search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போடி அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
    X

    போடி அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

    போடி அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி சந்தைப் பேட்டை ஏகாளிசந்து பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). இவர் அதே பகுதியில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார். 

    அப்போது பால்குடம் எடுத்து வந்த சிறுமிகளை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (36) என்பவர் கீழே தள்ளி விட்டுள்ளார். இதனை சீனிவாசன் கண்டித்தார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    அதன் பிறகு ராஜ்குமார் அரிவாளால் சீனிவாசனை தாக்கி விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து சீனிவாசன் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.

    Next Story
    ×