search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electricians suicide"

    மனைவி பிரிந்து வாழ்வதால் எலக்ட்ரீசியன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வந்தவாசி:

    வந்தவாசி கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுதாகர் ( வயது 35) எலக்ட்ரீசியன். இவருக்கும் அரக்கோணத்தை சேர்ந்த தனலட்சுமி (30)என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது.

    சொரூபன் (4) என்ற ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    தனலட்சுமி தாய்வீடான அரக்கோணத்தில் இருந்து வருவதால் பலமுறை சுதாகர் அழைத்தும் தனலட்சுமி வந்தவாசிக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சுதாகர் நேற்று ஆரணி சாலையில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவ்வழியாக சென்றவர்கள் பிணத்தை பார்த்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை அருகே சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த எலக்ட்ரீசியன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையை அடுத்த காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (40). எலக்ட்ரீசியன். சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த முருகன் மருத்துவ செலவு செய்ய முடியாமல் கஷ்டப்பட்டு வந்தார். நோய் வாய்ப்பட்ட கணவரை பார்த்து கொள்ள வேண்டியது இருந்ததால் அவரது மனைவி மஞ்சுளா தான் பார்த்து வந்த வேலையையும் இழந்தார்.

    இதனால் அவரது குடும்பம் வருமானம் இல்லாமல் வறுமையில் வாடியது. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே விவசாய கிணறு அருகில் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது.

    இதற்கிடையில் குடும்பத்தை கவனிக்க முடியாமல் விரக்தி அடைந்த முருகன் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தேடிய குடும்பத்தினருக்கு தற்கொலை செய்து கொண்டது முருகன் என தெரியவந்தது. பொன்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×