search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bali"

    • மோட்டார் சைக்கிள் அம்மாகண்ணு மீது மோதியது.
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள அரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி அம்மாகண்ணு(80). இவர் அதே கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு நடந்து வந்து சாலையை கடக்க முயன்ற போது பகண்டை கூட்டுச் சாலையில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் அம்மாகண்ணு மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அம்மாகண்ணு இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பகண்டை கூட்டு ரோடுசப்-இன்ஸ்பெக்டர் சூர்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மோட்டார் சைக்கிள் மோதி 3 வயது சிறுவன் பலியானார்.
    • சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள கரடிகள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகந்தி இவர்களுக்கு கவின் என்ற மூன்று வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் சம்பவத் தன்று 3 வயது மகன் கவினுடன் சுகந்தி தனது அண்ணன் சுரேசுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிந்துப்பட்டி போலீஸ்சரகம் பகுதியில் சென்றனர். அப்பொழுது சுரேஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப் பொழுது கவின் தனது சித்தப்பாவிடம் செல்வதாக தாயிடம் கூறிவிட்டு திடீ ரென்று சாலையை கடக்க முயன்றான். அப்பொழுது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வித மாக கவின் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்தி லேயே கவின் பரிதாபமாக இருந்தான் இதுகுறித்து சிந்துபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த விஜயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை பால் மார்க்கெட் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்து பொதுமக்கள் குட்ஷெட் நிலைய அதிகாரி பிரகாஷ்குமாரிடம் தெரிவித்தனர். அவர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் முதுகில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தை கடக்கும் போது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இறந்த வாலிபரின் மார்பில் கமலா எனவும் கையில் மணி எனவும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதையடுத்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி அடுத்த சென்னகிரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (23), லாரி டிரைவர்.
    • லாரி எதிர்பாராத விதமாக நவீன் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி அடுத்த சென்னகிரி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் (23), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் கோவை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேம்படிதாளம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக நவீன் குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த நவீன் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    • ரெயில் மோதி முதியவர் பலியானார்.
    • விருதுநகர் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையைச் சேர்ந்தவர் அழகு வெள்ளைச்சாமி (வயது 60). இவர் ராஜபாளையம் பகுதி யில் உள்ள ஒரு தனியார் அலுவலகத்தில் காவலாளி யாக பணியாற்றி வந்தார். இவரது குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர்.

    இதனால் தனியாக வசித்து வந்த அழகு வெள்ளைச்சாமி இன்று காலை சிவரக்கோட்டை பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மதுரை- செங்கோட்டை ரெயில் மோதியதில் அழகு வெள்ளைச்சாமி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அழகு வெள்ளைச்சாமி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் மீது திடீரென ஒரு வாகனம் அதிவேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அத்திபாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ். இவரது மகன் ரமேஷ் (வயது 29). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் சேலத்திற்கு வந்தார்.

    வாகனம் மோதி பலி

    நள்ளிரவு 2 மணி அளவில் அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் மீது திடீரென ஒரு வாகனம் அதிவேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அம்மா பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ரமேஷின் உறவினர்கள் கிருஷ்ணகிரி யில் இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பலியான ரமேஷ் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    சி.சி.டி.வி. காமிராவில் ஆய்வு

    இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் மீது மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் விபத்து நடந்த காட்சி பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55), கூலி தொழிலாளி.
    • நாமக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55), கூலி தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பரமத்தியில் இருந்து வேலூர் நோக்கி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, இவரது பின்னால் நாமக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார், பொன்னுசாமியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதையடுத்து கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    கார் மோதியதில் பொன்னுசாமி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி உயிரிழந்தார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தலை மறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • விஜயநகர் காலனியில் வசித்து வருபவர் நவீன். பந்தல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களது மகன் பிரகாஷ் கண்ணன் (வயது 5), குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தான்.
    • வேகமாக வந்த கார் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், கத்தேரி பிரிவு சாலை அருகே உள்ள விஜயநகர் காலனியில் வசித்து வருபவர் நவீன். பந்தல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களது மகன் பிரகாஷ் கண்ணன் (வயது 5), குமாரபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தான்.

    இந்த நிலையில், நேற்று மாலை சிறுவனின் தாத்தா கோவிந்தன், தாய் திவ்யா இருவரும் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்க் மீது பிரகாஷ்கண்ணனை உட்கார வைத்துகொண்டு சேலம் - கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது, பின்னால் வேகமாக வந்த கார் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார் நிற்காமல் சென்று விட்டது.

    இதனிடையே பலத்த காயமடைந்த 3 பேரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே மாணவன் பிரகாஷ் கண்ணன் உயிரிழந்தான்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவிந்தன், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திவ்யா குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு காரணமான கார் டிரைவரை தேடி வருகின்றனர். 

    • மோட்டார் சைக்கிள்கள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நாலூர் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் அய்யனார் (வயது30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி சவுந்தர்யா (23) என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அய்யனார் காரியாபட்டிக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். காரியாபட்டி-இலுப்பை குளம் ரோட்டில் உள்ள எஸ்.மறைக்குளம் தொங்குட்டி ஊரணி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் அய்யனார் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்ய னார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேன்கள் நேருக்கு நேர் மோதல்; பழ வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
    • அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ஆனந்தராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஒச்சதேவன் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செந்தூர பாண்டி (வயது28). பழவியாபாரியான இவர் நேற்று இரவு மதுரையில் இருந்து பழங்களை வாங்கி கொண்டு சரக்கு வேனில் ஊருக்கு புறப்பட்டார். அவருடன் அவரது நண்பர் குமரசக்தி என்பவரும் உடன் வந்தார்.

    அபிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றொரு சரக்கு வேன் பழங்கள் ஏற்றி வந்த வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 2 வேன்களின் முன்பகுதியும் பலத்த சேதமடைந்தது.

    இந்த விபத்தில் வேனின் முன்புறம் அமர்ந்துள்ள செந்தூர பாண்டி, குமரசக்தி ஆகியோர் படுகாய மடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு செந்தூர பாண்டி கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். குமரசக்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக அபிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ஆனந்தராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் விபத்தில் ரியல் எஸ்டேட் தரகர் பலியானார்.
    • கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சிவசங்கர்(வயது59). ரியல் எஸ்டேட் தரகரான இவர் கடந்த 29-ந்தேதி வேலை நிமித்தமாக மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்கு வேலையை முடித்த சிவசங்கர் இரவு ஊருக்கு புறப்பட்டார்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள கள்ளிக்குடி ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் கீழே விழுந்த சிவசங்க ருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம், பக்கத்தி னர் அவரை மீட்டு விருது நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவசங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் ஹரிகரசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாகனம் மோதி மூதாட்டி-முதியவர் பலியானார்.
    • 63691 63622, 94981 80129 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி ரிங்ரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனம் அருகே வாகனம் மோதி அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க பெண் தலையில் காயமடைந்து இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்- இன்ஸ்பெ க்டர் ஞானபிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்தி ற்கு வந்து பெண்ணின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பெண் சிவப்பு வண்ண சேலை அணிந்திருந்தார். இடது பக்க கன்னத்தில் கருப்பு மச்சமும் வலது முழங்காலில் காயத்தளும் இருந்தது. மதுரை காமராஜர் சாலையில் தனியார் வங்கி அருகே வாகனம் மோதி 72 வயது மதிக்கத்தக்க முதியவர் கணுக்காலில் பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் குப்புசாமி என்பது மட்டும் தெரிய வந்தது. அவரது வலது கால் தொடையில் ஒரு கருப்பு மச்சமும், வலது பக்க விலாவில் கருப்பு மச்சமும் இருந்தது. இவர்களை பற்றி தகவல் தெரிய வந்தால் 63691 63622, 94981 80129 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×