search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு வாகனம்"

    • காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
    • யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் அரேப்பாளையம்-கொள்ளேகால் சாலை அமைந்துள்ளது.

    அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இச்சாலை வழியாக பஸ் போக்குவரத்து மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மிக முக்கியமாக கரும்புக்கட்டுகள், காய்கறிகள் சரக்கு வாகனங்களில் அதிக அளவில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரேப்பாளையத்தில் இருந்து கொள்ளேகால் செல்லும் சாலையில் கேர்மாளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டுயானை ஒன்று சாலை நடுவே நடமாடியது. யானையை கண்ட வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.

    இதையடுத்து வாகனங்களை வழிமறைத்த காட்டு யானை சரக்கு வாகனங்களில் காய்கறிகள், உணவு ஏதாவது உள்ளதா? என தனது தும்பிக்கையால் ஒவ்வொரு வாகனமாக சோதனையிட்டபடி அலைந்தது.

    இந்த காட்சியை அந்த வழியாக சென்ற அரசு பஸ்சில் இருந்த பயணிகள் செல்போன்களில் வீடியோவாக எடுத்தனர். சிறிது நேரம் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை பின்னர் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வாகன உரிமையாளர் ஜோசப் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • மதன்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே தனியார் பழக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் மர்ம நபரால் திருடப்பட்டது. இது குறித்து வாகன உரிமையாளர் ஜோசப் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்தத் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க எஸ்.பி.பிரதீப் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது சரக்கு வாகனத்தை திருடிய நபர் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சேகர் மகன் மதன்ராஜ் (வயது28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மதன்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் அவரிடமிருந்து சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. திருடுபோன 10 மணி நேரத்தில் சரக்கு வாகனத்தை மீட்டுக் கொடுத்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. பிரதீப் பாராட்டினார்.

    மேலும் இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் ஏழுமலை, மணிகண்டன் மற்றும் வெவ்வேறு பெயர்களில் கார் திருட்டு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் புயல் வீசியது
    • விமானம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மெதுவாக நகர தொடங்கியது

    தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடு அர்ஜென்டினா (Argentina). இதன் தலைநகரம் ப்யூனோஸ் அயர்ஸ் (Buenos Aires).

    கடந்த சில நாட்களாக கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் கடும் புயல் வீசி வருகிறது. மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேக புயலால் அங்கு உயிரிழப்பு 14-ஐ கடந்துள்ளது. பல இடங்களில் கட்டிட சேதங்களும், மின்சார தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்புயல், அங்குள்ள ஏரோபார்க் நியூபெரி (Aeroparque Jorge Newbery) விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு விமானத்தையும் தாக்கியது. இத்தாக்குதலில் அந்த விமானம் காற்றின் அதிவேகத்தால் நகர தொடங்கி, நிறுத்தப்பட்டிருந்த திசைக்கு எதிராக மெதுவாக நகர்ந்து சென்றது.

    அப்போது அங்கு விமானத்தில் பயணிகள் ஏறவும் இறங்கவும் பயன்படுத்தப்படும் படிக்கட்டு, சரக்கு கொண்டு செல்லும் ஒரு வாகனம் உட்பட பலவற்றில் அந்த விமானம் மோதியது. இதில் விமானத்திற்கு ஓரளவு சேதம் ஏற்பட்டது.

    ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    • சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்
    • காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (45), இவரது மனைவி பத்மாவதி (40).இவர்களது மகள் மணிமேகலை (21), மகன் அருண்குமார் (19).

    இவர்கள் சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்.

    அந்த வாகனத்தை கரூர் மாவட்டம் வேடிச்சம்மபாளையம் ஒத்தையூர் பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் காரிப்பட்டி தனியார் பால் நிறுவனம் அருகே வந்த போது பின்னால் வந்த செங்கல்பட்டை சேர்ந்த அட்வின்குமார் (49) என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென சரக்கு வாகனம் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து இருந்த பத்மாவதி, தேவராஜ், டிரைவர் மணிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவல் அறிந்த காரிப்பட்டி போலிசார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவராஜ் மற்றும் மணிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விசாரித்த காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது.
    • சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இங்கு சாம்ராஜ்நகர், தாளவாடி, ஆசனூர் ஆகிய பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் உரு ளைக்கிழங்கு மற்றும் காய்கறிகள் ஏராளமான மினி ஆட்டோக்களில் தினமும் ஈரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.

    நேற்று இரவு தாளவாடி பகுதியில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் திம்பம் மலைப் பாதையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து நிறுத்தியது.

    அப்போது சாலையின் ஓரமாக யானையை தாண்டி சென்று விடலாம் என எண்ணி ஓட்டுனர் வாகனத்தை இயக்கிய போது, காட்டு யானை அந்த சரக்கு வாகனத்தை தனது தும்பிக்கையால் பிடித்து நிறுத்தியது. அதன் பிறகு மேல் பகுதியில் வைத்திருந்த உருளைக்கிழங்கு மூட்டையை தும்பிக்கையால் இழுத்து கீழே தள்ளியது.

    பின்பு உருளைகிழங்கு மூட்டையை உண்பதற்காக எடுத்துச் சென்றது. இதனால் அந்தப் பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் அரை மணி நேரத்தி ற்கு பிறகு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பிறகே போக்குவரத்து மீண்டும் சீரானது.

    • கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார்.
    • மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் சுப்பையன் நேரடியாக ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகத்தில் சுய உதவி குழுக்கள், மாற்றத்திறனாளிகள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.1 கோடி 32 லட்சம் கடன் வழங்கினார். நபார்டு நிதி உதவி கீழ் வழி சோதனை பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ. 6.50 லட்ச மதிப்பில் சரக்கு வாகனம் வழங்கினார். விழாவிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதியதாக துவக்கப்பட உள்ள வண்டிப்பாளையம் கிளையினை ஆய்வு செய்தார். மேலும் கடலூர் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி, கடலூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கடலூர் கூட்டுறவு அச்சகம் ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார், கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் திலீப்குமார், துணைப் பதிவாளர்கள் துரைசாமி, ராஜேந்திரன், அன்பரசு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை அலுவலர் எழில்பாரதி மற்றும் கூட்டுறவுதுறை அலுவலர்கள், மத்திய கூட்டுறவு வங்கியின் அலுவலர்கள், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • எதிரே வந்த சரக்கு லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை தொரப்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காத்தவராயன் (வயது 37). முந்திரி வியாபாரி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று இரவு 11 மணிக்கு மோட்டார் சைக்கிளில் அங்குசெட்டி பாளையத்திற்கு சென்றார் . அங்கு செட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சரக்கு லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அருகில் இருந்தவர்கள் காயமடைந்த காத்தவராயனை ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பஸ்களை ஓட்டுவதற்கு இடையூறாக உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள், மூன்று நாட்கள் அதிகளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும்.

    இந்த நிலையில் திங்கட்கிழமையில் பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள் திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என அரசு பஸ் டிரைவர்கள் தெரிவித்தனர்.

    • வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு இணைப்பு மற்றும் பிரதான சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக பொதுமக்கள் பல்வேறு விதமான தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருவதும் தொடர் கதையாக உள்ளது.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- பல்வேறு விதமான சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் நகரப்பகுதிக்கு வர வேண்டி உள்ளது. இதனால் சாலைகளில் தொடர்ந்து போக்குவரத்து இருந்து கொண்டே உள்ளது. ஆனால் பிரதான சாலைகளை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதும் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்காததும் அதற்கு காரணமாகும். குறிப்பாக சத்திரம் வீதியில் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற வாகனங்கள் சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து நிறுத்தப்படுகிறது. அதே போன்று வ.உ.சி வீதியில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.இது போன்ற பல்வேறு காரணங்களால் உடுமலை பகுதி பிரதான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.மேலும் பொருட்களை இறக்குவதற்காக வருகின்ற கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் நகரப் பகுதிக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை முறையாக பின்பற்றுவதில்லை. ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதிப்படுவது வேதனை அளிக்கிறது. எனவே உடுமலை நகரப் பகுதிக்குள் பிரதான சாலைகளில் நிலவி வருகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.மேலும் கனரக வாகனங்களை பகல் நேரத்தில் பிரதான சாலைகளில் நிறுத்தி பொருட்களை இறக்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
    • சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார்.

    திருவாடானை

    ராமநாதபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கணேசன்(வயது45). இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு 9.30 மணியளவில் ராமநாத புரத்தில் இருந்து திருவாடா னைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சி.கே.மங்கலத்திலிருந்து ஆர்.எஸ். மங்கலம் சவேரியார் பட்டினத்திற்கு சென்று கொண்டிருந்த ஒரு சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதிது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசனுக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவா டானை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருவாடானை தாலுகா அரசூர் கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி என்ப வரை கைது செய்தனர்.

    • பட்டாசு தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
    • 6-க்கும் மேற்பட்டோர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முருகன் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவரது சரக்கு வாகனத்தில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றார்.

    அந்த சரக்கு வாகனம் சாத்தூர் அருகே சந்தையூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பட்டாசு தொழிற்சாலைக்கு சென் றது. அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் மணிப்பாரைப்பட்டி விலக்கு பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார், சரக்கு வாகனத்தை முந்த முயன்றது.

    அப்போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சிவகாசி முருகன் காலனியை சேர்ந்த முருகன் (28), டிரைவர் மணிகண்டன் (24), ஆகாஷ் (20), முத்துமாரியப்பன் (45), ஜெயப்பிரபு (42), முத்துமாரி (30), பாண்டி கணேஷ் (18), முத்துக்குமார் (20) ஆகியோர் காயம் அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் அங்கிருந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 3 பேர் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுதொடர்பாக காரில் வந்த திருவனந்தபுரத்தைச் சேர்ந்த எடிசன் (34), நிஷான் (29) ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நின்ற லாரி மீது சரக்கு வாகனம் மோதியதால் மகன் கண் முன்பு தந்தை பலியானார்.
    • அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.

    சிங்கம்புணரி

    மதுரை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (வயது45). இவரது மகன் ரியாஸ் (17). இருவரும் சந்தையில் வெள்ளைபூண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். வாரச்சந்தைகளில் இருவரும் சரக்கு வாகனத்தில் பொருட்களை ஏற்றிக்கொண்டு வியாபாரம் செய்வது வழக்கம். காரைக்குடியில் நடந்த சந்தை வியாபாரத்தை முடித்துவிட்டு இரவு 10 மணி அளவில் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.வி.மங்கலம் அருகே உள்ள காளாப்பூரில் விறகு ஏற்றிய லாரி சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தது. சரக்கு வாகனத்தில் வியாபாரத்தை முடித்துவிட்டு சாகுல் அமீது மகனுடன் மதுரைக்கு வந்து கொண்டிருந்தார். சரக்கு வானத்தை ரியாஸ் ஓட்டினார். அதி வேகமாக வந்த சரக்கு வாகனம் காளாப்பூர் அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சாகுல் அமீது இறந்தார். தனது கண் முன்னே நடந்த இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரியாஸ் செய்வதறியாமல் தப்பினார். தகவலறிந்த எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய போலீசார் தலைமறைவான ரியாசை தேடி வருகின்றனர். ரியாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தகுதி இல்லாத வயதில் சரக்கு வாகனத்தை ஓட்டி தந்தையை காவு வாங்கிய ரியாஸ் செயல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    ×