தார்.

    அப்போது சத்தம் கேட்டு வெளியே தூங்கிக் கொண்டிருந்த கார்த்திகேயன் குடும்பத்தினர் கண்விழித்துப் பார்த்தனர்.

    வீடு புகுந்து நகை திருடிய பன்னீர்செல்வத்தை பிடித்து திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குபதிவு செய்து ராணுவ வீரர் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சொத்து தகராறில் முன்விரோதம்
    • ஜெயிலில் அடைப்பு

    ஆரணி:

    ஆரணி அடுத்த சீனிவாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினம்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அவ ரது சகோதரர் கோவிந்தராஜ். இவரது மகன் ஜெயசூர்யா (வயது 24), ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலை யில் நிலம் தொடர்பாக அண்ணன்-தம்பிக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த ஜெயசூர்யா பிரச்சினைக்குரிய இடத்துக்கு சென்று அங்கு இருந்த காணிக்கல்லை பிடுங்கியுள்ளார்.

    தகவல் அறிந்து சக்கரவர்த்தி அங்கு சென்று ஜெயசூர்யாவிடம் ஏன் கல்லை பிடுங்கி போட்டாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயசூர்யா, சித்தப்பா சக்கரவர்த்தியை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயசூர்யாவை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    போடி அருகே கோவில் திருவிழாவில் தகராறில் ஈடுபட்ட ராணுவ வீரர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி பரமசிவன் கோவில் தெருவில் சாத்தாவுராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது வைகாசி திருவிழா மணிகண்டன் (வயது 55) என்பவர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுரளி (33), ராமச்சந்திரன் (36), முருகதாஸ் (33) ஆகியோர் காவடி எடுக்க சென்றனர்.

    அப்போது அவர்களுக்கும் அங்கிருந்த மேளவாத்திய கலைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை மணிகண்டன் தட்டிக் கேட்டார். அப்போது காவடி எடுக்க சென்ற 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    மேலும் திருவிழாவுக்காக கட்டப்பட்டு இருந்த அலங்கார வளைவுகளையும் டியூப் லைட்டுகளையும் உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து மணிகண்டன் போடி நகர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுரளி உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ராமச்சந்திரன் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×