search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "priest suicide"

    • பூசாரி நுரையீரல், கிட்னி பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது
    • கோவிலுக்குள்ளேயே பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 28 வருடங்களாக அத்தியப்பகவுண்டர் (வயது 90) என்பவர் பூசாரியாக இருந்து பூஜைகள் செய்து வந்தார். இதற்காக கோவிலின் அருகே உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    பூசாரி அத்தியப்பன் நுரையீரல், கிட்னி பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது பெரியாண்டிச்சி அம்மன் கோவில் கருவறை பின்புறம் உள்ள வேப்பமரத்தில் பூசாரி தூக்கு போட்டுக்கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி ராசிபுரம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தந்தனர். அதன்பேரில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமுண்டீஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூசாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் பூசாரி அத்தியப்பகவுண்டர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் பூசாரி அத்தியப்பனின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் அரம்பாலூர் அருகே உள்ள பூலாம்பாடி ஆகும். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். இவர்களுக்கு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

    கோவிலுக்குள்ளேயே பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம் அருகே மனைவி பிரிந்த சோகத்தில் கோவில் பூசாரி தூக்குப்போட்டு இறந்தார்.

    மதுரை:

    மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ள தனக்கன்குளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தனசேகரபாண்டியன் (வயது 45). இவர் திருவள்ளுவர் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார். இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனசேகர பாண்டியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மதுரை மேலூர் அருகிலுள்ள கொட்டாணிப் பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 38). மாற்றுத்திறனாளி. குடிப்பழக்கம் உள்ள அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த குமரேசன் வீட்டின் குளியலறையில் தீக்குளித்தார்.

    அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரான்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய பாதிரியார் தேவாலயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
    பாரீஸ்:

    பிரான்சில் ரோயன் நகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ஜீன் பாப்ஸ்டிக் செபே (38).

    இவர் ஒரு இளம்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக ஆர்ச் பி‌ஷப்பிடம் புகார் கூறப்பட்டது.

    இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாதிரியார் செபே ரோயன் நகரில் உள்ள 23-வது புனித ஜீன் தேவாலயத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த தகவலை ரோயன் கிறிஸ்தவ திருச்சபை உறுதி செய்துள்ளது.

    கிறிஸ்தவ திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார்கள் மீது செக்ஸ் புகார் கூறப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பென்சில் வேனியாவில் கடந்த 70 ஆண்டுகளில் 1000 சிறுவர்-சிறுமிகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக 300 பாதிரியார்கள் மீது புகார் கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ×