search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bali"

    • கண்மாயில் மூழ்கி வாலிபர் பலியானார்.
    • வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    மதுரை

    ஆனையூர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(48). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடி பார்த்தபோது, ஆனையூர் கோசாகுளம் கண்மாயில் அவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த கூடல்புதூர் போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் குளித்துக் கொண்டிருக்கும் போது வலிப்பு நோய் வந்து இறந்தாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 ரோடு -4 ரோடு செல்லும் வழியில் உள்ள செல்வம் ஓட்டல் முன்பு சாலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த 28-ந்ேததி அதிகாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
    • அந்த சமயத்தில் அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே 5 ரோடு -4 ரோடு செல்லும் வழியில் உள்ள செல்வம் ஓட்டல் முன்பு சாலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த 28-ந்ேததி அதிகாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பஸ் டயர், வாலிபரின் இடுப்பு பகுதியில் ஏறி இறங்கியது. இதனால் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்த தும் பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி யதில், டிரைவர் கவனக்குறை வாக பஸ்சை ஓட்டி வந்ததாக ெதரிய வந்தது. பஸ் மோதி பலியான வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. இத னால் உடலை, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. பலியானவர் கருப்பு நிற ேராஸ் கலர் கட்டம் போட்ட சட்டை அணிந்தி ருந்தார். நீல கலர் கட்டம் போட்ட லுங்கி அணிந்தி ருந்தார். அவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி பள்ளப்பட்டி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.விபத்தில் உயிரிழந்த வாலிபர் பிணமாக கிடக்கும் காட்சி.

    • சேலம்‌ அஸ்தம்பட்டி பகுதியைச்‌ சேர்ந்த சம்பந்தத்தின்‌ மகன்‌ கணேசன்‌ (36). இவர்கள்‌ இருவரும்‌ சேலம்‌ தனியார்‌ நிதி நிறுவனத்தில்‌ பணிபுரிந்து வந்தனர்‌.
    • இருசக்கர வாகனத்தின்‌ மீது மோதியதில்‌ மூர்த்தி உள்ளிட்ட இருவரும்‌ தூக்கி வீசப்பட்டு பலத்த காயம்‌ அடைந்தனர்‌.

    சேலம்:

    ஆத்தூர் அருகே பெத்த நாயக்கன்பாளையத்தை அடுத்த முத்தாக்கவுண்ட னூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மூர்த்தி (வயது 28). சேலம் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சம்பந்தத்தின் மகன் கணேசன் (36). இவர்கள் இருவரும் சேலம் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

    இருவரும் நேற்று மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது எதிரே செங்கல்பட்டு மாவட்டம், ஊனமலை பகுதியைச் சேர்ந்த செல்வராஜின் மகன் சிலம்பரசன் (39) என்பவர் சொகுசு காரை ஓட்டி வந்தார்.

    அந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் மூர்த்தி உள்ளிட்ட இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்கு மார் வழக்குப் பதிவு செய்து, மூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    • விருதுநகர் அருகே பஸ் மோதி ஒருவர் பலியானார்.
    • இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை மண்டபசாலை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி(57). இவர் தாயில்பட்டி சாலையில் உள்ள சலூன் கடை அருகே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பொன்னுசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவர் வடமலை குறிச்சியை சேர்ந்த ராஜசுபகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் வளையங்குளம் கண்மாயில் உள்ள கிணற்றின் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக மல்லாங்கிணறு கிராம நிர்வாக அதிகாரி ராம்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
    • வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள பூலாவூரணியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் சிவகாசியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது 2-வது மகன் மகேந்திரன்(வயது34), தந்தைக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்து வந்தார். நேற்று வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மகேந்திரன் கடைக்கு வந்து கொண்டிருந்தார். சிவகாசி-விளாம்பட்டி ரோட்டில் வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டியை சேர்ந்தவர் தெய்வக்கனி(வயது45). பட்டாசு தொழிலாளியான இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அப்போது திடீரென தெய்வக்கனி மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தெய்வக்கனி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிவேமாக சென்ற மோட்டார் சைக்கிள் நின்றிருந்த லாரி மீது மோதி முதியவர் பலியானார்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர் நாயக்கன் பட்டியை சேர்ந்தவர் மோகன் (58). இவர் சம்பவத்தன்று வெம்பக்கோட்டை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில்அதி வேகமாக சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரி மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்துதகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் கருப்பசாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவகோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
    • நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே உள்ள நாஞ்சி வயல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது34), எலனாப்பட்டியை சேர்ந்தவர் நவீன் (22). இவர்கள் இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தனர். அவர்கள் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியூர் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயபால் வரும் வழியில் இறந்து விட்டார். நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • அந்த லாரி பாலக்கரை நோக்கி சென்ற போது போது, பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத நபர் மீது லாரி மோதியது.
    • , சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    கடலூர்:

    விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் லோடு ஏற்றி கொண்டு லாரி வந்தது. அப்போது அந்த லாரி பாலக்கரை நோக்கி சென்ற போது போது, பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத நபர் மீது லாரி மோதியது.இதில் கீழே விழுந்த நபர் மீது லாரியின் பின் சக்கரத்தில் மாட்டி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.  அங்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • முதியவர் ஒருவர் நேற்றிரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்று ஒரு வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் - சேலம் ரோட்டில் சண்முகா ஓட்டல் அருகில் முதியவர் ஒருவர் நேற்றிரவு சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்று ஒரு வாகனம், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த நாமக்கல் நகர போலீசார், அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் இறந்த அந்த முதியவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
    • இவரும் அவரது‌ நண்பர்கள் 8 பேருடன் நேற்று (சனிக்கி ழமை) காலை ஜேடர்பாளை யத்தில் உள்ள படுகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூ ரைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில்

    பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் அவரது நண்பர்கள் 8 பேருடன் நேற்று (சனிக்கி ழமை) காலை ஜேடர்பாளை யத்தில் உள்ள படுகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் படுகை அணை பகுதிக்குச் சென்று தனது நண்பர்க ளுடன் குளித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு குளித்துக் கொண்டி ருந்த பிரவின் மட்டும் காணா வில்லை. இதனால் நண்பர்கள் படுகை அணை யில் அவரை தேடி உள்ள னர். ஆனால் அவர் கிடைக்காததால், உடனடி யாக ஜேடர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீ சார் அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் படுகை அணை பகுதியில் தேடிவந்தனர். வெகு நேரம் தேடிய பிறகு படுகை அணை பகுதியில் மூழ்கி இறந்து கிடந்த பிரவீன் உடலை மீட்டனர். போலீசார் அவரது உடலை பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோத னைக்காக சேர்த்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
    • சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார்.

    திருவாடானை

    ராமநாதபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன்(வயது45). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் ராமநாத புரத்தில் இருந்து திருவாடா னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சி.கே.மங்கலத்திலிருந்து ஆர்.எஸ். மங்கலம் சவேரியார் பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசனுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவா டானை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி என்ப வரை கைது செய்தனர்.

    • கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
    • நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது.

    பரமத்திவேலூர்:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி அர்பன் பகுதியைச் சேர்ந்தவர் மோடன் வெங்கிட்டு. இவரது மகன் மோடன் கிரண் (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இவரது நண்பர் திருப்பதி, அசோக் நகரை சேர்ந்தவர் விஜயபிரதாப்ரெட்டி (25). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். நாமக்கல் அருகே உள்ள புலவர்பாளையம் சர்வீஸ் ஸ்டேஷன் அருகே கல்லூரி மாணவர் மோடன் கிரண் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் இடது புறத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோடன் கிரணையும், அவரது நண்பர் விஜய பிரதாப்ரெ ட்டியையும் அவ்வழியாக வந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் மோடன் கிரண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் விஜயபிரதாப்ரெட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×