search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி
    X

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி

    • 5 ரோடு -4 ரோடு செல்லும் வழியில் உள்ள செல்வம் ஓட்டல் முன்பு சாலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த 28-ந்ேததி அதிகாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார்.
    • அந்த சமயத்தில் அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் அருகே 5 ரோடு -4 ரோடு செல்லும் வழியில் உள்ள செல்வம் ஓட்டல் முன்பு சாலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கடந்த 28-ந்ேததி அதிகாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அந்த சமயத்தில் அந்த வழியாக அதிவேகமாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பஸ் டயர், வாலிபரின் இடுப்பு பகுதியில் ஏறி இறங்கியது. இதனால் வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்த தும் பள்ளப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி யதில், டிரைவர் கவனக்குறை வாக பஸ்சை ஓட்டி வந்ததாக ெதரிய வந்தது. பஸ் மோதி பலியான வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் தெரியவில்லை. இத னால் உடலை, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. பலியானவர் கருப்பு நிற ேராஸ் கலர் கட்டம் போட்ட சட்டை அணிந்தி ருந்தார். நீல கலர் கட்டம் போட்ட லுங்கி அணிந்தி ருந்தார். அவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி பள்ளப்பட்டி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.விபத்தில் உயிரிழந்த வாலிபர் பிணமாக கிடக்கும் காட்சி.

    Next Story
    ×