search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் வாலிபர் பலி
    X

    விபத்தில் வாலிபர் பலி

    • தேவகோட்டை அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.
    • நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருகே உள்ள நாஞ்சி வயல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால் (வயது34), எலனாப்பட்டியை சேர்ந்தவர் நவீன் (22). இவர்கள் இருவரும் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தனர். அவர்கள் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் கிளியூர் அருகே வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெயபால் வரும் வழியில் இறந்து விட்டார். நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×