search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜேடர்பாளையம் படுகை அணையில் தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
    X

    ஜேடர்பாளையம் படுகை அணையில் தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

    • நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
    • இவரும் அவரது‌ நண்பர்கள் 8 பேருடன் நேற்று (சனிக்கி ழமை) காலை ஜேடர்பாளை யத்தில் உள்ள படுகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    சேலம் மாவட்டம், ஆத்தூ ரைச் சேர்ந்தவர் ராம். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில்

    பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் அவரது நண்பர்கள் 8 பேருடன் நேற்று (சனிக்கி ழமை) காலை ஜேடர்பாளை யத்தில் உள்ள படுகை அணைக்கு சுற்றுலா வந்துள்ளனர். பின்னர் படுகை அணை பகுதிக்குச் சென்று தனது நண்பர்க ளுடன் குளித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு குளித்துக் கொண்டி ருந்த பிரவின் மட்டும் காணா வில்லை. இதனால் நண்பர்கள் படுகை அணை யில் அவரை தேடி உள்ள னர். ஆனால் அவர் கிடைக்காததால், உடனடி யாக ஜேடர்பாளையம் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீ சார் அங்கிருந்த மீனவர்கள் உதவியுடன் படுகை அணை பகுதியில் தேடிவந்தனர். வெகு நேரம் தேடிய பிறகு படுகை அணை பகுதியில் மூழ்கி இறந்து கிடந்த பிரவீன் உடலை மீட்டனர். போலீசார் அவரது உடலை பரமத்தி வேலூர் அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோத னைக்காக சேர்த்தனர்.

    இச்சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×