என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரி மோதி முதியவர் உடல் நசுங்கி பலி
- அந்த லாரி பாலக்கரை நோக்கி சென்ற போது போது, பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத நபர் மீது லாரி மோதியது.
- , சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
கடலூர்:
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் லோடு ஏற்றி கொண்டு லாரி வந்தது. அப்போது அந்த லாரி பாலக்கரை நோக்கி சென்ற போது போது, பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத நபர் மீது லாரி மோதியது.இதில் கீழே விழுந்த நபர் மீது லாரியின் பின் சக்கரத்தில் மாட்டி, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். அங்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






