search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife split"

    மனைவி பிரிந்து வாழ்வதால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வந்தவாசி:

    வந்தவாசி கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுதாகர் ( வயது 35) எலக்ட்ரீசியன். இவருக்கும் அரக்கோணத்தை சேர்ந்த தனலட்சுமி (30)என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது.

    சொரூபன் (4) என்ற ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    தனலட்சுமி தாய்வீடான அரக்கோணத்தில் இருந்து வருவதால் பலமுறை சுதாகர் அழைத்தும் தனலட்சுமி வந்தவாசிக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சுதாகர் நேற்று ஆரணி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவ்வழியாக சென்றவர்கள் பிணத்தை பார்த்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் அருகே மனைவி பிரிந்த சோகத்தில் கோவில் பூசாரி தூக்குப்போட்டு இறந்தார்.

    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ள தனக்கன்குளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தனசேகரபாண்டியன் (வயது 45). இவர் திருவள்ளுவர் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார். இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனசேகர பாண்டியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மதுரை மேலூர் அருகிலுள்ள கொட்டாணிப் பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 38). மாற்றுத்திறனாளி. குடிப்பழக்கம் உள்ள அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த குமரேசன் வீட்டின் குளியலறையில் தீக்குளித்தார்.

    அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரசுப்பிரமணியம் (வயது 32). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். ஹரிஹரசுப்பிரமணியத்துக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 3 வருடங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விடடனர். 

    அதன்பிறகு மனவருத்தத்தில் காணப்பட்ட இவருக்கு குடும்பத்தினர் மறுமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் சரியான வரண் அமைய வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை அருகே மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள பரவை கள்ளிக்குடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சத்தியமூர்த்தி (38). இவர் தனது மனைவியுடன் சிக்கந்தர்சாவடி அழகர்நகர் பகுதியில் வசித்து வந்தார்.

    அப்போது கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சத்தியமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அலங்காநல்லூர் போலீசில் அவரது தாய் வேடச்சி புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    குடிப்பழக்கத்தால், குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு மனைவி பிரிந்து சென்றார். இதனால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    மதுரை:

    ஆரப்பாளையம் மேலப் பொன்னகரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி மது அருந்தி வந்ததால், மனைவி ஸ்ரீதேவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் ஸ்ரீதேவி கணவரை பிரிந்து சென்று விட்டார். அதன்பிறகு பாண்டியராஜன் சென்று சமசரம் செய்து அழைத்த போதும், வர மறுத்து விட்டார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த பாண்டியராஜன், நேதாஜி ரோட்டில் உள்ள விடுதியில்அறை எடுத்து தங்கினார். அங்கு தூக்குப்போட்டு பாண்டியராஜன் தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கரிமேடு புட்டுத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (34). சலவை தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பிரபாகரனின் குடிப்பழக்கம் காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இந்த வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து வீட்டிலேயே பிரபாகரன் பரிதாபமாக இறந்தார்.

    கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் துக்காராம் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் கல்லாணை (வயது 21). கூலித் தொழிலாளியான இவருக்கும், கவுசல்யா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணமான 3 மாதத்திலேயே கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கவுசல்யா தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கல்லாணை குடும்பம் நடத்த கவுசல்யாவை பல முறை அழைத்தும் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இதனால் விரக்தியுடன் காணப்பட்ட கல்லாணை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    போடியில் மனைவி பிரிந்து சென்ற துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி புதூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது30). இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், 2 மகன், 1 மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அக்கம் பக்கத்தினர் சமரசம் பேசியபோதும் குடும்பத்தில் பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கலைச்செல்வி கோவித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனையடைந்த அண்ணாமலை தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×