search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சரக்கு வாகனம் கவிழ்ந்து பெண் பலி
    X

    சரக்கு வாகனம் கவிழ்ந்து பெண் பலி

    • சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்
    • காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (45), இவரது மனைவி பத்மாவதி (40).இவர்களது மகள் மணிமேகலை (21), மகன் அருண்குமார் (19).

    இவர்கள் சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்.

    அந்த வாகனத்தை கரூர் மாவட்டம் வேடிச்சம்மபாளையம் ஒத்தையூர் பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் காரிப்பட்டி தனியார் பால் நிறுவனம் அருகே வந்த போது பின்னால் வந்த செங்கல்பட்டை சேர்ந்த அட்வின்குமார் (49) என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென சரக்கு வாகனம் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து இருந்த பத்மாவதி, தேவராஜ், டிரைவர் மணிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவல் அறிந்த காரிப்பட்டி போலிசார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவராஜ் மற்றும் மணிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விசாரித்த காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×